Friday, June 11, 2010

பிட்டோகோரஸ் தியரம்


சரியாக நினைவு இருக்கிறது , நான் பத்தாம் கிளாசில் தான் பிட்டு முதல் வாதத்தை கடைபிடித்தேன்.இந்த பொருள் முதல்/கருத்து முதல் வாதம் போல் பிட்டு முதல் வாதம் கஷ்டமில்லை.எளிதாக புரியும் மொழி நடையில் நாமளே எழுதிக்கொள்வது தான் பிட்.

நான் பத்தாம் கிளாசில் எல்லாம் அம்புட்டு தைரிய சாலி இல்லை ( இன்றளவிலும் இல்லை தான்) ஆனால் எங்களுக்கு வழக்கமாக எடுக்கும் புவியியல் ஆசிரியை நீண்ட விடுப்பு எடுத்து விட்டார் , அவருக்கு பதில் படு திராபையாக எடுக்கும் ஒரு ஆசிரியை வந்தார்.அந்த மாடெல் பரீட்சையில் ஒரு எழவும் தெரியவில்லை.அப்பொழுது மைக்ரோ செராக்ஸ் , சின்ன பிட் எல்லாம் என் பள்ளியில் அம்புட்ட்டு பிரசித்தி இல்லை.நண்பன் ஒருவன் ஓம் , பிள்ளையார் சுழி எல்லாம் போடு பெரிய நோட்டில் இருந்து கிழித்து பிட் எழுதி கொண்டுவந்திருந்தான்.எல்லாரும் எழுதி முடித்த பிறகே எனக்கு கொடுத்தார்கள் அதை.எனக்கு எழுத நேரமில்லை , அதை அப்படியே கட்டி பேப்பருடன் கொடுத்திவிட்டேன். டின் கட்டிவிட்டார்கள்.

ஆனால் நணபன் ஒருவன் படு நேர்த்தியாக பத்தாம் கிளாசிலேயே பிட் அடிப்பான். வரலாற்று பாடத்தில் ஒவ்வொரு பிட்டையும் ஒவ்வொரு இடத்தில் வைப்பான்.இடம் மறந்து விட்டால்? எந்தெந்த பிட் எங்கெங்கு உள்ளது என்பதற்க்கே ஒரு பிட் எழுதுவான்.அது எங்கே இருக்கும் என்னும் செய்தியை கையில் எழுதிக்கொள்வான். இப்படியாக உலகப்போரை உள்ளாடைக்குள் வைத்த புகழ் அவனையே சாரும்.

அதன் பிறகு நான் +1,+2 ஒரு ஜெயிலில் படித்தேன் அங்கே இதுக்கெல்லாம் கசையடியில் இருந்து அனைத்து அநாகரீக தண்டனைகளும் உண்டு.அதற்கு பயந்தே அடிக்கவில்லை.

என் கல்லூரியில் ஜீவிக்க ,காற்று , நீர் , சாப்படு , தங்குமிடம் போல் பிட் அடிப்பது ஒரு இன்றியமையாத விஷயம்.முன்னாடி இருந்தவர்களி பற்றி தெரியாது , ஆனால் நான் படித்த 4 ஆண்டுகளில் எனக்கு தெரிந்து ஒரு வகுப்பில் ஒன்றிருவரை தவிர அனைவரும் அடிப்பார்கள் என்றே சொல்லலாம்.

பல நேரங்களில் வகுப்பில் அனைவருமே ஒரே பதில் எழுதி ஆசிரியரை மண்டை காய வைத்திருக்கிறோம்.நம்க்கு தெரிந்த பதிலை கேள்விதாளில் எழுதி விடலாம் , அடுத்தவனிடம் அவனுக்கு தெரிந்ததை எழுதசொல்லி மாற்றிக்கொள்ளலாம்.பிட் பேப்பரை பார்த்து சந்தேகப்படுகிறார்களா? முந்தய கேள்விதாளில் பிட் எழுதி ,அதை எடுத்துக்கொண்டு போய் விடலாம். பார்ப்பவர்கள் நாம் கேள்வித்தாளில் விடை எழுதி பழகியதாக நினைப்பார்கள்..கொஞ்சம் படித்து கொஞ்சம் பிட் எழுதுதல் நலம். இல்லாவிடின் காலை பரீட்சைக்கு மதியத்தில் எழுத வேண்டிய பதிலை எழுதும் அபாயம் உள்ளது.

நிற்க.

பிட் அடிப்பது சரியா தவறா? இது அறிவு திருட்டு இல்லையா? நம்மிடம் இல்லாத அறிவை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு நேர்மையற்ற செயல் தான்.இந்த கேள்விக்கு என்னிடம் விடையே இல்லை. இங்கே நான் முதுகலையில் பல திறந்த புத்தகம் பரீட்சைகளை எதிர்க்கொள்கிறேன்.பார்த்து எழுதவது என்னும் தேவையே இங்கே இல்லை.இந்திய கல்விமுறையில் அப்படியா என்ற கேள்விக்கு பொதுவான விடை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.ஆனால் என் கல்லூரியை வைத்து என்னால் தீர்க்கமாகவே பேச முடியும்.ஒரு ஐம்பது எண்களை கொடுத்து இந்த கனிமத்துக்கு இந்த எழவு குனம் இதை மொன்னைத்தனமாக மனப்பாடம் செய் இதை இப்படியே எழுது போன்ற கேள்விகள் உலக நாடுகளில் எங்கேனும் கேட்கப்படுகிறதா என தெரியவில்லை.பெரும்பாலுமான சூத்திரங்கள் பெரியது , சமன்பாடுகள் பல்லை உடைக்க கூடியது நடக்கும் தொழில்நுட்பங்கள் தேர்ந்த அனுபவத்தால் மட்டுமே மனதில் நிற்க கூடியது , இதை அனைத்தயும் நினைவில் நிறுத்து பின் வாந்தியெடு என்னும் அதிகாரத்தனமான கேள்விகள் கல்விமுறையை அதள பாதாள்த்துக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டுவை.

அறிவு நேர்மை இருப்பது அவசியம்.அதனினும் அவசியம் அதை உருவாக்கும் கல்வி முறை என்று நினைக்கிறேன்.இதை நான் முடிவாகவோ நியாயப்படுத்தவோ எல்லாம் சொல்லவில்லை.இப்படியான பாடத்திட்டம் இருக்கும்வறை இது ஏதோ ஒரு வழியில் நடக்கும். மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்பது போல் ஒரு சூழலில் எல்லாரையும் தள்ளிவிட்டு தப்புசெய்யதூண்டும் ஒரு விஷயத்தை மறுபரிசீலனையாவது செய்ய வேண்டும்.

Wednesday, June 9, 2010

குறுமலாப்பேரி கிரிக்கெட் டீம்

அன்றைக்கு என்று பார்த்து உச்சி வெயில் மண்டையை பிளந்தது என்று சொன்னால் அது பொய்யாகிவிடும் ,என்றைக்கும் போல் அன்றைக்கும்.ஆனால் குறுமலாப்பேரியில் காற்றுக்கு பஞ்சமே கிடையாது.சில்லென்று முகத்தில் அடிக்கும் , மூட்டையை சைக்கிளில் கொண்டு வரும் காளி அண்ணன் இதுக்கென்றே சில நேரம் எதிர் காற்றில் கூட வண்டி ஓட்டுவதுண்டு.

காத்து தெக்க பாத்து தாம்ல அடிக்கு , அப்ப்றம் ஏன் ஸ்டிக்க அங்குன கொண்டு போய் நடுத? என்ற கூப்பாடோடு வந்தார் அண்ணன் குமார் , கேப்டன் குமார் , கடுதக் குமார்.கடுதக் என்றால் என்ன என்று இன்றளவும் யாருக்கும் தெரியாது .

எலே செத்த மூதி சாரம் கட்டி ஆட வராதன்னு எத்தனை தடவைல சொல்ல , நாளைக்கு மேட்சாட வரலையோ டே? என்றான் விக்கட் கீப்பர் பிரியன்.

சாரம் கட்டி தானடே கீழப்பாவூர்ல மணியன்னே பேட்டிங் புடிச்சாப்புல , அவுக கப் வைக்காங்கன்னா அவுக மட்டும் சாரம் கட்டி ஆடலாமோ , பிராக்டிஸ் தாண்டே இது.ஸ்டிக்க நட்டாச்சு டீம் பிரிங்கடே.

டீம் பிரிப்பது அசாதாரனமான விஷயம்.அங்கே இருப்பவர்களில் இரண்டு சிறுசுகளைதான் எப்பொழுது பிரிக்க சொல்வார்கள்.இரண்டு பேரும் முதலிலேயே காட்டானை எடுக்க துடிப்பார்கள்.காட்டான் சூப்பர் ஃபாஸ்ட் குறுமலாப்பேரி எக்ஸ்பிரஸ்.பந்தை பள்ளிக்கூட கிரவுண்டில் தூக்கி அடித்து தொலைத்த ஒரே ஜந்து அவன் தான்.அதன் பிறகு மணி , முப்பிடாதி , சசி , சோலை , மருது , வெள்ளைச்சாமி , வேல்ப்பாண்டி,இப்படி கடைசியில் குமார்.குமாருக்கு பேட்டிங் வராது , பவுலிங்க சுத்தம்.இது வரை ச்லிப் கேட்ச் மட்டும் அவர் எடுத்ததில்லை , சிலிப்பை தவிர எங்குமே நிக்க மாட்டார் உருவம் அப்படி.கேப்டன் எப்படி? ஏனென்றால் பார்ட்டி டப்பு பார்ட்டி. கப் நடத்த , நுழைவுக்கட்டனம் கட்ட ,ஸ்டிக் வாங்க , பேட் வாங்க , வாட்டர் பாக்கெட் வாங்க , குச்சி ஐஸ் வாங்க எல்லாவற்றுக்கும் அந்த ஊரில் காசு கேட்டார்கள்.குமாரிடம் இருந்தது.

நாளை நடக்கப்போகும் செமியில் தான் குறுமலாப்பேரி வெர்ஸஸ் கீழப்புலியூர்.இன்னொரு செமியில் மேலப்பாவூர்/சுரண்டை.எப்பொழுதுமே கப் நடத்துபவர்கள் ஃபைனல்ஸ் வருவார்கள்.ஆக செமியில் ஜெயித்து வருபவர்கள் கண்டிப்பாக திரும்பி தங்களுக்குள் மோதிக்கொள்ள் வேண்டும்.அப்போ என்ன எழவுக்கு செமின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்கப்புடாது!

ஏ பந்த தேடுறே , எவ்வளவு நேரம் அங்கனையே நிப்ப , இது சசி.

ஏல் நொட்டி , பேசுதேல்ல , ரப்பர் செருப்புதாம்ல போட்டிருக்கேன் அடிச்சேல்ல , வந்து எடுத்துக்குடு என்றான் முப்பிடாதி.

அன்று ஒருவழியாக இருந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக தொலைத்து விட்டதாலும் , பாலாஜி அண்ணன் கடையில் இதுக்குமேல் ரப்பர் பந்து இல்லாததாலும் ஆட்டை நின்று போனது.செமி போவதர்க்குண்டான ஸ்ட்ராடஜி பேச்சுக்கள் ஆரம்பமானது.

ஏ காட்டான் அன்னிக்கு மாதிரி விசுறாதே டே விக்கெட் வேனும் , நீ எல்லா பந்தையும் வெளிய அடிக்க பார்த்தேன்னா அப்பறம் ஸ்டிக் புட்டுக்கும்.அன்னிக்கி புட்டுக்குச்சு பார்த்தீயளா சத்திரம் புவலிங்கில ஹா ஹா என்று கடியில் இருந்த காட்டானுக்கு வெறியேத்தினான் வேல்ப்பாண்டி.

ஏல் அவன் எறிஞ்சாண்ட்டே சத்தியமா சொல்லுதேன் , நீ அம்பயர் அண்ணன் கிட்ட வேனும்னாலும் கேட்டுப்பாரு , அன்னிக்கு காலேஜ் படிக்கில்லா சங்கர் அண்ணே அதான் நின்னுச்சு.

கடுதக் , புரோட்டா கடை தொரந்திருக்கோடே? என்றான் வெள்ளை. நீ காசு வெச்சிருந்தா தொரந்திருக்கும்டே என்று இன்று கடுதக்கிடமிருந்து உஷார் பதில் வந்தது. பல வயிறை புரோட்டா போட்டு நிறப்பிய வள்ளலவர்.

ஏ ஒன்னும்மில்லடே புலியூர்ல மணி , சிங்கமுத்து , தொரை ,மாடு நாலு பேர் விக்கட் எடுத்துட்டா போதும் என்று சசி சொல்லிமுடிப்பதற்குள் வேல் கத்த ஆரம்பித்தான் , ஏல் மாடு என்ன விளையாடினான்? போன கப்புல எல்லாம் கீப்பர் கேட்ச் , அம்சமா எடுக்கலாம்டே நிக்க வெச்சு. ஏல் காட்டன் ஆஃப்ல நாலு பந்தாவது போடு ஃபர்ஸ்ட் ஓவர் எல்லாமே காலுக்குள்ள எறக்க பாக்காத.

ஏ மணி , கிட்ட வந்தி நில்லுடே , சிரிலங்கால எல்லாம் நிப்பாங்க தெரியுமா பாஸ்ட்ட்கே நிப்பாய்ங்கடே.


ஏல் அவன் எம்புட்டு ஏறியுதான் தெரியுமா? கீப்பிங்க் நிக்கியா நீ? பேசனும்னு பேசாத , ரப்பர் பந்துனாலும் பட்டா வலிக்காதோல உனக்கு?

சரிடே நான் சிலிப் நிக்கேன் இந்த வாட்டி , போன வாட்டியே குமார் அண்ணே மூனு காட்ச் மிஸ் பன்னிட்டாப்புல என்றான் முப்பிடாதி.

முப்பிடாதி , நீ கேட்சே விட்டதில்லயோ டே? ராஜா பவுலிங்கில லாங்குல விட்டியே டே போன ஃபைனல்சுல

கடுதக் , ராஜா போன ஃபைனல் விளையாடவே இல்லை என்று மேலும் வெந்த புல்லில் ஆசிட்டை ஊற்றினான் முப்பிடாதி.சிறிது நேரம் மவுனம்.குமாருக்கு கோபமோ என்று உள்ளூர வெள்ளைக்கு பயம் , புரோட்டாக்கு பங்கம் விளைவித்த முப்பிடாதியை கருவிக்கொண்டான்.காட்டான் மவுனத்தை கலைத்தான்.

கொடுக்கமாட்டாங்கடே கீழப்பாவூர் காரைங்க அவ்வ்ளவு சீக்கரம் கீப்பர் கேட்ச் ,அம்பயரிங்கிலையே நம்ம்ள தொரத்த பாப்பய்ங்க.நம்ம ஃபைனல் வந்தா டஃப் அவங்களுக்கு.

சுத்தி இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்தது.சரி இருந்தாலும் காட்டான் மனசு நோக வேண்டாமே என்று விழுந்து விழ்ந்து சிரித்தார்கள்.

டேய் என்னடே குறைச்சல் சொல்லுடே ஒருத்தன் சொல்லுடே , ம்ம் ஹ்ம்ம் சிரிப்பொலி நிக்க வேண்டுமே

Saturday, June 5, 2010

பிராஹாவில் கோயிஞ்சாமி


உங்களில் யார் செய்த பாவமோ எனக்கு எழுத நேரம் கிடைத்திருக்கிறது.

வார்சாவில் நிறைய விடுமுறை நாட்கள் உண்டு.அது போக நான் கல்லூரி இருக்கும் திசைக்கு மாற்று திசையில் தான் இந்த ஆறு மாதம் தலையனையை வைத்து படுத்தேன்.மே மாத விடுமுறையில் ( அது என்ன மே மாத விடுமுறை? அதெல்லாம் தெரியாது , விடுமுறை அய்யா) என் வகுப்பில் எட்டு பேர் செக் நாடுக்கு செல்வது என முடிவானது , நான்கு ஆண்கள்.மிச்சம் நான்கு பெண்கள்.விகிதாச்சாரம் தானாக மட்டுமே அமைந்தது!

போகும் பொழுது ஒரு பாதி வித் அவுட்டில் போனோம் , வண்டியில் இருக்க இடம் உண்டு ஆனால் அமர அல்ல.முதலில் பப்பரப்பே என்று உக்காந்தாச்சு. பிறகு டிக்கட் வாங்கிய ஒருவர் மாத்தி ஒருவராக வந்து எழுப்பிவிட ஆரம்பித்தனர்.கடைசியில் இரண்டு இருக்கையில் ஐந்து பேர் சமாளித்து போலந்தில் எல்லை வரை வந்து விட்டோம்.ரயிலில் நகர இடமில்லை.கடைசியில் போலந்து எல்லையில் இருந்து செக் தலைநகர் ப்ராஹாவிர்க்கு வேறு ரயிலில் தாவிக்கொண்டு போனோம்.


உண்மையில் பிராஹா எழில் கொஞ்சும் நகரம்.முதலில் நாங்கள் போனது பிராஹா கோட்டைக்கு , உலகிலேயே மிகப்பெரிய கோட்டையாம்.பசி வயிற்றை கிள்ளியதால் அதை அடுத்த நாளுக்கு வைத்துவிட்டு வந்துவிட்டோம்.மதியம் பழைய நகரம் , புதிய நகரம் என்று அனைத்து இடத்தையும் சுத்தி காட்ட ஒரு கைட் கிடைத்தார் , இலவசமாக! பிரித்தானிய ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவமாடியது.வரலாறு , கலை , இலக்கியம் என அனைத்தையும் பிரித்து மேய்ந்தார்.

அவர் சொன்னதில் இரண்டு முக்கியமாக பட்டது , ஒன்று வென்செலாஸ் சதுரம் இன்னொன்று யூத கல்லறைகள்.வென்செலாஸ் சதுரத்துக்கு ஒரு வரலாறு உண்டு.1969இல் ஜான் பலாக்ஸ் என்னும் மாணவர் நம் முத்துக்குமார் போல் தன்னையே தீக்கு இரையாக்கினாராம்!

1968க்கு பிறகு டூப்செக் செக் குடியரசுத்தலைவராக இருந்த காலம் பிராஹாவின் வசந்தமாம். அவர் குடிமக்களுக்கும் , பத்திரிக்கையாளர்களுக்கு பல சுதந்திரம் அளிக்க ஆரம்பித்தார்.இன்னும் பத்து ஆண்டுகளில் கம்மியூனிச ஆட்சி முறையில் இருந்து விலகி ஒரு முழு ஜனநாயகத்தை நோக்கி நகர்வோம் என்னும் பிரகடனம் வைத்தார்.நாட்டு மக்களிடம் மிக நல்ல வரவேற்பு இருந்தது.சேதி தெரிந்த உடன் சோவியத்திலிருந்து டேங்க்குக்ள் உருள ஆரம்பித்து விட்டதாம்! இதை எதிர்த்து தான் அறவழி போராட்டத்தில் ஜான் பலக்ஸ் மற்றும் ஜான் சஜிக் என்னும் இரண்டு மாணவர்க்ள் தங்களையே சாம்பலாக்கிக்கொண்டனர்.

அதன் பிறகு சார்லஸ் பிரிட்ஜ் மற்றும் பல இடங்களில் நான் தன்னந்தனியாக சுத்தி திறிந்தேன். ஒருவர் வித்தியாசமான வாசிப்பு கருவியில் உலகத்தர இசையை கொடுத்து கொண்டிருந்தார் , மற்றொரு பக்கம் நம்மூர் பொம்மலாட்டம் போல் ஒரு கலை.அதையும் ரசித்து கண்டுகளித்து விட்டு வீடு திரும்பினேன்.அடுத்த நாள் எல்லோரும் கோட்டை போக அடம் பிடித்தார்கள் ,அந்த புன்னியவான் கோட்டையை எஙகயோ உச்சியில கட்டி வெச்சிருக்கான் , எனக்கு ஏறுவதர்க்குள் டவுசர் கழண்டுவிட்டது.நண்பன் ஒருவன் மட்டுமே ஒரு மூச்சில் ஏறினான்.அட என்று அடுத்ததாக நான் ஏறி பக்கத்தில் போனால் கைத்தாங்கலாக் புடியேன் என்றான் , சரி அவனும் தான் எவ்வள்வு நேரம் வலிக்காத மாதிரியே நடிப்பான்.

ஒரு தெரு முழுவதும் ஷாப்பிங்கிற்கென ஒதுக்கியிருந்தார்கள் , செதேன் தொலைந்தேன் என்று வேறு இடம் ஓட ஆரம்பித்தேன்.அங்கே நின்றவர்கள் கடைசியாக கொடுத்த ஆய்வறிக்கைப்படி அங்கே மட்டுமே நான்கு மணி நேரமாம்.முந்தய தினம் யூத கல்லறைகள் பற்றி கேள்விபட்டபடியால் அங்கே போக நினைத்து வழிகண்டுகொண்டு போனேன்.ஒரு சுவர் அது முழுக்க நுனுக்கி நுனுக்கி எழுதபட்ட பெயர்கள் சுவரையே பல நூறு பெயர்கள் மறைத்தன. இது போல் பல சுவர்கள் ,இரண்டு அறை முழுவதும்! அனைத்தும் நாஜிக்க்ள் படுகொலை செய்யபட்ட யூதர்களின் பெயர்கள்.

நாஜி வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கபட்டிருந்தது.ஒவ்வொன்றிலும் ஒரு வித செய்தி , வெறுமை. பெரும்பாலான குழந்தைகள் மனபிறழ்வு உடையவர்களாம். அங்கே ஒரு குழந்தை ”ஷவர்” காட்சியை ஓவியமாக்கியிருந்தது , அது என்ன என்று "Life is beautiful" படம் பார்த்தவர்களுக்கு தெரியும் .இதயம் கணக்க வெளியேறினேன்.


அடுத்து செஸ்கி குர்ம்யோவ் என்ற சின்ன நகரத்துக்கு பயணமானோம்.அநியாயத்துக்கு அழகு , ட்ரெட்லின்க் என்று ஒரு செக் உணவு வைக உண்டு , ரசித்து அனைவரும் சாப்பிட்டோம்.இது போக எனக்கு கோடுலிச் என்று ஒரு வகை பிரட்டும் மிகவும் பிடித்திருந்தது.நதிக்கரையோரம் அந்த கால செக் உணவு வகைகள் கொடுக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம்.சைவமே ஆனாலும் மிக வித்தியாசமான ருசி.க்ரும்யோவின் அழகு எளிதில் வார்த்தைகளில் சொல்ல முடியாது ,பல வயதான கொரிய சீன தம்பதிகளை பார்த்தேன்.சில முக்கியமான புத்துகங்கள் வாங்கினேன்.ஃப்ரான்ஸ் கஃப்காவின் சிலையை அங்கே பார்த்தும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விபட்டிருந்தும் அவர் புத்தகம் எதுவும் வாங்கவில்லை.

வெளியேறிய பொழுது ஜான் சாஜிக்கின் வாசகம் ஒன்றை காண நேர்ந்தது

But I want a lot for you, for everyone, so I have to pay a lot. Do not lose your heart after my sacrifice, tell Jacek to study harder and Marta too. You must never accept injustice, be it in any form, my death will bind you. I am sorry that I will never see you or that, which I loved so much. Please forgive me that I fought with you so much. Do not let them make me a madman.

Say hi to the boys, the river and the forest