
Saturday, July 17, 2010
Inception 2010 கதை/விமர்சனம்.

Saturday, March 28, 2009
பட்டாளம் - படமாடா எடுத்திருக்க ?

திங்கட்கிழமை தீசிஸ் கொடுத்தாக வேண்டும் , தேவையாடா உனக்கு என்று உள்மனது கேள்வி கேட்டாலும் , ஐந்து மணி வரை மின்சாரம் வராது என்று ஆற்காட்டாரின் அறிவிப்பை ஒட்டியும் , நாம் எல்லாம் பிரியப்போகிறோம் என்ற ஆனந்தின் ( சனியன் புடிச்சவனே ! ) செண்டிக்காகவும் ராம்விலாஸ் போனேன் , இந்த எழவை பார்க்க .
பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று கை துடிக்கிறது , ஆனால் எனது வலைப்பூவை நண்பர்களுக்கு அலுவலகத்திலும் தான் படித்த கல்லூரியிலும் சில நண்பர்கள் பரிந்துரை செய்திருக்கும் ஒரே காரணத்தால் விடுகிறேன் .
ஆரம்ப காட்சியின் போதே எனக்கு விளங்கி விட்டது . கனா காணும் காலங்களின் 'ஜோ' இல்லாத காமடிக்கு சிரித்து நமக்கு முதல் நிமிடத்திலேயே வெயிலில் வெந்நீர் குடிக்க வைக்கிறார். இதே போல் ஒரு எட்டு வருங்கால ரித்தீஷ்களும் , சாம் அன்டேர்சன்களும் அறிமுக படுத்தபடுகிறார்கள்.
கதையா? ஒரு மயிரும் இல்லை! பள்ளிகூடத்தில் இரண்டு க்ரூப் , ரெண்டு பேரும் கனா காணும் காலங்களில் வருவதை விட அதிகமாக மொக்கை போடுகிறார்கள் . நதியா வந்து நீதி பேசுகிறார் , தவறு செய்யும் மாணவர்களை அன்பாக கண்டிக்கிறார் . அடிக்கும் வாத்தியாரிடம் வசனம் பேசுகிறார் என ஒரு படுமொக்கயாக ஒன்றோடு ஒன்று தொடர்பே இல்லாத காட்சிகளில் முதல் பாதி நகர்கிறது .
பாட்டு வேற எதுக்கு எடுத்தாலும் , என்ன மண்ணாங்கட்டிக்கு வருகிறது என்பது அந்த இயக்குனர் புண்ணியவானுக்கு தான் வெளிச்சம் . படத்தை கேவலம் கேவலமாக ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள் முதல் பாதியிலேயே! அதை விமர்சனம் செய்யாத ஒரே ஜீவன் எனது அன்பு ஜுனியர் தினேஷ் தான் , பின் வரிசை காலியாக இருந்ததால் படுத்தே தூங்கி விட்டான் . ( அவனும் ஆனந்தை அசிங்கமாக திட்டினான் என்பது வேற விடயம் )
நடுவில் எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் , அந்த இடத்தில் க கா கா வினித் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் , அப்பொழுது தான் காட்சியோடு நான் ஒன்றினேன் . அவன் செய்து கொள்கிறானோ இல்லையோ என்னை கொலை செய்தது போல் இருந்தது .அடங்கப்பா கூட ரெண்டு சுத்துதே , ஏண்டா வசனம் கூடவா ஒழுங்கா பேச மாட்டீங்க ? !
நடுவில் ராகவி கதாபாத்தரத்தில் சோபி என்று ஒரு அரை லூசு வருகிறது ! எச்சை ச்சீ பச்சை போல் இப்படத்தில் ஒரு சக்கரை. வினித் அந்த பெண்ணை டாவு தான் அடிக்கிறான் என்று புழங்க , அவன் அவளை தமக்கையாக எண்ணுகிறான். இதுக்கு நடுவில் ஒற்றுமையை பற்றி இயக்குனர் நதியா வாயிலாக நமக்கு நடுத்தும் பாடத்தில் புல் மட்டும் இல்லை குவார்டர் வரை அரிக்கிறது . ஜாசீ வேறு வயலினை உச்ச ஸ்தானத்திற்கு கொண்டு சென்று நம் காதை பதம் பார்க்கிறார்.
கடைசியில் எதோ ஒரு பாட்ட போடுறானுங்க , வினித் தலையில் பெரிய மணி ஒன்று விழ வேண்டும் என இந்த சக்கரை கயிறை அறுக்கிறார். பின்பு உண்மை தெரிய வந்து அழுகிறார் , மாறாக ஜோ தலையில் விழ சோகம் நம்மை அப்பி எல்லாம் கொள்ளவில்லை. டேய் முடிஞ்சது வா ஓடிடலாம் என தான் தோன்றுகிறது. இதுல கடைசியில் சேது ரேஞ்சுக்கு பில்ட் அப்பு வேற.
உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மொக்கை படத்தை எடுக்க இன்னொருவன் பிறந்து தான் வர வேண்டும்
Sunday, February 8, 2009
வெண்ணிலா கபடி குழு
ஞாயிறு மாலை முழித்தவுடன் ( மதியம் தூக்கம் தான் ) நம்ம பேரானந்துக்கு ஒரு காலை போட்டேன் . வண்டி நேராக சுண்டல்கடை நின்றபிறகு சிவத்தில் போய் நின்றது. முதலில் சுமாரான கூட்டம் பின்பு மிக நல்ல கூட்டம் வர படம் தொடங்கியது .
இந்த படத்தின் பெயர் தட்டே மிக வித்யாசமானது , முதல் முறையாக Dog trainer , Focus mover , Light men , என திரைக்கு பின்னால் இருந்த அத்தனை உழைப்பிற்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள் .
கதைக்களம் அவ்வளவு விசாலமானது அல்ல . ஆனால் முதலிலேயே சில வலிகள் பதிவு செய்ய பட்டுவிடுகின்றன. தந்தையை இழந்துவிட்டு பண்ணை வேலை செய்யும் மகன் , கபடி ஆடபோகும் அவனை தண்டிக்கும் பண்ணையார் என கிளியின் சிறகை அறுத்து எரியும் காட்சிகளில் ஆழமாக வலிகள் பதிவு செய்யபட்டிருக்கலாம் . ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு . காமெரா கண்கள் கிராமத்தின் எந்த அழகையும் விடவில்லை . காதல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் , சில குட்டி ஹைக்கூ போன்ற காட்சிகளால் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்தின் மாபெரும் பலம் இசை/பின்னணி இசை . ஒரு காட்சியில் கதாநாயகன் நாயகியை துரத்தி செல்கிறார் , அவ்வளவு எழில் கொஞ்சும் பின்னணி இசை , அது இல்லாவிடில் காட்சி அம்பேல் தான் . லேசா பறக்கிறது பாடல் அருமையான மெலடி , கண்கள் இரண்டால் போல் கமர்ஷியலாக்காமல் இருக்க வேண்டுமே .
கபடி குழுவில் ஒவ்வொருவர் கதாபாத்திரமும் " Well defined " ஆக உள்ளது . புது மாபிள்ளை , டி கடை கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனி ராகம் . ஆரம்பத்தில் இருந்து தோற்கும் ஒரு அணியை கிஷோரின் வருகை மாற்றுகிறது . உள்ளூர் கபடி அணியில் வாய் சண்டை , காதலி பிரிதல் என மிக மெதுவாக போகும் படம் இடைவேளைக்கு பிறகு படு ஸ்பீட் .
ஆமாம் , அந்த இடைவேளையின் பின் வரும் ரெண்டு அழகான பாடல்களும் இடை செருகல்கள் போல அமைந்து விட்டதை ஏன் இயக்குனர் கவனிக்கவில்லை ? . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு ! இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ ? .
மொத்தத்தில் அசல் கிராமத்தை பார்த்து , புதிய அப்பழுக்கற்ற காற்றை சுவாசித்த உணர்வு . ஏன் என்றால் படத்தை முடித்து ஆனந்த் செலவில் சரஸ்வதி மெஸ்ஸில் உக்காரும் பொழுது "குத்து" படம் பார்த்தேன் .நிம்மதி பெரு மூச்சு நமக்கு வேண்டியது " வெண்ணிலா கபடி குழுக்கள் தான் "
Friday, November 21, 2008
Baran - Majid Majidi
At last when she leaves for afghan , her shoes get stuck in wet mud and he helps her taking that out and she smiles. She was still unaware of the fact that this young man has almost given everything for his love towards her , in fact the hero don’t even talk with her after knowing that she is a girl.I was really moved with this script of unconditional love . This is a real classic by majid majidi and it’s a must watch .