Sunday, April 12, 2009

கதை

அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா ? குரல் வைத்து? ஹ்ம்ம் இல்லை , மாறி இருந்தது என் குரல் . உடலில் அந்தந்த வயதிற்கு தேவையான மாற்றங்கள் வந்திருந்தன. ஆனால் அவளை எனக்கு தெரிந்தது , மெலிதான ரோஸ் நிறத்தில் சுடிதார் அதை விட கொஞ்சம் அடர்த்தியான நிறம் கொண்ட துப்பட்டா. உடல் கொஞ்சம் பூசினால் போல் இருந்தது , பருமன் இல்லை. கல்லூரி பேருந்திற்காக நிற்கிறாளா? எந்த கல்லூரியில் படிக்கிறாள் ? .


பல முறை பள்ளயில் அவள் பின்தொடர்ந்து சைக்கிளில் போகும்போது உதிர்த்த புன்னகை நினைவுக்கு வந்தது . பிறந்த நாளில் முதல் முதலில் அவளுக்கே சிறப்பான ஒரு இனிப்பைத்தர நான் காலை எட்டு மணிக்கே பள்ளிக்கு வந்திருந்தேன் . இன்றே சொல்லிவிடலாமா ? இல்லை. வேண்டாம். மனம் அடித்து கொள்ள , அவள் அன்றைக்கென்று பார்த்து இவ்வளவு தாமதமாக வர வேண்டுமா ? நடுவில் இந்த வினோத் வேறு வந்து ஏதேதோ ஜபக்கூட்ட கதைகள் சொல்லி என் தாலி அறுத்தான்.


அடங்கப்பா பள்ளி விடுமுறை என்றால் இவனுங்க அலும்பு தாங்காது , வந்து பாய் போட்டு படுத்து பரிசுத்த ஆவியில் இட்லியை வேக வைப்பார்கள். காலையில் சுப்ரபாதம் கேட்கும்போது வரும் அதே கோபம் , இவர்களின் கூச்சலை கேட்டாலும் வரும் . விற்பனை பொருள் ஒன்று தான் , மதமென்னும் போதை பொருள் .இவன் நீல டப்பாவில் விற்கிறான், அவன் சிகப்பு டப்பாவில் .

அடச்சே!இந்நேரத்துல நமக்கு பெரியாரீயமா முக்கியம் ? வினோத்துடன் பக்கத்துக்கு தெருவில் உள்ள பரிமளாவும் வந்திருந்தாள் . அவளுக்கு என்னவாம் ? பக்கத்துல இருந்துட்டு லேட்டா வந்தா என்னடி கொறஞ்சு போவ ?

அடுத்ததாக அவள் வந்தாள் , அப்புடியே லாவகமாக கண்ணால் பேசி அவளை வெளியில் அழைத்து சென்று விடலாம் தான். முன்ன பின்ன அதுக்கு அவளிடம் பழகி இருக்க வேண்டுமே . போன பிறந்தநாளில் பார்த்தது , இது இரண்டாம் ஆண்டு. இருந்தாலும் தைரியத்துடன் அவள் வெளியில் தனியாக நிற்கும்போது கொடுத்தேன்.

சிரித்துக்கொண்டே வாங்கினாள் , சொல்லிவிடலாம் , இதை விட்டால் தருணம் இல்லை .கை விரலை பற்றலாமா , தவறில்லை பக்கத்தில் சென்றேன் , சனியன் புடிச்ச கணக்கு வந்தான். காதலே போச்சு . கடைசியில் அவள் எங்கோ நான் எங்கோ !அவ்வபொழுது நலம் விசாரிப்பேன் , நண்பர்களிடம்.

ஆஹா கதைய எங்கே விட்டேன் பேருந்து நிலையத்திலா , மீண்டு ஒருமுறை காதல் கதை எழுதும் முயற்ச்சியில் தோல்வி ! பிரகாஷா , நீ தேரமட்டடா ! எப்பொழுதும் தாளை கிழித்து விடுவேன் . இந்த விஞ்ஞான வளர்ச்சியான ப்ளாகை படிப்பவன் தான் நொந்து கொள்ள வேண்டும்

Friday, April 10, 2009

49O -பத்து பைசாக்காது பிரயோஜனமா ?

முதலில் நாம் 49 O என்றால் என்னவென்று பார்த்துவிடுவது உத்தமம். இந்த இந்திய திருநாட்டில் வோட்டு போடபோகாமல் ஊட்டில் மப்பில் மல்லாந்து கிடக்கும் குப்புசாமிகளுக்கும் , அன்று விடுமுறை என்று சும்மா வீட்டில் இருக்கும் ராகேஷ்களுக்கும் ஒரு மாபெரும் மாற்று தீர்வு என்ற பல SMSகள் குவிகின்றதா ? . அய்ய இன்னாமே நீ அல்லாரும் மாத்தி மாத்தி ஊர ஏமாதிக்கினு இருக்காங்கோ நான் மட்டும் இன்னத்துக்கு வோட்டு போடணும் ? . இந்த கேள்விகளுக்கெல்லாம் 49 O விடை அளிக்கிறது என்கிறார்கள் ஒரு சாரர். இல்லை என்கிறேன் நான். கொஞ்சம் விரிவாக பார்போம்.


அதாகப்பட்டது , தேர்தலில் 49 0 விதிமுறைகளின் படி ஒரு வாக்காளர் தான் எந்த வேட்பாளரயுமே விரும்பவில்லை என்று வாக்களிக்கலாம். ஆஹா அருமை ? அப்போ எல்லாரும் இதையே போட்டுட்டா நம்ம தொகுதிக்கே திரும்ப தேர்தல் தான் , ஏற்கனவே போட்டியிட்ட எந்த வேட்பாளரும் நிற்க முடியாது என்றெல்லாம் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள் . எல்லாம் பொய் , பச்சை பொய் .


1. இந்த வாக்குமுறை மிகவும் வெளிப்படையாக செய்ய வேண்டும் , அது நமது அரசியல் சாசன உரிமையான மறைமுகமாக நாம் நமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்பதை முற்றிலும் மறுக்கிறது .


2. இது எந்த வோட்டெடுப்பு இயந்தரங்களிலும் இல்லை பாலட் தாள்களிலும் இருக்காது . நாமாக கேட்டு போட வேண்டும். யாருக்குமே எனது வோட்டு இல்லை என்னும் பட்டன் எந்த மெஷினில் உள்ளது ? இல்லவே இல்லை. இந்த மாற்றம் எப்பொழுது வரும் ? நிதர்சனம் இல்லை .


3.எல்லாரும் சொல்வது போல் மறு தேர்தல் நடக்குமா ? கண்டிப்பாக இல்லை . எந்த கேனப்பய கெளப்பி வுட்டான் இதை ? சரி வேட்பாளர்களை கட்சி மாற்றியாக வேண்டுமா? மயிரா போச்சு , அப்படி எந்த தேவையும் இல்லை .


4. சரியா அப்போ நம்ப போட்ட வோட்டு ? செல்லாத ஒட்டு தான் ! வேண்டுமானால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதிக்கு இந்த மாதிரி எத்தன கிறுக்கன் போட்டானு கேட்டு தெரிஞ்சுக்கலாம் .


5.யோ அப்போ ஒரே தொகுதில 99% பேர் இதை போட்டா என்னையா பண்ணுவ ? மிச்சம் இருக்கற 1% வாக்கு பெற்றவன் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும் .


6. யோ அப்போ என்னதான்யா பிரயோஜனம் ? உன் வோட்டிற்கு பதில் யாரும் கள்ள வோட்டு போட முடியாது. அதை தடுக்கதான தேர்தல் ஆணையம் , காவல் துறை எல்லாம் ? அதை எல்லாம் நாம கேக்கக்கூடாது .



ஆனால் வோட்டு போடுவது ஜனநாயக கடமை. அதை உபயோகபடுத்தி கொள்வது நமது திறமை. ஆனால் உண்மையில் மாற்றம் வரவேண்டும் என்று ஞானி போன்றோர் எண்ணுவதற்கு தோள் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த தேர்தலில் ? பயனில்லை !