Saturday, March 28, 2009

பட்டாளம் - படமாடா எடுத்திருக்க ?


திங்கட்கிழமை தீசிஸ் கொடுத்தாக வேண்டும் , தேவையாடா உனக்கு என்று உள்மனது கேள்வி கேட்டாலும் , ஐந்து மணி வரை மின்சாரம் வராது என்று ஆற்காட்டாரின் அறிவிப்பை ஒட்டியும் , நாம் எல்லாம் பிரியப்போகிறோம் என்ற ஆனந்தின் ( சனியன் புடிச்சவனே ! ) செண்டிக்காகவும் ராம்விலாஸ் போனேன் , இந்த எழவை பார்க்க .




பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று கை துடிக்கிறது , ஆனால் எனது வலைப்பூவை நண்பர்களுக்கு அலுவலகத்திலும் தான் படித்த கல்லூரியிலும் சில நண்பர்கள் பரிந்துரை செய்திருக்கும் ஒரே காரணத்தால் விடுகிறேன் .



ஆரம்ப காட்சியின் போதே எனக்கு விளங்கி விட்டது . கனா காணும் காலங்களின் 'ஜோ' இல்லாத காமடிக்கு சிரித்து நமக்கு முதல் நிமிடத்திலேயே வெயிலில் வெந்நீர் குடிக்க வைக்கிறார். இதே போல் ஒரு எட்டு வருங்கால ரித்தீஷ்களும் , சாம் அன்டேர்சன்களும் அறிமுக படுத்தபடுகிறார்கள்.



கதையா? ஒரு மயிரும் இல்லை! பள்ளிகூடத்தில் இரண்டு க்ரூப் , ரெண்டு பேரும் கனா காணும் காலங்களில் வருவதை விட அதிகமாக மொக்கை போடுகிறார்கள் . நதியா வந்து நீதி பேசுகிறார் , தவறு செய்யும் மாணவர்களை அன்பாக கண்டிக்கிறார் . அடிக்கும் வாத்தியாரிடம் வசனம் பேசுகிறார் என ஒரு படுமொக்கயாக ஒன்றோடு ஒன்று தொடர்பே இல்லாத காட்சிகளில் முதல் பாதி நகர்கிறது .



பாட்டு வேற எதுக்கு எடுத்தாலும் , என்ன மண்ணாங்கட்டிக்கு வருகிறது என்பது அந்த இயக்குனர் புண்ணியவானுக்கு தான் வெளிச்சம் . படத்தை கேவலம் கேவலமாக ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள் முதல் பாதியிலேயே! அதை விமர்சனம் செய்யாத ஒரே ஜீவன் எனது அன்பு ஜுனியர் தினேஷ் தான் , பின் வரிசை காலியாக இருந்ததால் படுத்தே தூங்கி விட்டான் . ( அவனும் ஆனந்தை அசிங்கமாக திட்டினான் என்பது வேற விடயம் )
நடுவில் எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் , அந்த இடத்தில் க கா கா வினித் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் , அப்பொழுது தான் காட்சியோடு நான் ஒன்றினேன் . அவன் செய்து கொள்கிறானோ இல்லையோ என்னை கொலை செய்தது போல் இருந்தது .அடங்கப்பா கூட ரெண்டு சுத்துதே , ஏண்டா வசனம் கூடவா ஒழுங்கா பேச மாட்டீங்க ? !



நடுவில் ராகவி கதாபாத்தரத்தில் சோபி என்று ஒரு அரை லூசு வருகிறது ! எச்சை ச்சீ பச்சை போல் இப்படத்தில் ஒரு சக்கரை. வினித் அந்த பெண்ணை டாவு தான் அடிக்கிறான் என்று புழங்க , அவன் அவளை தமக்கையாக எண்ணுகிறான். இதுக்கு நடுவில் ஒற்றுமையை பற்றி இயக்குனர் நதியா வாயிலாக நமக்கு நடுத்தும் பாடத்தில் புல் மட்டும் இல்லை குவார்டர் வரை அரிக்கிறது . ஜாசீ வேறு வயலினை உச்ச ஸ்தானத்திற்கு கொண்டு சென்று நம் காதை பதம் பார்க்கிறார்.



கடைசியில் எதோ ஒரு பாட்ட போடுறானுங்க , வினித் தலையில் பெரிய மணி ஒன்று விழ வேண்டும் என இந்த சக்கரை கயிறை அறுக்கிறார். பின்பு உண்மை தெரிய வந்து அழுகிறார் , மாறாக ஜோ தலையில் விழ சோகம் நம்மை அப்பி எல்லாம் கொள்ளவில்லை. டேய் முடிஞ்சது வா ஓடிடலாம் என தான் தோன்றுகிறது. இதுல கடைசியில் சேது ரேஞ்சுக்கு பில்ட் அப்பு வேற.



உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மொக்கை படத்தை எடுக்க இன்னொருவன் பிறந்து தான் வர வேண்டும்




Wednesday, March 4, 2009

Possessiveness = புலவி நுணுக்கம்

எனக்கு சின்ன வயதில் வரும் திருக்குறள் பாடம் மிகவும் சிரமான ஒன்று , மனப்பாடம் செய்வது என்பது இன்றளவும் எனக்கு ஆகாத காரியம். ஆதலால் , அவ்வளவு ஆர்வம் இல்லை.

ஆனால் , பொன்னீலன் அண்ணாச்சி ( சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , எங்கள் குடும்ப நண்பர் ) காரைக்குடி வந்த பொழுது அவருக்கு மிகவும் புடித்த இலக்கியம் திருக்குறள் என்றார். தினம் ஒரு திருக்குறள் படித்து தான் பாரேன் என்றார் , கொஞ்சம் ஆர்வம் தூண்டிய நிலையில் தமிழ் வேட்பனின் எளிய தெளிவுரயோடு ஒரு சின்ன புத்தகம் வாங்கினேன் . எடுத்தவுடன் அருளுடைமை , தவம் , துறவு , ஹ்ம்ம் வேலைக்கு ஆகாது என்று மூடிவிட்டேன். கொஞ்சம் நாள் கழித்து தான் , காமத்துப்பாலில் ஆர்வம் திரும்பியது. ஆகா வள்ளுவன் பின்றார்யா என்று தோன்றியது அன்றிலிருந்து தான். காமத்திலும் காதலிலும் இவரை அடித்து கொள்ள , உலக எழுத்தாளர்கலில் எவரும் உண்டோ ? உலக எழுத்த நான் என்ன கரைத்தா குடிச்சிருக்கேன்? , இல்லை தான் , ஆனால் " உலக இலக்கியங்களில் வள்ளுவம் " என ஜீவா பேசியதை பற்றி அண்ணாச்சி மிகவும் சிலாகித்து பேசுவார் .


விஷயத்துக்கு வருவோம் , இந்த பெண்கள் வட்டத்தில் ( நான் ரொம்ப உள்ள எல்லாம் போனதில்லைங்க )Possessiveness என்ற ஒரு சொல்லாடல் உண்டு . இதை கேட்டவுடன் அர்த்தம் சற்றே விளங்காமல் oxford ஐ புரட்டும்போது மண்டையில் தட்டினான் நண்பன் ஒருவன் , அகராதியில் அர்த்தம் கண்டுகொள்ள முடியாது என திடமாக கூறினான், அனுபவசாலி வேறு. சரி என்று அமைதியாக விட்டு விட்டேன் . காமத்துப்பாலில் , புலவி நுணுக்கம் படிக்கும் பொழுது தான் ஆச்சரியம் அப்பி கொண்டது . அட , இது தானா அது என்று ? நாஞ்சில் நாடனும் என்னுடைய favorite குறளை மேற்க்கோள் காட்டிய பொழுது , மேலும் ஆச்சரியம்.முடிந்தவரை எனது உரையை கொடுக்கிறேன் எனக்கு பிடித்த இந்த அதிகாரத்திற்கு .


குறள்: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.

எனது புரிதல் :பரந்த மார்பை உடையவனே , பெண்ணாக பட்டவர் எல்லாருமே உனது மார்பை பொதுவென எண்ணி கண்ணாலேயே உண்பர் , ஆகையால் நான் உன் பரந்த மார்பை தழுவ மாட்டேன் .

குறள்:ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

எனது புரிதல் : காதலரோடு ஊடியிருக்கும் பொழுது தும்மினேன் , நீடுடி வாழ்க என்று சொல்லி ஊடலை மறப்பார் என்ற நப்பாசையில்.

குறள்:கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

எனது புரிதல் : வளையமாக பூவை நான் உடம்பில் சூடினாலும் , இதை அடுத்த பெண்ணிடம் காட்டி பிராக்கட் போட முயற்சிக்கிறாய் என்று கோபப்படுவாள்

குறள்:யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

எனது புரிதல்: எனக்கு மிக மிக பிடித்த குறள். விளக்கம் என்னவென்றால் , யாரை விடவும் நாம் தான் காதல் மிக்கவர் என காதலன் கூறினானாம். அந்த "யாரை விடவும்" என்பதில் யாரை குறிப்பில் உணர்த்துகிறாய் என காதலி ஊடினாள் .

குறள்: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.

எனது புரிதல்:நாம் இந்த பிறவியில் பிரியமாட்டோம் என்றேன் , அப்போ அடுத்த பிறவியில் ? என்று கேட்டு கண்ணீர் விட்டாள்

குறள்: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

எனது புரிதல்:உன்னை நினைத்தேன் என்றானாம் காதலன். மறந்ததால் தானே நினைத்தீர் என்று கோபப்பட்டு தழுவ வந்தவள் தழுவாமலே போனாளாம் .
P.S : எத்தன சினிமா பாட்டு/ வசனம் இதுலேந்து காப்பி அடிச்சிருக்காங்க , கணக்கே இல்லை


குறள்:வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

எனது புரிதல்: நான் தும்மினேன் , நெடுநாள் வாழ்க என வாழ்த்தினாள் ! அப்பறமா ,யாரோ நினைத்ததால் தான் தும்மல் வருகிறது என கோபப்பட்டாள்

குறள்: தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.

எனது புரிதல்:வந்த தும்மலை கூட அவளுக்கு அஞ்சி அடக்கினேன் , அதையும் இனம் கண்டு உம்மவள் நினைத்ததை மறைக்க பார்கிறீர் என அழுதாள் .

குறள்: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

எனது புரிதல்:ஊடலில் இருப்பவளை கஷ்டப்பட்டு சிரிக்க வைத்தேன் , இப்படித்தானே பிற பெண்களையும் சிரிக்க வைப்பீர் என மீண்டும் ஊடினாள்.

குறள் : நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

எனது புரிதல்: அவள் அழகை வியந்து நோக்கினேன் , யாரோடு ஒப்பீடு செய்து பார்க்கிறீர்கள் என சினம் கொண்டாள் !