Sunday, February 8, 2009

வெண்ணிலா கபடி குழு

போன வெள்ளிகிழமை நானும் ஆனந்தும் கிளம்பினோம் இந்த படத்துக்கு , அதற்குள் இந்த சோம்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக ஏதோ மென்பொருள் தரவிறக்கம் செய்து தர சொல்லியதால் போக இயலவில்லை . இந்த ஒரு வாரம் படு வெட்டியாக போனது , என்னுடன் என் ஆர்குட் தோழன் திருவாளர் " All time vetti" நாகபூஷன் அவ்வபோது புது படங்களை பற்றி அதி உன்னத ஆங்கிலத்தில் கதைத்து கொண்டிருப்பான் . மத்தபடி அவனைவிட நான் படு வெட்டி. :D


ஞாயிறு மாலை முழித்தவுடன் ( மதியம் தூக்கம் தான் ) நம்ம பேரானந்துக்கு ஒரு காலை போட்டேன் . வண்டி நேராக சுண்டல்கடை நின்றபிறகு சிவத்தில் போய் நின்றது. முதலில் சுமாரான கூட்டம் பின்பு மிக நல்ல கூட்டம் வர படம் தொடங்கியது .


இந்த படத்தின் பெயர் தட்டே மிக வித்யாசமானது , முதல் முறையாக Dog trainer , Focus mover , Light men , என திரைக்கு பின்னால் இருந்த அத்தனை உழைப்பிற்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள் .


கதைக்களம் அவ்வளவு விசாலமானது அல்ல . ஆனால் முதலிலேயே சில வலிகள் பதிவு செய்ய பட்டுவிடுகின்றன. தந்தையை இழந்துவிட்டு பண்ணை வேலை செய்யும் மகன் , கபடி ஆடபோகும் அவனை தண்டிக்கும் பண்ணையார் என கிளியின் சிறகை அறுத்து எரியும் காட்சிகளில் ஆழமாக வலிகள் பதிவு செய்யபட்டிருக்கலாம் . ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு . காமெரா கண்கள் கிராமத்தின் எந்த அழகையும் விடவில்லை . காதல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் , சில குட்டி ஹைக்கூ போன்ற காட்சிகளால் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்தின் மாபெரும் பலம் இசை/பின்னணி இசை . ஒரு காட்சியில் கதாநாயகன் நாயகியை துரத்தி செல்கிறார் , அவ்வளவு எழில் கொஞ்சும் பின்னணி இசை , அது இல்லாவிடில் காட்சி அம்பேல் தான் . லேசா பறக்கிறது பாடல் அருமையான மெலடி , கண்கள் இரண்டால் போல் கமர்ஷியலாக்காமல் இருக்க வேண்டுமே .

கபடி குழுவில் ஒவ்வொருவர் கதாபாத்திரமும் " Well defined " ஆக உள்ளது . புது மாபிள்ளை , டி கடை கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனி ராகம் . ஆரம்பத்தில் இருந்து தோற்கும் ஒரு அணியை கிஷோரின் வருகை மாற்றுகிறது . உள்ளூர் கபடி அணியில் வாய் சண்டை , காதலி பிரிதல் என மிக மெதுவாக போகும் படம் இடைவேளைக்கு பிறகு படு ஸ்பீட் .


ஆமாம் , அந்த இடைவேளையின் பின் வரும் ரெண்டு அழகான பாடல்களும் இடை செருகல்கள் போல அமைந்து விட்டதை ஏன் இயக்குனர் கவனிக்கவில்லை ? . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு ! இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ ? .
மொத்தத்தில் அசல் கிராமத்தை பார்த்து , புதிய அப்பழுக்கற்ற காற்றை சுவாசித்த உணர்வு . ஏன் என்றால் படத்தை முடித்து ஆனந்த் செலவில் சரஸ்வதி மெஸ்ஸில் உக்காரும் பொழுது "குத்து" படம் பார்த்தேன் .நிம்மதி பெரு மூச்சு நமக்கு வேண்டியது " வெண்ணிலா கபடி குழுக்கள் தான் "

Wednesday, February 4, 2009

Dalits and the 'touch' politics.

Links :
Atrocties meted out on dalits : A collection by myslelf.

Missing dalit and an indifferent CM in haryana : http://www.hinduonnet.com/fline/fl2101/stories/20040116002703700.htm

Khairlanji Massacre...http://flonnet.com/stories/20061201004713000.htm


In North India, some of the worst crimes against Dalits are still being committed by upper caste Brahmins. http://wcar.alrc.net/mainfile2.php/Urgent+Appeals/49/

Official statistics on increasing atrocities : http://www.nacdor.org/TEXT%20FILES/Atrocities.htm

Labour MPs move against 'atrocities' on Dalits : http://www.hinduonnet.com/thehindu/2003/06/08/stories/2003060804800800.htm


‘Atrocities on Dalits continuing’ -In a statement on the eve of World Human Rights Day, Mr. Srinivas said in the last five years, 205 Dalits were murdered, 537 Dalit women were molested and Dalits were attacked in 2,369 incidents.http://www.thehindu.com/2008/12/10/stories/2008121053640300.htm

Anatomy of Atrocities on Dalits in Haryanaby Ranbir Singh, 3 September 2008http://www.mainstreamweekly.net/article899.html