Wednesday, May 6, 2009

நான்

இந்த எழுதவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது ?. அது ஒரு உள்ளார்ந்த உந்துதல் என எவனாவது சொன்னா கேட்டுக்கொண்டு விட்டு விடுவேன். எனக்கு அது ஒரு அரிப்பு. எப்பொழுதாவது வரும்.
இப்போ எண்டா வந்துச்சுன்னு கேக்குறீங்களா? அட பயபுள்ளைங்க கல்லூரியில் இரண்டு ஒன்று என கணக்கு சொலாரானுங்க , என்னடா ஒரு நாளைக்கு எத்தன தடவங்க்ற கணக்கா ( அதில் ஆண்டோனி மட்டுமே ஆறு முறை தொட்டு சாதனை புரிந்தவன்) அப்டீனு கேட்டா , அட நம்ம பிரியப்போக இருக்கும் நாட்கள் என சொல்லி கஜக்குஷ்டத்தை தர்ரானுங்க.
பிரியப்போகும் பொழுது ஸ்லாம் புக் எழுத கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் , எவன் எவன் என்ன எழுதரான்னு தெரிஞ்சுக்கலாமேன்னு கொடுத்துடறது. நம்மள எழுத சொன்னா , ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் இடம் இருந்து எதுனா காப்பி அடிச்சு அஜால் குஜாலா எழுதி கொடுத்து விடுகிறேன். கோடிட்ட இடத்தை நிரப்புவது இன்னும் எளிது , டைரியில் தான் கதை அடிக்க வேண்டும்.

இதில் எழுதி கொடுப்பவன் எல்லாம் , நீ இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம் என கதை விடுவது படிப்பதற்கே அருவருப்பாக உள்ளது. நினைவுகள் மட்டுமே எடுத்து செல்ல அந்த எழவு புத்தகம் என நினைத்தால் , ஹ்ம்ம். இதில் பாராட்டுகள் மிகுந்த எரிச்சலை தருகின்றன , எவன் பாராட்டுவதிலும் உண்மை இருப்பதாக தெரியவில்லை. என்னை புத்திசாலி என்று சொல்றவன எதால அடிக்க மக்களே ?


இரண்டாண்டுகளுக்கு முன்பு நட்பு வட்டாரத்தை தவிர ஒன்றுமே நான் அறிந்ததில்லை , நண்பர்கள் கூட்டம் தான் வாழ்கை. இணையம் தலை திருப்பி போட்டது. விட்டு விட்டு வாசித்ததை வைத்து வெத்து சீன் போட்ட என்னை விடாமல் உண்மையாக வாசிக்க வைத்தது . ஈழம் , பாலஸ்தீனம் , லெபனான் , இலக்கியம் , திருக்குறள் , தலித் அரசியல் , மார்க்சீயம் , திராவிட அரசியல் , நாத்திகம் , கில்மா , உலக சினிமா , வரலாறு , பயணக்கட்டுரைகள் , சிறுகதைகள் , ஜெயமோகன் , பா.ரா , எஸ்.ரா , லா.சா.ரா , சாய்நாத், சாம்ஸ்கி , அமிர்த்யா சென் , அதிஷா , லக்கிலுக் , பத்ரி , முகில் , அஜயன்பாலா , மாலன் , ஆர்க்குட் தமிழ்நாடு அரசியல் , ஆர்க்குட் தமிழ் சினிமா , ஆர்க்குட் தமிழ் சினிமா கிசு கிசு , போதாக்குறைக்கு நல்ல கட்டுரைகள் என கிறுக்கு பயல் போல வாசிக்க செய்தது. இதில் விட்டுப்போன விடயங்கள் ஏராளம்.

எல்லாம் உண்மையை சொல்லவேண்டுமானால் , ஆறே மாதங்களில்! பைத்தியம் போல் படித்தேன் , முதலில் சும்மா ஆரம்பித்தது இப்பொழுது ஒரு அட்டிக்ஷன் போல் ஆகி விட்டது. படிச்சு நான் ஒன்னும் பெரிய படிப்பாளி மயிறு என்ற சொல்ல வரவில்லை அதற்கான பதிவும் இதுவில்லை. ஒரு விதமான சுழலில் வேண்டுமென்ற சிக்கி , எழ மறுக்கிறது மனம். முன்பு போல் ஒன்றும் தெரியாமல் இருந்ததை யோசித்தால் , அப்படியே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏன் மாறினேன்? சே!


நக்கல் நய்யாண்டி அறவே குறைந்து போனது , மசாலா படங்களாக பார்த்த என்னை பெரிய அகிரோ குரோசிவா ரசிகன் ரேஞ்சுக்கு பிட்டை போடா வெச்சுட்டானுங்க. சிரித்து நாட்கள் ஆகி விட்டன. எதையும் ஒரு விதமாக ஆழமாக பார்த்து தொலைகிறேன். கூடவே பகுத்தறிவு வேறு. இது எல்லாம் நல்ல விஷயங்கள் என்றாலும் , வயதை மீறி யோசிக்கிறேன் ,வயதிற்கே உண்டான சந்தோஷங்களை இழந்து விட்டேனோ என தோன்றுகிறது. மூன்று வருடங்குளுக்கு முன் என்னை விழாவில் பேசவிடவில்லை என்று வருத்தப்பட்ட பிரகாஷ் இப்பொழுது இல்லை , ஒரு விதமான தனிமை சிறையில் வந்து விட்டது போல் ஒரு உணர்வு. எல்லாத்தையும் தத்துவ ரீதியாக பார்க்கிறேன் பேர்வழி என ஒரு பைத்தியக்கார டாஷாக அலைகிறேன். முதிர்ச்சி ஒரு சாபம் , எனக்கு இல்லை என தெரிந்தவர்கள் சொன்னாலும் , நான் இதை விட குழந்தைத்தனமாக இருந்தவன்.

படிப்பில் கட்டம் கடைசியாக ஆர்வம் வந்தது ( ஷப்பா) , ஏழாவது செமஸ்டரில் திணறிப்போனேன் . ஆர்க்குட்டில் கோபாலன் , மோகன் போன்றோர் படிக்காமல் என்ன மணி ஆட்டி கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு மழுப்பியது தான் மிச்சம். கடைசியில் என்னை நம்பி மேற்படிப்பிற்கு ஒரு scholarship உம் கொடுத்து விட்டார்கள். நான்கு நாடுகள் அல்லது குறைந்தது இரண்டிலிருந்து மூன்று நாடுகள் பிரயாணம் செய்து படிக்க வேண்டும். எனக்கு பிடித்தமான படிப்பு. வெவ்வேறு சூழல் , இந்தியாவிலிருந்து நான் ஒருவன் மட்டும் தான். மத்தவர்கள் மெக்சிகோ , சீனா, துருக்கி , தாய்லாந்து , தைவான் ,இந்தோனேஷியா , ரஷியா ,ஈரான் , சிங்கப்பூர் என வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் . புண்ணியவான் பா.ராவை படித்த பலன் , மெக்சிகோ பெண்ணிடம் " Palace of Justice , M-19 , Escober , Medlin cartel , Coli cartel " என ஒரு வலம் வந்தேன் .


பதிவு எங்கேயோ போகிறது ,சொல்ல வந்த விடயம் நான் நட்பு வட்டாரங்களை தெளிவாக இழந்துவிட்டேன் , கேளிக்கைகளில் பங்கு பெற முடியவில்லை. பெரிய புடுங்கி மாதிரி யோசிக்கறேன். மனோ தத்துவ நிபுணர் என்னை பார்த்து பைத்தியம் ஆகி விடுவார் என அவர் நலன் கருதி இன்னும் நான் போகவில்லை.


என்றாவது ஒரு நாள் மீண்டும் வாரக்கணக்கில் நண்பர்களுடன் கூத்தடிக்க ஆசையாக ஏங்குகிறேன். இப்பொழுது ஒருவாரம் விடுமுறையின் போது கோவா செல்கிறோம்.

6 comments:

Gopalan Ramasubbu said...

Hmmm..I can understand :)

லக்கிலுக் said...

பிரகாஷ்!

ஒரு நாளைக்கு வாசிக்க மட்டும் சில மணி நேரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து விடவும். மற்ற நேரங்களில் உங்கள் இயல்பினை தொலைக்க வேண்டாம். ஜாலியாக மொக்கை படம் பாருங்கள். ஆடுங்கள். கொண்டாடுங்கள்.

Prakash said...
This comment has been removed by the author.
Prakash said...

வாசிப்பின் நேரம் அல்ல லக்கி பிரச்சனை , வாசிப்பினால் ஏற்ப்படும் முதிர்ச்சி. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் , அதற்க்கு நான் தெளிவாக இருக்க வேண்டும்.:D

அது சரி , வலையுலக சூறாவளி , கத்ரினா என் வலைத்தளத்தை எல்லாம் படிக்கிறதா?!

லக்கிலுக் said...

பிரகாஷ்!

நான் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். குழப்பிவிட்டேன்.

உங்களுக்குள் சில ஸ்ப்ளிட் பர்சனாலிட்டிகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமானால் அம்மாவையும், மனைவியையும் சமாளிக்கும் அப்பாவியின் மனோபாவத்தை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதே பிரச்சினை ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. இப்போது நோ ப்ராப்ளம்.

வலையுலக சூறாவளி, பின்னூட்ட கேத்ரினா நேரம் கிடைக்கும் போது எல்லா பதிவர்களின் பதிவுகளையும் படிக்கிறது. பின்னூட்டம் போட விருப்பமிருந்தால் பின்னூட்டமும் போடுகிறது :-)

ஆல் தி பெஸ்ட் ப்ரகாஷ்!

Prakash said...

வாஸ்தவம் தான்! வாழ்த்துகளுக்கு நன்று யுவா :)