Sunday, April 12, 2009

கதை

அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா ? குரல் வைத்து? ஹ்ம்ம் இல்லை , மாறி இருந்தது என் குரல் . உடலில் அந்தந்த வயதிற்கு தேவையான மாற்றங்கள் வந்திருந்தன. ஆனால் அவளை எனக்கு தெரிந்தது , மெலிதான ரோஸ் நிறத்தில் சுடிதார் அதை விட கொஞ்சம் அடர்த்தியான நிறம் கொண்ட துப்பட்டா. உடல் கொஞ்சம் பூசினால் போல் இருந்தது , பருமன் இல்லை. கல்லூரி பேருந்திற்காக நிற்கிறாளா? எந்த கல்லூரியில் படிக்கிறாள் ? .


பல முறை பள்ளயில் அவள் பின்தொடர்ந்து சைக்கிளில் போகும்போது உதிர்த்த புன்னகை நினைவுக்கு வந்தது . பிறந்த நாளில் முதல் முதலில் அவளுக்கே சிறப்பான ஒரு இனிப்பைத்தர நான் காலை எட்டு மணிக்கே பள்ளிக்கு வந்திருந்தேன் . இன்றே சொல்லிவிடலாமா ? இல்லை. வேண்டாம். மனம் அடித்து கொள்ள , அவள் அன்றைக்கென்று பார்த்து இவ்வளவு தாமதமாக வர வேண்டுமா ? நடுவில் இந்த வினோத் வேறு வந்து ஏதேதோ ஜபக்கூட்ட கதைகள் சொல்லி என் தாலி அறுத்தான்.


அடங்கப்பா பள்ளி விடுமுறை என்றால் இவனுங்க அலும்பு தாங்காது , வந்து பாய் போட்டு படுத்து பரிசுத்த ஆவியில் இட்லியை வேக வைப்பார்கள். காலையில் சுப்ரபாதம் கேட்கும்போது வரும் அதே கோபம் , இவர்களின் கூச்சலை கேட்டாலும் வரும் . விற்பனை பொருள் ஒன்று தான் , மதமென்னும் போதை பொருள் .இவன் நீல டப்பாவில் விற்கிறான், அவன் சிகப்பு டப்பாவில் .

அடச்சே!இந்நேரத்துல நமக்கு பெரியாரீயமா முக்கியம் ? வினோத்துடன் பக்கத்துக்கு தெருவில் உள்ள பரிமளாவும் வந்திருந்தாள் . அவளுக்கு என்னவாம் ? பக்கத்துல இருந்துட்டு லேட்டா வந்தா என்னடி கொறஞ்சு போவ ?

அடுத்ததாக அவள் வந்தாள் , அப்புடியே லாவகமாக கண்ணால் பேசி அவளை வெளியில் அழைத்து சென்று விடலாம் தான். முன்ன பின்ன அதுக்கு அவளிடம் பழகி இருக்க வேண்டுமே . போன பிறந்தநாளில் பார்த்தது , இது இரண்டாம் ஆண்டு. இருந்தாலும் தைரியத்துடன் அவள் வெளியில் தனியாக நிற்கும்போது கொடுத்தேன்.

சிரித்துக்கொண்டே வாங்கினாள் , சொல்லிவிடலாம் , இதை விட்டால் தருணம் இல்லை .கை விரலை பற்றலாமா , தவறில்லை பக்கத்தில் சென்றேன் , சனியன் புடிச்ச கணக்கு வந்தான். காதலே போச்சு . கடைசியில் அவள் எங்கோ நான் எங்கோ !அவ்வபொழுது நலம் விசாரிப்பேன் , நண்பர்களிடம்.

ஆஹா கதைய எங்கே விட்டேன் பேருந்து நிலையத்திலா , மீண்டு ஒருமுறை காதல் கதை எழுதும் முயற்ச்சியில் தோல்வி ! பிரகாஷா , நீ தேரமட்டடா ! எப்பொழுதும் தாளை கிழித்து விடுவேன் . இந்த விஞ்ஞான வளர்ச்சியான ப்ளாகை படிப்பவன் தான் நொந்து கொள்ள வேண்டும்

No comments: