Thursday, May 28, 2009

Some FAQ's

மாப்ள எப்டி டா இருக்க ? : எதோ டா...

என்ன பண்ற ? : காஞ்சு போய் கெடக்கறேன்.

கம்பனி செமையா இருக்கு டா : ம்ம் ...

பிகுருங்க எல்லாம் அநியாயம் : சரி டா , கடிப்ப்--- ஏத்தாத

என்ன தாண்டா மாப்ள பண்ற ? : வெட்டியா இருக்கேன்.

எல்லா நேரமமுமா ? : ஆமாம் , நீ இங்க இருந்தப்போ என்ன நொட்டிகிட்டு இருந்த ?

கோபப்படாத , என்ன பண்ற? : எப்போ பார்த்தாலும் ஆன்லைன் தான்.

அப்பறம் ?: சாப்படறேன்-தூங்கறேன் மறுபடி தூங்கறேன்-சாப்படறேன். நடுல எதுனா புக் படிப்பேன். படம் பாக்கறது இல்லை.

ஏன் டா ? : தலைவலிக்குது பார்த்தா.

எப்போ டா மாப்ள ரிசல்ட் : ஜூன் முதல் வாரம் டா.

மார்க் சீட் எப்போ கொடுப்பானுங்க ? : தெரியல , சீக்கரம் கெடைக்கணும்.


Technical FAQ's for relations :

என்னப்பா , காலேஜு முடிச்சுட்ட போல : ஆமாங்க

வேலை கெடச்சது அப்டீனு அப்பா சொன்னாரே : உண்மை தான் சார் !

போகல ? : இல்லை ! வெளிநாட்டுல படிக்க வாய்ப்பு கெடச்சிருக்கு.

எங்க ? என்ன படிப்பு? : பிரான்ஸ். படிப்பு பெயர் " Materials for energy storage and conversion" இரண்டு வருஷம்.

ஏதுப்பா உங்கப்பா இவ்வளவு சேர்த்து வெச்சிருக்கார்? : படிக்க , தங்க , தூங்க , சாப்பட அவங்களே காசு கொடுக்கிறாங்க.

போக காசு : அது கூட நாம போடலேன்னா எப்புடி ?

எதோ வசதி இருக்கு போற : ( டேய் தகரடப்பா மண்டையா ) , இல்லங்க பெருசா இல்லை. ஒரு ஒருலட்சம் இன்னும் கொஞ்சம் கூட இருந்தா போலாம். அப்பா லோன் போட்ட்ருக்கார்.

ஹ்ம்ம் இந்த காலத்துல எங்கயும் வேலை கெடைக்காது அங்க எப்புடி? :
அங்க போனா தான் தெரியும். ஆமாம் , சாப்டீங்களா? இல்லைனா அத பண்ணுங்க மொதல்ல. (நர நர நர )

For Seniors :

மச்சி என்ன பண்ற ? : சும்மார்க்கேன் மச்சி

கலக்கு த்தா பி.டெக் முடிச்சுட்ட போல : ஆமாம் டா , ஒரு வழியா.

எங்க டா போனீங்க எல்லாரும் கடைசியா : கோவா , ஊட்டி ,பிளாக் தண்டேர் டா மாப்ள .

போடு , போடோ எங்கடா ? : நான் எதுமே எடுக்கல , கரடி அப்பறம் கிருஷ்ணா வெச்சிருக்கான்.

என்ன அடுத்து , பிளேஸ் ஆணியா ? : ஆனேன்டா , CTS ல

ஆகலைன்னு சொல்லிட்டு போயேன் , எதுனா univ கெடைச்சுதா : கெடச்சுது டா , பிரான்ஸ்.

என்ன டா வித்யாசமா போற : இல்லடா , பிரேம் போய் இருக்கான்.
ஒவ்வொரு செமஸ்டரும் ஒவ்வொரு நாட்டுல.பிரான்ஸ் , போலந்து , அப்பறம் ஸ்பெயின்.

எப்படா ரிசர்ச் பண்ணுவ அப்போ ? : நாலாவது செமஸ்டர்ல டா . ஒரு நாப்பது ப்ராஜெக்ட் கொடுத்து ஒன்னு எடுத்துக்க சொல்வாங்க. நம்ம CECRI மாதிரி தான். ரேங்க் பேசிஸ்.

போடு , எப்போ கெளம்பற ? : செப்டம்பர்.

விசா? : வேல நடந்துக்கிட்டே இருக்கு டா.



இதுபோக இன்னபிறர் ( தாளத்தோட தந்தையார் , தாயார் யாராது இருந்தீங்கன்னா) , இதை படிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நான் படு வெட்டியாக இருப்பது உண்மை தான். அதற்காக வெந்த புண்ணில் , வேல் கம்பை விட வேண்டாமென்று உங்களிடம் மன்றாடுகிறேன்.


எரிச்சலுடன் ,
பிரகாஷ்

Wednesday, May 20, 2009

The 3 mistakes of my life - புத்தக விமர்சனம்


கோவாவில் மடுகானில் ,ரயில் வருவதற்கு சிறிது நேரம் முன் நானும் கிருஷ்ணாவும் புத்தக வேட்டையில் இறங்கினோம். என் கண்ணுக்கு இந்த புத்தகம் பட்டது ஏற்கனவே அவினாஷ் இதை படிக்க சொல்லியிருந்தான். விலை 95 தான் வாங்கி வைத்து அந்த மொக்கை ரயிலில் ஏறினேன். அங்கே உட்காரவே இடமில்லை , ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்தபோதிலும்.


மங்களூரில் நான்கு மணி நேர காத்திருப்பு , புத்தகத்தை திறந்தேன். அனைவரும் அசந்து தூங்க , ராப்பாடியாக கிருக்குபயல் போல் படித்த என் தலையில் பைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பு விழுந்தது.
மதம் , அரசியல் , கிரிக்கட் கொஞ்சம் காதல் + அருமையான கில்மா ( மஞ்சு பாதி புத்தகத்தை படித்தது விட்டு " மச்சி செம மூட் டா " என்றான் ) கலந்தால் இந்த புத்தகம். மைய கருத்துக்கு மெதுவாக வரலாம் , ஆனால் புத்தகத்தில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய உள்ளார்ந்த கருத்து ஒன்றுமில்லை , ஆனால் படிக்க படிக்க ஹெராயின் அடித்தாற்போல் ஒரு போதை. பக்கத்துக்கு பக்கம் சுவாரசியம். ஒரு மசாலா பாலிவூட் படத்திற்கும் இப்புதகத்திற்க்கும் எள்ளளவு வேறுபாடு இல்லை.


தனது வாசகர் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் அனுப்ப சேட்டன் அவர் கதையை பின்பு புத்தகமாக எழுதி அவரையும் காப்பாற்றுவதாக கதை. இந்த கற்பனையை உண்மை போல் எழுவது எல்லாம் நாங்க " ஜே ஜே சில குறிப்புகளிலேயே பார்த்தாகி விட்டது. ஆக சேட்டனை " தண்ணிய குடி தண்ணிய குடி " என்று தான் சொல்ல தோன்றியது .


மூன்று நபர்கள் மன்னிக்கவும் மூன்று நண்பர்கள் , ஓமி-இஷ்-கோவிந்து இவர்களை சுற்றி வருவது தான் புத்தகம்.


ஓமி- கோவிலில் வேலைபார்ப்பவன் , உடலை கட்டுமஸ்தாக வைத்து அவன் மாமா பிட்டூவின் பேச்சை கேட்டு இந்துத்வாவில் ஈர்க்கப்பட்டவன் .


இஷ் - தனது இடத்தில் மிக சிறந்த கிரிகட் ஆட்டக்காரன் , கொஞ்சம் முரடன். அதீத தேசப்பற்று கொண்டவன். பட்டாளம் புடிக்காமல் ஓடி வந்து ஊட்டில் திட்டு வாங்குபவன்.


கோவிந்து - கதை இவன் பார்வையில் இருந்து தான் சொல்லப்படுகிறது. மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட தொழிலதிபராக துடிக்கும் ஒரு இளைஞன். கடவுள் நம்பிக்கை கம்மி. ( Agnostic)


இஷ் உடன் சேர்ந்து கோவிந்து ஒரு கிரிக்கட் சாதனங்கள் விற்கும் கடை ஆரம்பிக்கிறான். வருபவர்கள் இஷ் இடம் சந்தேகங்களை கேட்டு பொருட்களை வாங்குகிறார்கள் , வர்த்தகம் லாபத்தில் ஓட ஆரம்பிக்கிறது. கோவில் வளாகத்தில் ஒமியின் மாமாவின் உதவியோடு இயங்குகிறது கடை. அப்பொழுது கோவிந்து கணக்கு பாடம் எடுக்க , இஷ் கிரிக்கட் கோச்சிங்கும் ஓமி உடல் ஆரோக்கியமும் மாநாக்களுக்கு 250 ருபாய் தொகையில் கற்று தருகிறார்கள். மாமாவின் ஹிந்துத்வா பேச்சு கூட்டங்களுக்கு ஓமி ஆர்வமுடன் செல்ல , வேற வழியே என்று மற்ற இருவரும் செல்கிறார்கள். அலி என்ற இயற்கையாகவே மிக அருமையான திறமையுள்ள ஒரு சிறுவன் இஷாந்திர்க்கு சீடனாக கிடைக்கிறான். அவனை ஆஸ்திரேலியா சென்று பயிற்சி கொடுக்கும் அளவிற்கு இஷாந்த் முயற்சி எடுக்கிறான். இஷாந்தின் தங்கை வித்யாவிற்கு கணக்கு பாடம் எடுக்க கோவிந்திடம் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் காதல் வயப்படுகிறார்கள். கடைசியில் பிட்டூ மாமாவின் மகன் கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட , அலியை தேடி கொண்டு பிட்டூ மாமா ஒரு மத வெறி கும்பலோடு இம்மூவரிடதிலும் வருகிறார். ஓமி தன உயிரை நீத்து ஒரு இஸ்லாமிய சிறுவனின் உயிரை காப்பாற்றுகிறான். பின்பு வித்யாவின் காதலை இஷ் ஏற்று கொண்டானா , இஷ்-கோவிந்து இணைந்தார்களா என்பது தான் கதை .



மூன்று முக்கிய தவறுகள் என்னவென்றால் , முதலில் கிடைத்த அனைத்து லாபங்களை வைத்து கோவிந்து ஒரு இடம் வாங்குகிறான் ஒரு ஷாப்பிங் மாலில் , ஆனால் அது பூகம்பத்தில் தரைமட்டமாகிறது.

கணக்கு வாத்தியாக இருந்து கொண்டே வித்யாவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் , ஒன்பது முறை உடலுறவும் வைத்து கொள்கிறான்.

உண்மையில் பெரிய தவறு , கடைசி நேரத்தில் பிட்டூ மாமாவின் ஆள் ஒருவன் அலியை வெட்டவர கொஞ்சம் காலதாமதமாக அவனை தூக்குகிறான் கோவிந்து. அந்த ஒரு நிமிட சுயநல சிந்தனையால் அலியின் கையில் பலத்த அடிபடுகிறது.

இதில் சேட்டன் நமக்கு பிடித்த பல அம்சங்களை கவர் செய்கிறார். யார் போட்டாலும் அலி சிக்சராக அடிப்பது. லக்ஸ்மனின் 287 ரன்கள் எடுக்கும் ஆட்டத்திற்கு பிறகு வ்யாபாரம் சூடு பிடிப்பது. அழகாக கோவிந்து காதல் வயப்படுவது , வித்யா முதன்முறையாக அவனிடம் இதழ் பதிப்பது. ( We kiss each other until one of us struggle for our breath , we kiss when we feel like kissing and study when we feel guilty) . பிறகு அவளது பிறந்தநாள் சமயத்தில் இருவரும் மொட்டைமாடியில் கொள்ளும் உடலுறவு என்று சூர கில்மா. ஒக்கா மக்காவென்று எழுதியிருக்கிறார். மத அரசியலை உள்ளே புகுத்தும்பொழுது பல இடத்தியல் லாஜிக் சறுக்கல்கள். பேலன்ஸ் செய்வதாக நினைத்து கொண்டு கோத்ராவையும் , அதான் பிறகு நடந்த வன்முறைகளையும் ஒரு சேர கதையில் புகுத்துகிறார். எது எப்படியோ , பிட்டூ மாமாவின் வெறியை கண்முன்னே நிறுத்துவதில் சேட்டன் பிரமாதம். கடைசியில் சுபம் போட்டு முடிக்காத குறை தான்.

படமாக எடுத்தால் பிச்சுகிட்டு ஓடும் ! தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை , ஆனாலும் இந்த புத்தகம் கிக் தான்.



Wednesday, May 6, 2009

நான்

இந்த எழுதவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது ?. அது ஒரு உள்ளார்ந்த உந்துதல் என எவனாவது சொன்னா கேட்டுக்கொண்டு விட்டு விடுவேன். எனக்கு அது ஒரு அரிப்பு. எப்பொழுதாவது வரும்.
இப்போ எண்டா வந்துச்சுன்னு கேக்குறீங்களா? அட பயபுள்ளைங்க கல்லூரியில் இரண்டு ஒன்று என கணக்கு சொலாரானுங்க , என்னடா ஒரு நாளைக்கு எத்தன தடவங்க்ற கணக்கா ( அதில் ஆண்டோனி மட்டுமே ஆறு முறை தொட்டு சாதனை புரிந்தவன்) அப்டீனு கேட்டா , அட நம்ம பிரியப்போக இருக்கும் நாட்கள் என சொல்லி கஜக்குஷ்டத்தை தர்ரானுங்க.
பிரியப்போகும் பொழுது ஸ்லாம் புக் எழுத கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் , எவன் எவன் என்ன எழுதரான்னு தெரிஞ்சுக்கலாமேன்னு கொடுத்துடறது. நம்மள எழுத சொன்னா , ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் இடம் இருந்து எதுனா காப்பி அடிச்சு அஜால் குஜாலா எழுதி கொடுத்து விடுகிறேன். கோடிட்ட இடத்தை நிரப்புவது இன்னும் எளிது , டைரியில் தான் கதை அடிக்க வேண்டும்.

இதில் எழுதி கொடுப்பவன் எல்லாம் , நீ இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம் என கதை விடுவது படிப்பதற்கே அருவருப்பாக உள்ளது. நினைவுகள் மட்டுமே எடுத்து செல்ல அந்த எழவு புத்தகம் என நினைத்தால் , ஹ்ம்ம். இதில் பாராட்டுகள் மிகுந்த எரிச்சலை தருகின்றன , எவன் பாராட்டுவதிலும் உண்மை இருப்பதாக தெரியவில்லை. என்னை புத்திசாலி என்று சொல்றவன எதால அடிக்க மக்களே ?


இரண்டாண்டுகளுக்கு முன்பு நட்பு வட்டாரத்தை தவிர ஒன்றுமே நான் அறிந்ததில்லை , நண்பர்கள் கூட்டம் தான் வாழ்கை. இணையம் தலை திருப்பி போட்டது. விட்டு விட்டு வாசித்ததை வைத்து வெத்து சீன் போட்ட என்னை விடாமல் உண்மையாக வாசிக்க வைத்தது . ஈழம் , பாலஸ்தீனம் , லெபனான் , இலக்கியம் , திருக்குறள் , தலித் அரசியல் , மார்க்சீயம் , திராவிட அரசியல் , நாத்திகம் , கில்மா , உலக சினிமா , வரலாறு , பயணக்கட்டுரைகள் , சிறுகதைகள் , ஜெயமோகன் , பா.ரா , எஸ்.ரா , லா.சா.ரா , சாய்நாத், சாம்ஸ்கி , அமிர்த்யா சென் , அதிஷா , லக்கிலுக் , பத்ரி , முகில் , அஜயன்பாலா , மாலன் , ஆர்க்குட் தமிழ்நாடு அரசியல் , ஆர்க்குட் தமிழ் சினிமா , ஆர்க்குட் தமிழ் சினிமா கிசு கிசு , போதாக்குறைக்கு நல்ல கட்டுரைகள் என கிறுக்கு பயல் போல வாசிக்க செய்தது. இதில் விட்டுப்போன விடயங்கள் ஏராளம்.

எல்லாம் உண்மையை சொல்லவேண்டுமானால் , ஆறே மாதங்களில்! பைத்தியம் போல் படித்தேன் , முதலில் சும்மா ஆரம்பித்தது இப்பொழுது ஒரு அட்டிக்ஷன் போல் ஆகி விட்டது. படிச்சு நான் ஒன்னும் பெரிய படிப்பாளி மயிறு என்ற சொல்ல வரவில்லை அதற்கான பதிவும் இதுவில்லை. ஒரு விதமான சுழலில் வேண்டுமென்ற சிக்கி , எழ மறுக்கிறது மனம். முன்பு போல் ஒன்றும் தெரியாமல் இருந்ததை யோசித்தால் , அப்படியே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏன் மாறினேன்? சே!


நக்கல் நய்யாண்டி அறவே குறைந்து போனது , மசாலா படங்களாக பார்த்த என்னை பெரிய அகிரோ குரோசிவா ரசிகன் ரேஞ்சுக்கு பிட்டை போடா வெச்சுட்டானுங்க. சிரித்து நாட்கள் ஆகி விட்டன. எதையும் ஒரு விதமாக ஆழமாக பார்த்து தொலைகிறேன். கூடவே பகுத்தறிவு வேறு. இது எல்லாம் நல்ல விஷயங்கள் என்றாலும் , வயதை மீறி யோசிக்கிறேன் ,வயதிற்கே உண்டான சந்தோஷங்களை இழந்து விட்டேனோ என தோன்றுகிறது. மூன்று வருடங்குளுக்கு முன் என்னை விழாவில் பேசவிடவில்லை என்று வருத்தப்பட்ட பிரகாஷ் இப்பொழுது இல்லை , ஒரு விதமான தனிமை சிறையில் வந்து விட்டது போல் ஒரு உணர்வு. எல்லாத்தையும் தத்துவ ரீதியாக பார்க்கிறேன் பேர்வழி என ஒரு பைத்தியக்கார டாஷாக அலைகிறேன். முதிர்ச்சி ஒரு சாபம் , எனக்கு இல்லை என தெரிந்தவர்கள் சொன்னாலும் , நான் இதை விட குழந்தைத்தனமாக இருந்தவன்.

படிப்பில் கட்டம் கடைசியாக ஆர்வம் வந்தது ( ஷப்பா) , ஏழாவது செமஸ்டரில் திணறிப்போனேன் . ஆர்க்குட்டில் கோபாலன் , மோகன் போன்றோர் படிக்காமல் என்ன மணி ஆட்டி கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு மழுப்பியது தான் மிச்சம். கடைசியில் என்னை நம்பி மேற்படிப்பிற்கு ஒரு scholarship உம் கொடுத்து விட்டார்கள். நான்கு நாடுகள் அல்லது குறைந்தது இரண்டிலிருந்து மூன்று நாடுகள் பிரயாணம் செய்து படிக்க வேண்டும். எனக்கு பிடித்தமான படிப்பு. வெவ்வேறு சூழல் , இந்தியாவிலிருந்து நான் ஒருவன் மட்டும் தான். மத்தவர்கள் மெக்சிகோ , சீனா, துருக்கி , தாய்லாந்து , தைவான் ,இந்தோனேஷியா , ரஷியா ,ஈரான் , சிங்கப்பூர் என வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் . புண்ணியவான் பா.ராவை படித்த பலன் , மெக்சிகோ பெண்ணிடம் " Palace of Justice , M-19 , Escober , Medlin cartel , Coli cartel " என ஒரு வலம் வந்தேன் .


பதிவு எங்கேயோ போகிறது ,சொல்ல வந்த விடயம் நான் நட்பு வட்டாரங்களை தெளிவாக இழந்துவிட்டேன் , கேளிக்கைகளில் பங்கு பெற முடியவில்லை. பெரிய புடுங்கி மாதிரி யோசிக்கறேன். மனோ தத்துவ நிபுணர் என்னை பார்த்து பைத்தியம் ஆகி விடுவார் என அவர் நலன் கருதி இன்னும் நான் போகவில்லை.


என்றாவது ஒரு நாள் மீண்டும் வாரக்கணக்கில் நண்பர்களுடன் கூத்தடிக்க ஆசையாக ஏங்குகிறேன். இப்பொழுது ஒருவாரம் விடுமுறையின் போது கோவா செல்கிறோம்.