Wednesday, June 9, 2010

குறுமலாப்பேரி கிரிக்கெட் டீம்

அன்றைக்கு என்று பார்த்து உச்சி வெயில் மண்டையை பிளந்தது என்று சொன்னால் அது பொய்யாகிவிடும் ,என்றைக்கும் போல் அன்றைக்கும்.ஆனால் குறுமலாப்பேரியில் காற்றுக்கு பஞ்சமே கிடையாது.சில்லென்று முகத்தில் அடிக்கும் , மூட்டையை சைக்கிளில் கொண்டு வரும் காளி அண்ணன் இதுக்கென்றே சில நேரம் எதிர் காற்றில் கூட வண்டி ஓட்டுவதுண்டு.

காத்து தெக்க பாத்து தாம்ல அடிக்கு , அப்ப்றம் ஏன் ஸ்டிக்க அங்குன கொண்டு போய் நடுத? என்ற கூப்பாடோடு வந்தார் அண்ணன் குமார் , கேப்டன் குமார் , கடுதக் குமார்.கடுதக் என்றால் என்ன என்று இன்றளவும் யாருக்கும் தெரியாது .

எலே செத்த மூதி சாரம் கட்டி ஆட வராதன்னு எத்தனை தடவைல சொல்ல , நாளைக்கு மேட்சாட வரலையோ டே? என்றான் விக்கட் கீப்பர் பிரியன்.

சாரம் கட்டி தானடே கீழப்பாவூர்ல மணியன்னே பேட்டிங் புடிச்சாப்புல , அவுக கப் வைக்காங்கன்னா அவுக மட்டும் சாரம் கட்டி ஆடலாமோ , பிராக்டிஸ் தாண்டே இது.ஸ்டிக்க நட்டாச்சு டீம் பிரிங்கடே.

டீம் பிரிப்பது அசாதாரனமான விஷயம்.அங்கே இருப்பவர்களில் இரண்டு சிறுசுகளைதான் எப்பொழுது பிரிக்க சொல்வார்கள்.இரண்டு பேரும் முதலிலேயே காட்டானை எடுக்க துடிப்பார்கள்.காட்டான் சூப்பர் ஃபாஸ்ட் குறுமலாப்பேரி எக்ஸ்பிரஸ்.பந்தை பள்ளிக்கூட கிரவுண்டில் தூக்கி அடித்து தொலைத்த ஒரே ஜந்து அவன் தான்.அதன் பிறகு மணி , முப்பிடாதி , சசி , சோலை , மருது , வெள்ளைச்சாமி , வேல்ப்பாண்டி,இப்படி கடைசியில் குமார்.குமாருக்கு பேட்டிங் வராது , பவுலிங்க சுத்தம்.இது வரை ச்லிப் கேட்ச் மட்டும் அவர் எடுத்ததில்லை , சிலிப்பை தவிர எங்குமே நிக்க மாட்டார் உருவம் அப்படி.கேப்டன் எப்படி? ஏனென்றால் பார்ட்டி டப்பு பார்ட்டி. கப் நடத்த , நுழைவுக்கட்டனம் கட்ட ,ஸ்டிக் வாங்க , பேட் வாங்க , வாட்டர் பாக்கெட் வாங்க , குச்சி ஐஸ் வாங்க எல்லாவற்றுக்கும் அந்த ஊரில் காசு கேட்டார்கள்.குமாரிடம் இருந்தது.

நாளை நடக்கப்போகும் செமியில் தான் குறுமலாப்பேரி வெர்ஸஸ் கீழப்புலியூர்.இன்னொரு செமியில் மேலப்பாவூர்/சுரண்டை.எப்பொழுதுமே கப் நடத்துபவர்கள் ஃபைனல்ஸ் வருவார்கள்.ஆக செமியில் ஜெயித்து வருபவர்கள் கண்டிப்பாக திரும்பி தங்களுக்குள் மோதிக்கொள்ள் வேண்டும்.அப்போ என்ன எழவுக்கு செமின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்கப்புடாது!

ஏ பந்த தேடுறே , எவ்வளவு நேரம் அங்கனையே நிப்ப , இது சசி.

ஏல் நொட்டி , பேசுதேல்ல , ரப்பர் செருப்புதாம்ல போட்டிருக்கேன் அடிச்சேல்ல , வந்து எடுத்துக்குடு என்றான் முப்பிடாதி.

அன்று ஒருவழியாக இருந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக தொலைத்து விட்டதாலும் , பாலாஜி அண்ணன் கடையில் இதுக்குமேல் ரப்பர் பந்து இல்லாததாலும் ஆட்டை நின்று போனது.செமி போவதர்க்குண்டான ஸ்ட்ராடஜி பேச்சுக்கள் ஆரம்பமானது.

ஏ காட்டான் அன்னிக்கு மாதிரி விசுறாதே டே விக்கெட் வேனும் , நீ எல்லா பந்தையும் வெளிய அடிக்க பார்த்தேன்னா அப்பறம் ஸ்டிக் புட்டுக்கும்.அன்னிக்கி புட்டுக்குச்சு பார்த்தீயளா சத்திரம் புவலிங்கில ஹா ஹா என்று கடியில் இருந்த காட்டானுக்கு வெறியேத்தினான் வேல்ப்பாண்டி.

ஏல் அவன் எறிஞ்சாண்ட்டே சத்தியமா சொல்லுதேன் , நீ அம்பயர் அண்ணன் கிட்ட வேனும்னாலும் கேட்டுப்பாரு , அன்னிக்கு காலேஜ் படிக்கில்லா சங்கர் அண்ணே அதான் நின்னுச்சு.

கடுதக் , புரோட்டா கடை தொரந்திருக்கோடே? என்றான் வெள்ளை. நீ காசு வெச்சிருந்தா தொரந்திருக்கும்டே என்று இன்று கடுதக்கிடமிருந்து உஷார் பதில் வந்தது. பல வயிறை புரோட்டா போட்டு நிறப்பிய வள்ளலவர்.

ஏ ஒன்னும்மில்லடே புலியூர்ல மணி , சிங்கமுத்து , தொரை ,மாடு நாலு பேர் விக்கட் எடுத்துட்டா போதும் என்று சசி சொல்லிமுடிப்பதற்குள் வேல் கத்த ஆரம்பித்தான் , ஏல் மாடு என்ன விளையாடினான்? போன கப்புல எல்லாம் கீப்பர் கேட்ச் , அம்சமா எடுக்கலாம்டே நிக்க வெச்சு. ஏல் காட்டன் ஆஃப்ல நாலு பந்தாவது போடு ஃபர்ஸ்ட் ஓவர் எல்லாமே காலுக்குள்ள எறக்க பாக்காத.

ஏ மணி , கிட்ட வந்தி நில்லுடே , சிரிலங்கால எல்லாம் நிப்பாங்க தெரியுமா பாஸ்ட்ட்கே நிப்பாய்ங்கடே.


ஏல் அவன் எம்புட்டு ஏறியுதான் தெரியுமா? கீப்பிங்க் நிக்கியா நீ? பேசனும்னு பேசாத , ரப்பர் பந்துனாலும் பட்டா வலிக்காதோல உனக்கு?

சரிடே நான் சிலிப் நிக்கேன் இந்த வாட்டி , போன வாட்டியே குமார் அண்ணே மூனு காட்ச் மிஸ் பன்னிட்டாப்புல என்றான் முப்பிடாதி.

முப்பிடாதி , நீ கேட்சே விட்டதில்லயோ டே? ராஜா பவுலிங்கில லாங்குல விட்டியே டே போன ஃபைனல்சுல

கடுதக் , ராஜா போன ஃபைனல் விளையாடவே இல்லை என்று மேலும் வெந்த புல்லில் ஆசிட்டை ஊற்றினான் முப்பிடாதி.சிறிது நேரம் மவுனம்.குமாருக்கு கோபமோ என்று உள்ளூர வெள்ளைக்கு பயம் , புரோட்டாக்கு பங்கம் விளைவித்த முப்பிடாதியை கருவிக்கொண்டான்.காட்டான் மவுனத்தை கலைத்தான்.

கொடுக்கமாட்டாங்கடே கீழப்பாவூர் காரைங்க அவ்வ்ளவு சீக்கரம் கீப்பர் கேட்ச் ,அம்பயரிங்கிலையே நம்ம்ள தொரத்த பாப்பய்ங்க.நம்ம ஃபைனல் வந்தா டஃப் அவங்களுக்கு.

சுத்தி இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்தது.சரி இருந்தாலும் காட்டான் மனசு நோக வேண்டாமே என்று விழுந்து விழ்ந்து சிரித்தார்கள்.

டேய் என்னடே குறைச்சல் சொல்லுடே ஒருத்தன் சொல்லுடே , ம்ம் ஹ்ம்ம் சிரிப்பொலி நிக்க வேண்டுமே

10 comments:

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Prakash said...

முடியல வர்ரதே ஒரு கமண்டு அதுவும் இப்படியா :(

Prasanna Rajan said...

சுஜாதாவோட ‘பேப்பரில் பேர்’னு சிறுகதை ஒன்னு இருக்கு. இதை படிச்சதும் அது தான் ஞாபகம் வந்துச்சு. நிறைய ஒற்று மற்றும் சந்தி பிழைகள். இன்னும் நெறைய விவரணைகள் வேனும். நெறைய கதாபாத்திரங்கள், அதனால கேரக்டரைசைஷன் முக்கியம் மச்சி.

ஆனாலும் ஒன்னை மாதிரி எனக்கு எழுத வராது மச்சி... :D

Prakash said...

உண்மை பிரசன்னா , வட்டார வழக்கில் எழுதும்பொழுது தவிர்க்க கஷ்டமா இருக்கு.ட்ரை பன்றேன்.

நன்றி தல.

Unknown said...

dei , nalla thamasa than eluthura

Unknown said...

dei , nalla thamasa tahn eluthura

Unknown said...

DEI , nalla thamasa than eluthura

Prakash said...

Thanks a lot Viswa :)

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

மதுரை சரவணன் said...

nice...vaalththukkal