Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Thursday, August 13, 2009

தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்

அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள் ஹிந்தி பாடகர்கள்.( நான் சிறு வயதிலிருந்தே பாடகிகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதில்லை , ஆக பதிவு முழுவதும் பாடகர்களை பத்தி தான். ).


ஒரு கமர்ஷியல் சினிமா பாடல்கள் ரசிகனாக இதை பதிவு செய்கிறேன். "பருவா இல்லை" என்று கொல்வதில் எல்லாம் எனக்கும் சம்மதம் இல்லை தான். இருந்தும் தமிழ் சினிமாவில் அதிகம் ஹிந்தி பாடகர்கள் இன்றளவிலும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஹரி சரண் , நரேஷ் , கார்த்திக் , திப்பு , ஹரீஷ் ராகவேந்தரா போன்ற தமிழ் பாடகர்கள் இருந்தும் சில சமயம் ஹிந்தி பாடகர்கள் பாடிய பாடல்கள் ஹிட் ஆவதால் தொடர்ந்து அவர்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


1. உதித் நாராயணன் :
தமிழை மொத்தமாக கொலை செய்கிறார். ழ வருவேனா என்கிறது , இருந்தும் பாடிக்கொண்டே தான் இருக்கிறார். ஏன் ? தோரணையில் " வா செல்லம்" கேட்டீர்களா? அதை தமிழ் பாடகர் ரஞ்சித் கூட பாடி இருந்தார் இருந்தும் திரையில் ஒலித்தது உதித் குரல் தான். கீழ் நோட்ஸில் உதித்துக்கு உள்ள கம்பீரமான குரல் வளம் ஒரு காரணம். " சஹாரா " போன்ற பாடல்களில் எந்த உயரங்களையும் அனாயசமாக தொட்டு விட்டு வந்து குழைத்து பாடுவார்.


இவர் பாடிய ஹிந்தி பாடல்களிலேயே எனக்கு " ஏ தாரா " சுவதேஷில் உள்ள பாடல் மிகவும் புடிக்கும். தமிழில் ஒரு ஹிந்துஸ்தானி சாயல் பாடல் வந்தாலே யுவன் உதித்தை கூப்புடுகிறார் , " எங்கேயோ பார்த்த மயக்கம்" ஒரு சிறந்த உதாரணம். ஐம்பதற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் தமிழில் பாடி இருப்பார்.


2. சோனு நிகம் :



தலை இன்னும் தமிழில் அதிகம் பாடவில்லை. " விழியில் என் விழியில்" என்று கிரீடத்தில் தெளிவான தமிழுடன் ஒரு குரல் கேட்டதல்லவா? சோனுவின் குரல் தான். ஹிந்தியில் இவர் பாடிய பாடல்களுக்கு எல்லாம் கண்மூடித்தனமான வெறியன் நான். எந்த சிரமமான பாடல்களையும் சொடுக்கு போடும் நிமிடத்தில் சோனுவால் பாட இயலும். இவர் இதற்க்கு முன்னால் பாடிய ஒரே தமிழ் பாடல் " வாராய் என் தோழி " ஜீன்ஸ் படம்.


3.ஜாவெத் அலி :




திரும்பவும் உச்சரியுங்கள் , ஜாவெத் அலி அதே தான். இந்த பெயரை இனி எந்த திரை இசை ரசிகனாலும் புறக்கணிக்கவே முடியாது. மச்சான் குசாரிஷ் கேட்டியா டா ? சோனு சோனு தான் டா என்றேன் , இணையத்தில் தேடி நண்பன் ஒருவன் பெயர் சொன்னான் , பாடியது யாரோ ஜாவெத் அலியாம் டா.


ஹிந்தியில் பல ஹிட் பாடல்கள் , " து முஸ்குரா " , " ஜஷ்னே பகார் " போன்ற சொக்க வைக்கும் மேலோடிகள். தமிழில்? குங்குமப்பூவும் கொஞ்சுபுராவும் படத்தில் "சின்னஞ்சிறுசுகள்" , சர்வத்தில் "சிறகுகள் நீளுது" , வாமனனில் " ஏதோ செய்கிறாய்" என்று இவர் பாடிய அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. அதிலும் முஸ்குரா பாடலில் என்னமா அசத்தி இருக்கிறார்? வளமான எதிர்காலம் உண்டு ஜாவதுக்கு .

4. சுக்விந்தர் சிங்க் :



தக்க தையா என்று அலறிய குரல். இவரது பல இந்தி பாடல்கள் பிரமிப்பூட்டும் நுணுக்கம் கொண்டவை. இவரே இசையமைத்த நஷா ஹி நஷா அருமையான பாடல். இவர் பாடிய பல பாடல்கள் இந்தியில் பட்டையை கெளப்பி இருக்கின்றன. தமிழில் கம்மி தான் போல.டிஷ்யூம் படத்தில் இருந்து " கிட்ட நெருங்கி வாடி " தான் லேட்டஸ்ட் .


5.கிருஷ்ணா குமார் குனாந்த் :



கேள்விப்பட்டது இல்லையா? கே.கே என்றால் தெரியும். பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதனில் உள்ள " காதல் வளர்த்தேன்" , 12 B படத்தில் வரும் " எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது , அந்நியனில் வரும் " அண்டங்காக்கா கொண்டைகாரி " என்ற பல ஹிட் பாடல்களும். "மொழ மொழன்னு" போன்ற திராபை பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடியதிலே " ஒரு பனித்துளி" ( கண்ட நாள் முதல் ) ," உன்னை தொட்ட" ( இதய திருடன் ) , " உயிரின் உயிரே " ( காக்க காக்க ) எல்லாமே மிக பிரபலமான பாடல்களே. தமிழ் பாடகர் போலவே தோன்றினாலும் , பல ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அங்கே இவர் மிகப்ப்ரபலம்.


6.கைலாஷ் கெர் :


கிராமிய பாடல்களா? உற்சாகமான பாடல்களா? கொஞ்சம் குத்துடன் குரலை ஏற்றி இறக்கி பாட வேண்டுமா? கூப்பிடு கைலாஷ் கெரை என்பது தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் டிரென்ட். அவருக்கு சாதரணமாகவே ஷ வராது இது தமிழிற்கும் பொருந்துகிறது.

பீமாவின் ரங்கு ரங்கம்மா , அபியும் நானுமில் " ஒரே ஒரு ஊரிலே " , லீயில் " யாரு யாரு " போன்ற பாடல்களுக்கு சொந்தக்காரர். இவர் அறிமுகம் ஆனது மஜா படத்தில் " போதுமடா சாமி" என்ற பாடலில்.

சலாம் எ இஷ்கு திரைப்படத்தில் " யா ரப்பா " பாடலை கேட்டு பாருங்கள் , அல்லது " தேரி தீவாணி " என்று இணையத்தில் தேடி பாருங்கள் ! கைலாஷ் ஸுபி பாடகர்களில் மிக முக்கியமானவர்.


7.ரூப் குமார் :


வாமணன் படத்தில் " ஒரு தேவதை " பாடல் கேட்டேர்களா? இல்லையெனில் முதலில் போய் கேளுங்கள் , ரூப் பின்னியிருக்கிறார். இவர் மின்னலே படத்தில் " வெண்மதி வெண்மதியே " கூட பாடி இருக்கிறாராம். இன்னும் நிறைய பாடல்கள் பாடலாம் மயக்கும் குரல் .


இது போக விஜய் பிரகாஷ் , குணால் காந்ஜாவாலா , ஷான் , ஹிமேஷ் போன்றவர்களும் தமிழில் பாடி இருக்கிறார்கள். பிற மொழி பாடகர்கள் மொழியை சிதைக்காமல் பாடினால் கண்டிப்பாக ரசிக்கலாம். சிதைத்தும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம்?