Showing posts with label Book Review. Show all posts
Showing posts with label Book Review. Show all posts

Wednesday, August 12, 2009

சீனா விலகும் திரை - நூல் விமர்சனம்


எனக்கு கண்ணை கட்டுகிறது. புத்தகம் வாங்குவதற்கு முன்பே பல்வேறு எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் , கட்டுரைகிளின் தொகுப்போ? பயண கட்டுரை எழுதி முழுவதும் மொக்கையாக இருந்து விட்டால் ?


அப்படி எதுவுமே இல்லை , தன் பயணத்தின் வாயிலாக தனது ஐந்து வருட இருப்பின் வாயிலாக புள்ளி விவரங்களை ஆங்காங்கே அள்ளி தெறித்து , ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் வரலாற்றை நினைவில் நிறுத்தி எழுதி அசத்தி இருக்கிறார் பல்லவி அய்யர் ( படிச்சு வாங்கின பட்டமுங்களா? ). இவ்வளவு லைவ்லியான மொழிபெயர்ப்பா என அதிசயிக்க வைக்கிறது ராமன் ராஜாவின் உழைப்பு!

சீனாவின் தனி நபர் வருமானம் இந்தியாவை விட இரு மடங்கு. இந்தியாவில் 5.7 கோடிகுழந்தைகள் சத்தான உணவில்லாமல் வளர்ச்சியில் தடைபடுகிறார்கள் ஆனால் சீனாவில் எழுபது லக்ஷம் தான். இந்தியாவில் 15 வயது மேர்ப்பட்டவர்களில் 68% பேர் தான் எழுத படிக்க தெரிந்தவர்கள். சீனாவில் 95% .


நான் என்ன ரமணா விஜயகாந்தா? . விஷயத்துக்கு வருவோம் , ராமன் ராஜாவில் மொழிபெயர்ப்புக்கு ஒரு ஒரு உதாரணம் , சீன விருந்தாளிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது டெல்லியில் இருந்து ஆக்ரா அழைத்து செல்லப்படுகிறார்கள். சன்னமாக ஒருவர் கேட்கிறார் " நாம் நெடுஞ்சாலையில் பயணிப்போம் என்றீர்களே பல்லவி , அது எப்போ வரும்? "


" நாசமா போச்சு! நாம் அதில் தான் சென்று கொண்டிருக்கறோம். "

இதில் இருந்தே தொடங்கலாம் , சீனாவில் இருக்கும் சாலைகள் இந்தியாவில் இல்லை. ரயில் பாதைகளில் அசுர பாய்ச்சல். தொழிற் சாலைகள்? பட்டன் தயாரிக்கிரீகளா? பலூன் ? இரும்பு? பொம்மைகள்? எல்லாவற்றிலும் சீனா சீனா சீனா ! மாவோ சீனா இப்பொழுது கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாக பல்லவி கூறுகிறார். இருந்திருந்தால் 44.7% ஏற்றத்தாழ்வு இருக்காது ( inequality) . சீனா அடைந்த அனைத்து வளர்ச்சிக்கும் அது கொடுத்த விலை , ஜனநாயகம் !

புத்தகம் நெடுக ஜனநாயகத்தை புதைத்த வளர்ச்சியா? வளர்ச்சியே இல்லாமல் வெத்து ஜனநாயகமா என்று மண்டையை ஒடைத்து கொண்டிருக்கிறார். தீர்வு? நான் ஏழை குடும்பத்தில் பிறந்தால் சீனனாகவே ஆசை படுகிறேன் ஆனால் நடுத்தர குடும்பம் என்றால் இந்தியா தான் என்ற முடிவை முன் வைக்கிறார் .


பல்லவி ஹூடாங்கில் வசிக்கும் பொழுது அவரது வீட்டின் அதிபாரான திரு வூ ( கோடீஸ்வரர்) தன் வீட்டின் கக்கூசை சுத்தம் செய்கிறார். பலப் ரிப்பேர் பார்க்கிறார். தனது அம்மாவிற்கு ஆயி வேலை கிடைக்குமா என்று தனது நவ நாகரீக சீன மாணவி கேட்கும் பொழுது ஆடி போகிறார் பல்லவி. ஏனென்றால் இதெல்லாம் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகள் . சீனாவில் எந்த வேலையும் தரம் பார்க்காமல் செய்கிறார்கள் . வர்க்க பேதங்களின் , இன /மத பேதங்களின் முதுகெலும்பை உடைத்திருக்கிறார் மாவோ . இங்கே சாதீய ஏற்ற தாழ்வுகளை உடைப்பது சாதாரண விடயமா?


அதே நேரம் மக்கள் மாற்றி சிந்திக்க கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள் , இந்தியனுக்கு எடக்கு பேசாவிடின் தூக்கம் வருமா? சீனா காரன் எதுவும் நன்மைக்கே என்கிறார்கள். இரண்டு உதாரணங்கள் இதற்க்கு , திபெத்தில் தான் பார்த்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் " சீனர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்னொன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் ( கெட்ட செய்திகளாம்) மக்கள் மனசு ஒடிந்து விடும் என்று அவரது சீன மாணவி சொல்கிறார்.


மூச் , மாத்தி யோசிக்காதே என்கிறது அரசாங்கம். இணையத்தை தடுக்கிறார்கள் , எல்லாவற்றிற்கும் அடக்குமுறை. பொருளாதார ரீதியாக முதலாளித்துவமும் உள்ளே படை எடுத்து வந்தாகி விட்டது. இப்பொழுது தான் இடது சாரி சிந்தனைகளை தூசி தட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியின் தூண்களான விவசாயிகளின் அதிர்ப்தி தான் காரணம். ஆனால் அதிகார பீடத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கல்வி அறிவு படைத்த நடுத்தர மக்கள் கேட்க மாட்டார்கள் , காரணம் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் ராஜ போதை.



பலவியின் திபத் பயணம் , ஸ்பானிஷ் கணவர் , பீஜிங் மாணவிகள் ,ஹூடாங் வீடு மற்றும் வாழ்கை முறை , பொக்கை வாய் கிழவர்கள் , கக்கூஸ் கண்காட்சி , அங்கு அவர் சந்தித்த இந்தியர்கள் , வாஜ்பாய் வருகை , உணவு பழக்க வழக்கங்கள் , சீனாவும் மதமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களும் எப்படி பின்னி பிணைகின்றன இன்றைய கால கட்டங்களில் என்ற நுட்பமான ஆராய்ச்சி , யோகா மோகன் , திபெத் சிறுவன் , பீஜிங் தலைகீழாக மாறிப்போன காட்சிகள் , மலை மேல் ரயில் பிரயாணங்கள் , அவர் சந்திக்கும் உலகத்திலேயே பணக்கார கிராமம் அங்கு முன்னேற்றம் வர வித்திட்ட மனிதர் , அவர் கண்ட தொழில் சார்ந்த பேட்டிகள் , அவர் சந்தித்த சாக்ஸ் தொழிற்சாலை , பாதி புதுமையும் மீதி பழமையும் கொண்ட வீடுகள் ( இது தான் இன்றைய சைனா ) , தொழில் நகரம் அதில் இருக்கும் பொருள்கள் , மத வழிப்பாட்டு உருவங்கள் , செக்ஸ் பொம்மைகள் என்று ஒவ்வொன்றும் அவரின் ரசனையோடு கலந்த நுட்பமான தகவல்கள்.



அவர் சார்ஸ் பற்றி எழுதி இருக்கும் இடத்தில் நான் கடுமையாக முரண் படுகிறேன் அது இந்த புத்தகத்தின் சாரமும் கூட! முதலில் சீன அரசாங்கம் சார்ஸ் பரவிய விகிதத்தை குறைத்து சொல்லியது ( மீடியா அவங்க கையில் பாஸு). பிறகு உண்மையை ஒப்புக்கொண்டு தீர்வு கண்டது. இதை அறிந்த மாணவர்கள் /மக்கள் கலவரமானார்கள். அதற்க்கு பல்லவி அளிக்கும் பதில் இதுவே இந்தியா என்றால் நாங்கள் துல்லியமாக பத்திரிக்கைகள் ( மீடியா) மூலம் அலசி இருப்போம் என்று ஜம்பம் அடித்து கொள்கிறார்.


இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் பல்லவி. ஏன் சார்ஸ் இவ்வளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது? விமானம் மூலம் கூட பரவி வசதி படைத்தவர்களையும் கொல்லும் என்பதால் தானே? . Tuborculosis , வயிற்று போக்கினால் இந்தியாவில் சாகும் எண்ணிக்கை எவ்வளவு? அதன் புள்ளி விவரங்கள் வருவதே இல்லையே? ஏன் ? இந்திய மீடியா என்று நாம் எவ்வளவு பீத்தி கொண்டாலும் அது கார்பரேட்களின் கைப்பாவையாக உள்ளது ( They are corporate stenographers) இத்தனை இருந்தும் எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைவில்லை , மீடியாக்கள் மீதும்! ஏனென்றால் ஒரு பாலகும்மி சாய்நாத் இல்லையென்றால் மேற்சொன்ன விவரங்கள் எனக்கு தெரிந்திருக்காது.




மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்காமல் விடுபவர்கள் ஒரு முக்கிமான ஒப்பீடு நடையில் எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான / அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை இழக்கிறார்கள். A must read!

Monday, June 1, 2009

விஜயகாந்த் - புத்தக விமர்சனம்


இப்போதைக்கு இருக்குற மொக்கைல இதைத்தான் என்னால் செய்ய இயலும். ஏதாவது புத்தகம் படிப்பது , விமர்சனம் எழுவது.

புத்தகம் வாங்கி வந்தவுடன் அம்மா கேட்ட கேள்வி " ஏண்டா விஜயகாந்திற்கு ஒரு புக் ஆ ? , நீ இதெல்லாம் வாங்கமாட்டயே? "

" ஆமாம். ஆனால் எழுதியவரை எனக்கு தெரியும்.போர் அடிக்காம இருக்கும். "

" என்னவோ பண்ணு"

சரி என்று திட்டு வாங்கி விட்டு படிக்க ஆரம்பித்தேன். 136 பக்கங்கள். பறந்தது நிமிட பிரேக் இல்லை. சிட்டாக பறந்தது புத்தகம். நல்ல போதை. காலையில் தான் தெளிந்தது.போதையிலேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு படுத்தேன்.

ஆரம்பத்தை நான் ஏற்க்கனவே இணையத்தில் படித்துவிட்டதால் சுவாரசியம் இல்லை. அதற்க்கு பிறகு , விஜயகாந்தின் பால்ய மற்றும் இளம் வயதை பற்றி பல சுவைகரமான தகவல்கள். கூடவே "விளாறு" போன்றவைக்கு விளக்கத்தோடு. முழுப்புத்தகம் படிப்பது எதோ படம் பார்ப்பது போல் உள்ளது.படிப்பு வராமல் விஜயகாந்த் தந்தையிடம் அடி வாங்குவது , இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றது , பிறகு மில்லில் வேலைக்கு சேர்ந்து எதிர்வீட்டு ஜென்னல் சிட்டை நோக்குவது என எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவிற்கு தரணி திரைக்கதை எழுதி வேகமூட்டியது போல் ஒரு பீலிங்.

விஜயகாந்த் படிப்படியாக முன்னுக்கு வந்ததை பற்றி லக்கி நன்றாகவே எழுதி இருக்கிறார். பின்னால் நல்ல உழைப்பு இருக்கிறது. குறிப்பாக 92-96 சிறப்பான தொகுப்பு. அவர் பட்ட அவமானகளை அதே சூட்டுடன் படிக்க முடிகிறது. நிற்க.

அறுபத்தி மூன்று ருபாய் கொடுத்திருக்கிறேன். பச்சையாக பல இடங்களில் என்னை கேனயன் என்று நினைத்து வித்திருக்கிறார்கள் .பக்கத்துக்கு பக்கம் அவர் படம் போட்டா என்ன யா ஞ்யாயம் ? . லக்கி செய்த அநியாயம் ஒன்று பக்க எண்107-112. விஜயகாந்த் மாற்று சக்தி என்பதை நிரூபிக்க ஆதி காலத்து திராவிட அரசியல் ( 1957) இல இருந்து இன்ற வரை உண்டான ட்ரெண்டை விளக்குகிறார். தேவையே இல்லாத வேலை. என்ன சமாதானம் சொன்னாலும் ஒப்புக்கொள்ளவே முடியாது. இது பக்கத்தை நிரப்பும் வேலை என்றால் , இதை நான் வாசகர்களுக்கு செய்த பச்சைத்த்ரோகமாக பார்க்கிறேன். இல்லை , இது தேவை என்று அவர் நினைத்து எழுதி இருப்பார் ஆனால் , போனால் போகட்டும். இத்துனூண்டு புக் ல இதெல்லாம் எழுதினா அநியாயம். உங்களுக்கு தமிழக அரசியலில் உள்ள அறிவை சோதிக்காவா நாங்க காசு கொடுத்தோம் ? . மற்றபடி அரசியல் சார்ந்த இடங்களில் எனக்கு நன்றாகவே தெரியும் , லக்கியால் எளிதாக எழுதி விட இயலும் என்று. சமகால அரசியலை பின்தொடரும் எவராலும் தொகுத்து விடக்கூடிய விஷயம் தான் , ஆனால் சுவாரசியமா எழுவது தான் சவால். அடுத்தமுறை கம்மி விலைக்குமட்டுமே சரக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
( பி.கு : நெறைய சரக்கே அடித்து சலித்துவிட்டதால் , உருப்படியான ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் )

Wednesday, May 20, 2009

The 3 mistakes of my life - புத்தக விமர்சனம்


கோவாவில் மடுகானில் ,ரயில் வருவதற்கு சிறிது நேரம் முன் நானும் கிருஷ்ணாவும் புத்தக வேட்டையில் இறங்கினோம். என் கண்ணுக்கு இந்த புத்தகம் பட்டது ஏற்கனவே அவினாஷ் இதை படிக்க சொல்லியிருந்தான். விலை 95 தான் வாங்கி வைத்து அந்த மொக்கை ரயிலில் ஏறினேன். அங்கே உட்காரவே இடமில்லை , ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்தபோதிலும்.


மங்களூரில் நான்கு மணி நேர காத்திருப்பு , புத்தகத்தை திறந்தேன். அனைவரும் அசந்து தூங்க , ராப்பாடியாக கிருக்குபயல் போல் படித்த என் தலையில் பைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பு விழுந்தது.
மதம் , அரசியல் , கிரிக்கட் கொஞ்சம் காதல் + அருமையான கில்மா ( மஞ்சு பாதி புத்தகத்தை படித்தது விட்டு " மச்சி செம மூட் டா " என்றான் ) கலந்தால் இந்த புத்தகம். மைய கருத்துக்கு மெதுவாக வரலாம் , ஆனால் புத்தகத்தில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய உள்ளார்ந்த கருத்து ஒன்றுமில்லை , ஆனால் படிக்க படிக்க ஹெராயின் அடித்தாற்போல் ஒரு போதை. பக்கத்துக்கு பக்கம் சுவாரசியம். ஒரு மசாலா பாலிவூட் படத்திற்கும் இப்புதகத்திற்க்கும் எள்ளளவு வேறுபாடு இல்லை.


தனது வாசகர் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் அனுப்ப சேட்டன் அவர் கதையை பின்பு புத்தகமாக எழுதி அவரையும் காப்பாற்றுவதாக கதை. இந்த கற்பனையை உண்மை போல் எழுவது எல்லாம் நாங்க " ஜே ஜே சில குறிப்புகளிலேயே பார்த்தாகி விட்டது. ஆக சேட்டனை " தண்ணிய குடி தண்ணிய குடி " என்று தான் சொல்ல தோன்றியது .


மூன்று நபர்கள் மன்னிக்கவும் மூன்று நண்பர்கள் , ஓமி-இஷ்-கோவிந்து இவர்களை சுற்றி வருவது தான் புத்தகம்.


ஓமி- கோவிலில் வேலைபார்ப்பவன் , உடலை கட்டுமஸ்தாக வைத்து அவன் மாமா பிட்டூவின் பேச்சை கேட்டு இந்துத்வாவில் ஈர்க்கப்பட்டவன் .


இஷ் - தனது இடத்தில் மிக சிறந்த கிரிகட் ஆட்டக்காரன் , கொஞ்சம் முரடன். அதீத தேசப்பற்று கொண்டவன். பட்டாளம் புடிக்காமல் ஓடி வந்து ஊட்டில் திட்டு வாங்குபவன்.


கோவிந்து - கதை இவன் பார்வையில் இருந்து தான் சொல்லப்படுகிறது. மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட தொழிலதிபராக துடிக்கும் ஒரு இளைஞன். கடவுள் நம்பிக்கை கம்மி. ( Agnostic)


இஷ் உடன் சேர்ந்து கோவிந்து ஒரு கிரிக்கட் சாதனங்கள் விற்கும் கடை ஆரம்பிக்கிறான். வருபவர்கள் இஷ் இடம் சந்தேகங்களை கேட்டு பொருட்களை வாங்குகிறார்கள் , வர்த்தகம் லாபத்தில் ஓட ஆரம்பிக்கிறது. கோவில் வளாகத்தில் ஒமியின் மாமாவின் உதவியோடு இயங்குகிறது கடை. அப்பொழுது கோவிந்து கணக்கு பாடம் எடுக்க , இஷ் கிரிக்கட் கோச்சிங்கும் ஓமி உடல் ஆரோக்கியமும் மாநாக்களுக்கு 250 ருபாய் தொகையில் கற்று தருகிறார்கள். மாமாவின் ஹிந்துத்வா பேச்சு கூட்டங்களுக்கு ஓமி ஆர்வமுடன் செல்ல , வேற வழியே என்று மற்ற இருவரும் செல்கிறார்கள். அலி என்ற இயற்கையாகவே மிக அருமையான திறமையுள்ள ஒரு சிறுவன் இஷாந்திர்க்கு சீடனாக கிடைக்கிறான். அவனை ஆஸ்திரேலியா சென்று பயிற்சி கொடுக்கும் அளவிற்கு இஷாந்த் முயற்சி எடுக்கிறான். இஷாந்தின் தங்கை வித்யாவிற்கு கணக்கு பாடம் எடுக்க கோவிந்திடம் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் காதல் வயப்படுகிறார்கள். கடைசியில் பிட்டூ மாமாவின் மகன் கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட , அலியை தேடி கொண்டு பிட்டூ மாமா ஒரு மத வெறி கும்பலோடு இம்மூவரிடதிலும் வருகிறார். ஓமி தன உயிரை நீத்து ஒரு இஸ்லாமிய சிறுவனின் உயிரை காப்பாற்றுகிறான். பின்பு வித்யாவின் காதலை இஷ் ஏற்று கொண்டானா , இஷ்-கோவிந்து இணைந்தார்களா என்பது தான் கதை .



மூன்று முக்கிய தவறுகள் என்னவென்றால் , முதலில் கிடைத்த அனைத்து லாபங்களை வைத்து கோவிந்து ஒரு இடம் வாங்குகிறான் ஒரு ஷாப்பிங் மாலில் , ஆனால் அது பூகம்பத்தில் தரைமட்டமாகிறது.

கணக்கு வாத்தியாக இருந்து கொண்டே வித்யாவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் , ஒன்பது முறை உடலுறவும் வைத்து கொள்கிறான்.

உண்மையில் பெரிய தவறு , கடைசி நேரத்தில் பிட்டூ மாமாவின் ஆள் ஒருவன் அலியை வெட்டவர கொஞ்சம் காலதாமதமாக அவனை தூக்குகிறான் கோவிந்து. அந்த ஒரு நிமிட சுயநல சிந்தனையால் அலியின் கையில் பலத்த அடிபடுகிறது.

இதில் சேட்டன் நமக்கு பிடித்த பல அம்சங்களை கவர் செய்கிறார். யார் போட்டாலும் அலி சிக்சராக அடிப்பது. லக்ஸ்மனின் 287 ரன்கள் எடுக்கும் ஆட்டத்திற்கு பிறகு வ்யாபாரம் சூடு பிடிப்பது. அழகாக கோவிந்து காதல் வயப்படுவது , வித்யா முதன்முறையாக அவனிடம் இதழ் பதிப்பது. ( We kiss each other until one of us struggle for our breath , we kiss when we feel like kissing and study when we feel guilty) . பிறகு அவளது பிறந்தநாள் சமயத்தில் இருவரும் மொட்டைமாடியில் கொள்ளும் உடலுறவு என்று சூர கில்மா. ஒக்கா மக்காவென்று எழுதியிருக்கிறார். மத அரசியலை உள்ளே புகுத்தும்பொழுது பல இடத்தியல் லாஜிக் சறுக்கல்கள். பேலன்ஸ் செய்வதாக நினைத்து கொண்டு கோத்ராவையும் , அதான் பிறகு நடந்த வன்முறைகளையும் ஒரு சேர கதையில் புகுத்துகிறார். எது எப்படியோ , பிட்டூ மாமாவின் வெறியை கண்முன்னே நிறுத்துவதில் சேட்டன் பிரமாதம். கடைசியில் சுபம் போட்டு முடிக்காத குறை தான்.

படமாக எடுத்தால் பிச்சுகிட்டு ஓடும் ! தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை , ஆனாலும் இந்த புத்தகம் கிக் தான்.