Sunday, February 8, 2009

வெண்ணிலா கபடி குழு

போன வெள்ளிகிழமை நானும் ஆனந்தும் கிளம்பினோம் இந்த படத்துக்கு , அதற்குள் இந்த சோம்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக ஏதோ மென்பொருள் தரவிறக்கம் செய்து தர சொல்லியதால் போக இயலவில்லை . இந்த ஒரு வாரம் படு வெட்டியாக போனது , என்னுடன் என் ஆர்குட் தோழன் திருவாளர் " All time vetti" நாகபூஷன் அவ்வபோது புது படங்களை பற்றி அதி உன்னத ஆங்கிலத்தில் கதைத்து கொண்டிருப்பான் . மத்தபடி அவனைவிட நான் படு வெட்டி. :D


ஞாயிறு மாலை முழித்தவுடன் ( மதியம் தூக்கம் தான் ) நம்ம பேரானந்துக்கு ஒரு காலை போட்டேன் . வண்டி நேராக சுண்டல்கடை நின்றபிறகு சிவத்தில் போய் நின்றது. முதலில் சுமாரான கூட்டம் பின்பு மிக நல்ல கூட்டம் வர படம் தொடங்கியது .


இந்த படத்தின் பெயர் தட்டே மிக வித்யாசமானது , முதல் முறையாக Dog trainer , Focus mover , Light men , என திரைக்கு பின்னால் இருந்த அத்தனை உழைப்பிற்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள் .


கதைக்களம் அவ்வளவு விசாலமானது அல்ல . ஆனால் முதலிலேயே சில வலிகள் பதிவு செய்ய பட்டுவிடுகின்றன. தந்தையை இழந்துவிட்டு பண்ணை வேலை செய்யும் மகன் , கபடி ஆடபோகும் அவனை தண்டிக்கும் பண்ணையார் என கிளியின் சிறகை அறுத்து எரியும் காட்சிகளில் ஆழமாக வலிகள் பதிவு செய்யபட்டிருக்கலாம் . ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு . காமெரா கண்கள் கிராமத்தின் எந்த அழகையும் விடவில்லை . காதல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் , சில குட்டி ஹைக்கூ போன்ற காட்சிகளால் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்தின் மாபெரும் பலம் இசை/பின்னணி இசை . ஒரு காட்சியில் கதாநாயகன் நாயகியை துரத்தி செல்கிறார் , அவ்வளவு எழில் கொஞ்சும் பின்னணி இசை , அது இல்லாவிடில் காட்சி அம்பேல் தான் . லேசா பறக்கிறது பாடல் அருமையான மெலடி , கண்கள் இரண்டால் போல் கமர்ஷியலாக்காமல் இருக்க வேண்டுமே .

கபடி குழுவில் ஒவ்வொருவர் கதாபாத்திரமும் " Well defined " ஆக உள்ளது . புது மாபிள்ளை , டி கடை கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனி ராகம் . ஆரம்பத்தில் இருந்து தோற்கும் ஒரு அணியை கிஷோரின் வருகை மாற்றுகிறது . உள்ளூர் கபடி அணியில் வாய் சண்டை , காதலி பிரிதல் என மிக மெதுவாக போகும் படம் இடைவேளைக்கு பிறகு படு ஸ்பீட் .


ஆமாம் , அந்த இடைவேளையின் பின் வரும் ரெண்டு அழகான பாடல்களும் இடை செருகல்கள் போல அமைந்து விட்டதை ஏன் இயக்குனர் கவனிக்கவில்லை ? . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு ! இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ ? .
மொத்தத்தில் அசல் கிராமத்தை பார்த்து , புதிய அப்பழுக்கற்ற காற்றை சுவாசித்த உணர்வு . ஏன் என்றால் படத்தை முடித்து ஆனந்த் செலவில் சரஸ்வதி மெஸ்ஸில் உக்காரும் பொழுது "குத்து" படம் பார்த்தேன் .நிம்மதி பெரு மூச்சு நமக்கு வேண்டியது " வெண்ணிலா கபடி குழுக்கள் தான் "

No comments: