Sunday, March 20, 2011

ரண்டடக்கா

ஒத்தையடி பாதையில் போயிருக்கிறீர்களா? இப்பொழுதெல்லாம் வீட்டில் இருந்து இந்த ஒத்தையடிப்பாதையில் தான் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும். மழை அதிகம் பெய்யும் இடம் கெர்லிங்கன் , இரண்டு பக்கமும் முட்கள் நிரம்பியிருக்கும் ஆனால் வெகு சீக்கிரமாக என்னை கொண்டு சேர்த்துவிடும். 92 க்கு காத்திருந்தேன்.


ஹாஃப்ட்பான்ஹாஃப் என்றால் முக்கிய ரயில் நிலையமாம் யாரோ சொன்னார்கள். அதிலிருந்து நேராக கோனிங்ஸ்ட்ராசே வந்து சேர்ந்தேன் ,பக்கம் தான் நம்மூர் கடைத்தெரு மாதிரி இருக்கும். மணி எட்டிருக்குமா? இருக்கலாம். கடைத்தெருவின் ஓரங்களில் பல்வேறு கலைஞர்கள் எதேனும் கருவியை வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவர் கிளியை தலையில் வைத்துக்கொண்டே சாக்ஸ்போன் வாசிப்பார் ,நாம் காசு போட்டோம் என்றால் கிளி கீக் என்று கத்தும். கண் தெரியாத இருவர் ஒரு பியானிஸ்ட்டுடன் வயலின் வாசிப்பார்கள் , சில மெக்சிக்க பாடகர்கள் பாடுவார்கள், அப்பறம் பெரிய வயலின் வைத்து ஒருவர் வாசிப்பார். அது அவர் உயரத்துக்கு இருக்கும்.

கோனிங்க்ஸ்ட்ராசேவில் இரண்டாவது இடதில் இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கினேன். கப் கேக்குகளுக்கென்று பரத்தியேகமாக ஒரு கடையுண்டு. அதன் வாசலில் எப்பொழுதும் ஒரு நாய் குட்டி இருக்கும் அதுக்கு நானும் எனக்கதுவும் சில நாட்களாக பரிச்சயம் ,கடந்து சென்றேன். செங்குத்தாக வரும் படிகளில் இறங்கினேன். அந்த சின்னத்தெருவை நான் வந்தடைந்த போது மணி 9 இருக்குமா? கம்மியாகத்தான் இருக்கும். அவன் அங்கு தான் அக்கார்டியோன் வாசித்துக்கொண்டிருப்பான் ,அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. தினமும்ப்போல் இன்றும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். பத்து மணிக்கு மேல் பக்கத்து சந்தில் இருக்கும் ஒரு க்ளப்புக்கு போய் விடுவான் முந்தா நாள் எட்டிப்பார்த்ததில் அங்கே காமக்களியாட்டங்கள் நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். கண்ணை மூடி அக்கார்டியானை அதன் பைக்குள் சொறுகினான் ,எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகளில் பாட ஆரம்பித்தான் ,நானும் உடன் சேர்ந்து கொண்டேன் அவன் சொல்லும் வார்த்தைகளையே சொல்லிப்பாடினேன். பக்கத்தில் உள்ள பையிலிருந்து எனக்கதை கொடுத்தான். சில்லறைகளை பொறுக்கிக்கொண்டு கிளப்பை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

நான் அதை தடவிப்பார்த்தேன் ,குடுகுடுப்பை என்று சொல்லலாமா? இல்லை. இது வேறு சின்ன வயதில் இதே போல் ஒன்று பார்த்திருக்கிறேன் கைப்பிடி மாதிரி ஒரு குச்சு இருக்கும் அதன் மேல் குடுகுடுப்பைப்போல் உருண்டையாக ஒன்று.இரண்டு பக்கமும் நூலால் சின்ன ப்ளாஸ்டிக் பந்தை கட்டி விட்டிருப்பார்கள். கையை குவித்து அதை நடுவில் வைத்து உருட்ட ஆரம்பித்தேன் ரண்டட்டக்கா ரண்டட்டகா ரண்டட்டகா என்று சத்தம் போட்டது சிரிப்பாக வந்தது நிறுத்தவே முடியவில்லை. சுவற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன் ஹஹஹ்ஹா ரண்டடக்கா ரண்டடக்கா.

பேருந்து நிலையம் வரைக்கும் அதை வாசித்துக்கொண்டே போனேன். காலை முன்னே எத்தி எத்தி அதை வாசித்துக்கொண்டே ஹேய் ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டட்க்கா

அடுத்த காலை எத்தும்போதும் அதே ஹேய் ரண்டட்டக்கா ரண்டட்டக்கா ரண்டட்க்கா. பேருந்தில் யாரும் பார்த்துவிடக்கூடாதென்று கோட்டுக்குள் ஒளித்து வைத்தேன். ஒத்தையடி பாதியில் வீடு வந்தேன் ,வாசல் விளக்கு வேலை செய்யவில்லை. கதவை திறந்த நிமிடத்தில் படார் என்று மூடினேன் ,ஹே ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டடக்கா. கொஞ்ச நேரத்தில் சோர்வடைந்து விட்டேன்
92 இல் இருந்து இறங்கினேன். உள்ளே போக எனது அடையாள அட்டையை காட்ட வேண்டும் ,பெருநிறுவனம் அது. சில நாட்கள் முன்பு வந்து சேர்ந்த பொழுது அன்னாந்து பார்த்த கட்டிடங்களை இப்பொழுது பார்ப்பதில்லை. நீலத்திமிங்கலத்தின் வாய்க்குள் போவது போன்ற உணர்வை அந்த ஆட்டோமேட்டிக் கதவுகள் ஏனோ தருகின்றன. என் அறைக்கு போகும் முன்பு நான் வந்தேன் என்று ஒரு மெஷினிடம் சொல்ல வேண்டும்.8.34 க்கு வந்திருக்காய் என்றது. என் கணிணியில் இன்று செய்ய வேண்டியவற்றின் அட்டவனையைப்பார்த்தேன் , அது இருந்தது.

வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டேன் ,எனது கைகள் அளவுக்கு நீல நிற க்ளவுசை தேடியெடுத்துப்போட்டேன். அந்தப்பொடியை அளவெடுத்தேன் , அதை ஓங்கி அழுத்தி மாத்திரையாக்கும் வேலை , மெஷின் செய்யும். இங்கே அங்கே கொட்டி தொலைத்தது பொடி , கடிந்து கொண்டேன். பொடியை ஒரு சின்ன அளவிலான பாத்திரத்தில் போட்டேன். பாத்திரம் என்றால் பால் பாத்திரம் மாதிரியில்லை மேலும் கீழும் கொஞம் குண்டான ஸ்டீல் கம்பிகளால் மூட வேண்டும் ஆனால் கம்பிகளால் நிற்காது ,அதனால் அதை தாங்கிக்கொள்ள ஒரு நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்.நாற்காலியோடு கொண்டுபோய் அந்த அழுத்தும் இயந்தரத்தில் வைத்தேன். மேலிருந்து ஒரு பெரிய உருண்டை இரும்பு இதை அழுத்தும் , அதை ஏற்றி இறக்க கால் பக்கத்தில் பெடல் இருக்கும். ஒரு அழுத்து அழுத்தியாகிவிடின் அது அப்படியே நின்று கொள்ளும் , நாற்காலி தேவையில்லை பிறகு மெஷினாக அதை அழுத்த நாம் சில கட்டளைகள் கொடுத்தால் போதும்.

முடிந்தவுடன் எடுத்து பார்த்த பொழுது மாத்திரை உடைந்தார்ப்போல் வந்திருந்தது , பொடியைத்த்யாரிக்க எவ்வளவு நாட்கள் ஆயிற்று தெரியுமா என்று கத்தினேன் ,வாயைத்திற்க்காமல் என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து ஒருவன் வந்து பார்த்து சிரித்துவிட்டு போனான். நானும் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தேன். அடுத்த முறை செய்த பொழுது வடிவாக மாத்திரையை கொடுத்திருந்தது ,வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன் மூஞ்சியை திருப்பிக்கொள்வது போல் நாற்காலியிலிருந்து சரிந்தது.

ஏழாவது மாத்திரைக்கு பிறகு ஸ்டீல் கம்பியை தனியாக பிரித்தெடுக்க முடியவில்லை ,ஏன் என்றேன் மீண்டும் வரமாட்டேன் என்றது. தண்ணீர் ஊற்றிக்கழுவினேன் உள்ளே சிராய்ப்புகள் இருந்தது. சின்ன பேப்பரை நன்றாக சுருட்டி அதன் உள் அழுக்கை நீக்கினேன் ,தண்ணீர் ஊற்றி மீண்டும் கழுவியபொழுது முழுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தியில் இருப்பவனைப்போல் காட்சிகொடுத்தது. என்னை சாப்பிட அழைத்துச்சென்றார்கள்.
சாப்பிட்ட பிறகு ஒரு நடை நடப்பது அங்கே வழக்கம். முன்னே போகும் பெண்ணுக்கு மிக நீளமான தலைமுடி என்றான் பெர்ண்ட். அவள் இந்தியப்பெண் என்றான் ஃப்ரான்க். எப்படித்தெரியும் இது பெர்ண்ட். அவள் பெண்ணாயிற்றே , இந்த பில்டிங்கில் இருக்கும் அனைத்து இளம்பெண்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்றான். பொதுவாக இந்தியப்பெண்கள் இப்படி முடி வைத்திருப்பார்களா என்று கேட்டான் ,தெரியாது என்றேன். உனக்கு என்ன எழவுதான் தெரியுமோ என்று முனுமுனுத்தான். நான் அவர்களை விட்டு வேகமாக நடந்திருக்கிறேன் என்பதை வேலையிடத்துக்கு வந்ததும் உணர்ந்து கொண்டேன். பாத்திரம் காய்ந்து விட்டிருந்தது. அதை மீண்டும் இன்று அழுத்த மணமில்லை.

அவன் அங்கே தான் இன்றும் உட்கார்ந்திருந்தான் ,வழக்கம் போல் ஆள் அரவமில்லை. இன்று கூடதல் குதூகலத்துடன் எனது ரண்டட்டக்காவை எடுத்து வாசித்து காமித்தேன் அவன் குதிக்க ஆரம்பித்தேன் ,சிறிது நேரம் ஆடிவிட்டு நகர்ந்துவிட்டான் ,அவன் பின்னே சென்றேன். வராதே என்று கத்தினான் ,நான் அதை ஆட்டிக்கொண்டே அவனை அடைந்தேன்.க்ளப் வந்துவிட்டது. அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே அதை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் காலைஆட்டுகையில் என் கையிலிருந்து அதைப்பிடுங்கி அதன் மேலேறி குதிக்க ஆரம்பித்தான் எனக்கு வந்த கோபத்தில் அவனை கீழே தள்ளி விட்டேன். அதை மங்கலான வெளிச்சத்தில் பார்த்தேன் ,முழுவதுமாக சப்பளிந்திருந்தது நூல்கள் அறுபட்டு போயிருந்தன. அழுகையை அடக்கிக்கொண்டு தேவுடியாப்பைய்யா என்று தமிழில் திட்டினேன் ,அவனுடன் இப்பொழுது இன்னும் சிலர் இருந்தார்கள் ஒருவன் என் கையை ஓங்கி மிதித்தான் , நான் மிச்சமிருந்ததை பொறுக்கிக்கொண்டு வலப்பக்கம் இருக்கும் குறுக்குச்சந்தில் ஓடி வந்துவிட்டேன்.பின்னால் யாரும் வரவில்லை.
இன்றும் வாசல் விளக்கு வேலை செய்யவில்லை ,கதவைப்பூட்டாமல் எனது மெத்தைக்கு வந்தேன் கொஞ்ச நேரம் விசும்பியிருப்பேன் போல ,பிறகு தூங்கிவிட்டேன்.

காலை 8.43 க்கு வந்திருக்கிறாய் என்றது மெஷின் ,நன்றி சொல்லாமல் நடந்தேன். அட்டவனை மாறவில்லை , 50 மாத்திரைகள் தயாரிக்க வேண்டுமே! மீண்டும் பாத்திரத்தை வெளியில் எடுத்தேன். இனிமேல் அவனை பார்க்கப்போவதில்லை என்றேன் ,சரி என்பது போல் பதில் சொல்லியது. நேற்றே வேலையை முடித்திருக்கலாமே என்று ஒரு குரல் ,எனது மேற்பார்வையாளருடையது. முடித்திருக்கலாம் தான் ஆனால் 10க்கு மேல் தொடர்ந்து இதை அழுத்தினால் இதற்க்கு காயங்கள் ஏற்படுகின்றன சிறிது ஓய்வுத்தேவை என்றேன். உனக்கா என்றார் ,இல்லை சொன்னேனே இதற்க்குத்தான் ஓய்வு. அதற்க்கென்ன உயிரா இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கேட்டார். எனக்கு அவர் கேட்ட கேள்வி புரியவில்லை.

Thursday, January 20, 2011

வகுப்பறை

இன்றுடன் *அஃபீஷியலாக* எனக்கும் வகுப்பறைகளுக்குமான உறவு முடிகிறது.கொஞ்சம் தல்லாஞ்சு மனசு கிடப்பதால் இந்த பதிவு.(உங்க கெட்ட நேரம்)

வகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயரமாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.

விளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.


இதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புதமாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.


+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.

வகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.


முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது?

வெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.


நான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.


காரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே! ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.


சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.

இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.

Saturday, July 17, 2010

Inception 2010 கதை/விமர்சனம்.


பொதுவாகாவே எனக்கு அறிவியல் புனைவுகள் பிடிக்காது ,ஆக இது நான் விரும்பிப்பார்க்கும் ஒரு வகை படமல்ல.ஆனால் நோலன் தனது சிருஷ்டியால் நமது மூளைக்குள் சதுரங்கம் ஆடியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல , ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சில கேள்விகளை எழுப்பிவிட்டு விடை தேடும் முன் அடுத்தகட்ட நகர்வுக்கு தாவும் திரைக்கதை யுக்தி ,கனவுகளுக்குள் இருக்கும் நிஜங்களையும் , நிஜங்களுக்குள் இருக்கும் கனவுகளையும் ஒரு பிரிவின் மூலம் இதில் அவர் சொல்லியிருப்பதே இந்த படத்தில் என்னை பாதித்த விஷயம்.

இப்பொழுது கதை ,முதல் சீனில் சில பாதுகாவலர்கள் காப்பை ( டீ காப்ரியோ) ஒரு வயதான முதியவரிடம் அழைத்து செல்கிறார்கள் அங்கே ஒரு உரையாடலுக்கு பிறகு வெட்டிவிட்டு காப் , அர்தர் ( காப்பின் அணியில் ஒருவன்) மற்றும் சைடோ ( ஒரு தொழிலதிபர்) மூவரும் சாப்பிடும் ஒரு காட்சி வருகிறது.காப் கனவுக்குள் நுழைந்து ஆழ்மன ரகசியங்களை திருடும் வல்லமை படைத்தவன்.சைட்டோவின் ரகசியத்தை கண்டறிய ஒருவரிடம் காசு வாங்கிவிட்டு அவரின் கனவுக்குள் வருகிறான் , அங்கே அவன் தனது ஆழ்மன ( sub-conscious) உருவைமாவான (projection) தனது மனைவியை காண்கிறான்.அவளை கட்டிபோட்டு விட்டு ரகசியம் இருக்கும் லாக்கரை நெருங்கும் பொழுது மால் ( காப்பின் மனைவி) ஆர்தரை சுட்டு விடுகிறாள் அப்பொழுது தான் சைட்டோ சொல்கிறான் நாம் இருப்பது ஒரு கனவென்று.ம்ம் ஹ்ம்ம் ஒரே குழப்பமா இருக்கா? கஷ்டமில்லை ,சில விஷயங்கள் நோலன் விளக்க நேரம் எடுத்து கொள்கிறார் , எல்லா அறிவியல் புனைவுகளுக்கும் தனக்கென்று சில நியதிகள் இருக்கும்.அது போலவே இதுக்கும் , அதை முதலில் பார்த்துவிட்டால் பின்பு எளிது.

உருவமைவு என்றால் என்ன? (Projection)

*எல்லா கனவுகளுக்கு ஒரு சப்ஜெக்ட் இருப்பார் , அவரால் உருவாக்கபடும் கதாபாத்திரங்கள் தான் உருவமைவுகள் .

*கனவில் ஒருவர் இறக்க நேரிட்டால் பெரிய பாதகமில்லை , அவர் நிஜ வாழ்க்கையில் விழித்துக்கொள்வார்.

*கனவுகளை கட்டமைக்க ஒரு சிற்பி உண்டு ,நிஜத்தில் கனவுகளை வடிவமைத்து கனவு காண்பவர்களுக்கு அதை சொல்லிக்கொடுப்பவர் அவர்.

*டோட்டம் - ஒரு தாயமாக இருக்கலாம் ஒரு மூடியாக இருக்கலாம்.இதை நீங்கள் நிஜ உலகத்தில் சுத்திவிட்டீர்கள் என்றால சுத்திவிட்டு நின்றுவிடும் , கனவுலகில் நிற்காமல் சுத்தும்.இதை கனவில் அல்லது நினைவில் இருக்கிறீர்களா எனக்கண்டறிய ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.

*புதிர்நெறி ( maze) என்பது கணவுகளின் கட்டம்.இது போல எண்ணற்ற கனவுகளை ஒரு சிற்பியால் அமைக்க இயலும்.

* நிஜ உலகில் ஐந்து நிமிடம் என்பது கனவுலகில் 1 மணி நேரம்.முதல் நிலை கனவில் ஐந்து நிமிடல் என்பது இரண்டாம் நிலை கணவில் 1 மணி நேரம்.எக்ஸ்பொனன்ஷியலாக இவ்வாறு கூடிக்கொண்டே போகும்.

*கனவுக்குள் கனவு அதனுள் கனவு என்று எண்ணிக்கையே இல்லாமல் கனவுகள் கானலாம் , முதல் தளத்தில் கனவு காண்பவர் இரண்டாம் தளத்திலும் காண முடியாது.அவ்வளவே.இது போக இன்னும் சில உள்ளன , போகும் போக்கில் பார்க்கலாம்.

சைட்டோவிடம் இருக்கும் ரகசியத்தை திருட நினைத்து அவரை கனவு காண வைக்கிறாரன் காப் , அந்த கனவுக்குள் நடக்கும் கனவு தான் மேலே சொன்ன பத்தி.ஆர்தரை மால் சுட்டு கொல்வதால் அவர் விழித்துக்கொள்கிறார் எவ்வளவு முயன்றும் சைட்டோவின் முக்கியமான ரகசியத்தை காப்பால் அறிந்து கொள்ள முடியவில்லை ,கடைசியில் தப்பி செல்கிறார் ( அட , நிஜத்தில் தான்)

காப்பால் அமேரிக்காவில் தங்க இயலாது.மால் தற்கொலை செய்ததற்கு காப் தான் காரணம் என்று சந்தேகமுள்ளது.சைட்டோ காப்பை கண்டுபிடித்து விடுகிறான் அவனிடம் தொடக்கம் (inception) என்னும் ஒரு திட்டதை செய்துகொடுக்குமாறு சொல்கிறான்.தொடக்கம் என்பது ஒரு சிந்தனையை விதைக்கும் காரியம் ( to plant an idea) லேசாப்பட்டதில்லை , அது நடக்காத விஷயம் என்று ஆர்தர் மறுக்க ,காப் இது செய்ய முடிந்த ஒன்று என்று திட்டத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.
இதற்க்கென்று காப்புக்கு மூவர் தேவைப்படுகிறார்கள் , ஒருவர் தன் தந்தையிடம் படிக்கும் மானவியான அரிடேன்.இவள் ஒரு தலை சிறந்த சிற்பி.இன்னொருவன் ஏம்ஸ் , இவனால் கனவுக்குள் மற்றவரை போல் உருமாற முடியும் (impersonate) கடைசியில் யூசூப் , அதிக நேரம் தூங்க வைக்க ஒரு விதமான மருந்தை ( sedative) வைத்திருப்பவன்.

இதில் ஆர்டேனுக்கு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.அவள் கனவுகளை கட்டமைக்க கற்றுக்கொள்கிறாள் , எப்படி ஒருவர் மற்றொருவர் கனவில் தனது ஆழ்மனத்தை கொண்டு வர இயலுமென காப் விளக்குகிறான்.அப்பொழுது காப்பின் ஆழ்மனத்தின் காரணமாக மீண்டும் மால் வருகிறார் , அட்ரீனை தாக்குகிறாள் அவள் திடுக்கிட்டு விழித்துகொள்கிறாள்.

பிறதொருமுறை காப்பின் கனவுக்குள் நுழைகிறாள் அர்டேன் ,காப் கனவு முழுவதும் மால் இருக்கிறாள் , நினைவுகளாக.இல்லாத ஒருவரை நாம் நினைவில் தானே சிறை வைப்போம்? அப்படி தனது காதலியை தன் நினைவில் சிறை வைக்கிறான்.எனக்கு படத்திலேயே இது பிடித்த பகுதி , காப்பால் ஒரு கனவை கட்டமைக்க முடியாத காரணத்தை அர்டேன் கண்டுகொள்கிறாள் , அவனின் கனவும் கனவுக்குள் இருக்கும் நினைவும் அவனது காதலி தான்.தன்னால் எந்த கனவையும் தனது காதலி இல்லாமல் கட்டமைக்க முடியாத நிலையில் காப் இருக்கிறான்.தொழிலுக்கு இது பலத்த ஆபத்து , இதை மற்றவர்களிடம் சொல்லுமாறு அர்டேன் வலியுறுத்துகிறாள்.இது ஆபத்து என்பதால் அவன் சொல்ல மறுக்கிறான்.இத்தோடு அவர்கள் தங்களது திட்டத்துக்கு தயாராகிறார்கள்.

திட்டம் இது தான் , ஃபிஷர் என்னும் ஒரு மாபெரும் பணக்காரன் அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியம் அதில் அவன் தந்தை இறந்து விட அவன் காட் ஃபாதருடன் இருக்கிறான் , தனது சாம்ராஜ்ஜியத்தை தானே சிதைத்துக்கொள்ளும் ஒரு சிறு சிந்தனையை அவன் தலைக்குள் போட வேண்டும்.விமானத்தில் 10 மணி நேரம் ஒன்றாக செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கிறது.

முதல் கட்ட கனவில் அனைவரும் ஃபிஷரை கடத்துகிறார்கள்.ஃபிஷரின் ஆழ்மனம் கனவுத்திருட்டுக்கு வருபவரை எதிர்க்க தயார்செய்யப்பட்டுள்ளது.அதனால் துப்பாக்கி ஏந்தி இவர்களை ஃபிஷரின் ஆட்கள் தாக்குகிறார்கள் , இதை கண்டுபிடித்திருக்க வேண்டியது ஆர்தரின் கடமை
அதை சரிவர செய்யாததால் ஆர்தர் மேல் கோபம் கொள்கிறான் காப்.இதனூடே தாக்குதலில் சைட்டோக்கு பலத்த அடி , அவனை கொன்று விடலாம் விழித்துக்கொள்ளட்டும் என ஆர்தர் சொல்கிறான்.

அப்பொழுது தான் காப் ஒரு ரகசியத்தை வெளியிடுகிறான் , இந்த முறை மருந்து கொஞ்சம் வலுவானது கொல்லும்பட்சத்தில் விழித்துக்கொள்ளப்போவதில்லை , எந்த கனவு நிலையில் யார் இறந்தாலும் அவர்கள் முழுமறதி நிலை ( limbo) என்னும் சூனியத்திற்கு போய்விடுவார்கள்.கனவிலிருந்து எந்திரிக்கும் பொழுது அவர்களுக்கு மனம் பிளாங் அவுட் ஆகியிருக்கும்.இதை கேட்ட அனைவரும் கோபம் கொள்கிறார்கள் , வேறு வழியின்றி மீண்டும் திட்டத்தை தொடர்கிறார்கள்.

ஈம்ஸ் , ப்ரொவுனிங் ( ஃபிஷரின் காட்ஃபாதர்) போல் உருமாறிக்கொண்டு தன்னை இவர்கள் துன்புறுத்துவதாக சொல்லி ஃபிஷரிடம் போகிறான்.இருவரையும் கட்டிப்போடுகிறார்கள்.ப்ரொவுனிங்க் ஃபிஷரின் தந்தை வேறொரு உயில் எழுதி வைத்ததாகவும் அதில் இந்த சாம்ராஜ்ஜியத்தை கலைக்க சொன்னதாகவும் சொல்கிறான் , தன்னுடைய சொந்த உழைப்பில் இன்னொன்று உருவாக அவனது தந்தை ஆசைப்பட்டார் என்றும் சொல்கிறான்.ஃபிஷரின் ஆட்களின் தாக்குதல் அதிகமாகிறது ,அடுத்த கட்ட கனவுக்கு இவர்கள் தயாராகிறார்கள்.முதல் கனவு யூசூப்புடையது.

இரண்டாம் கட்ட கனவு ஆர்த்தருடையது , ஆர்த்தரும் அர்டேனும் சேர்ந்து வடிவமைத்தது.இரண்டாம் கட்ட கனவு ஒரு ஹோட்டலில் நடக்கிறது , அங்கே ஃபிஷர் கனவில் இருப்பதாக காப் அவனிடம் சொல்கிறான் , அவனை காப்பாற்ற வந்ததாகவும் சொல்கிறான் , இந்த கடத்தலுக்குப்பின் ப்ரொவுனிங் இருக்கலாம் என்னும் சந்தேகத்தை ஃபிஷரின் தலைக்குள் விதைக்கிறான்.ஃபிஷரின் சொந்த மனம் ப்ரொவுனிங்கை கெட்டவனாக காட்டுகிறது , ஆக ப்ரொவுனிங்கின் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள கனவு கான்போம் வா என்று அப்துல் கலாம் போல் அடுத்த கட்ட கனவுக்கு ஃபிஷரை தயார்படுத்துகிறான் காப்.ப்ரொவுனிங்கின் கனவுக்குள் செல்வதாக சொல்லி அழைத்துசெல்கிறார்கள்.மூன்றாவது கட்ட கனவு ஈம்சினுடையது.

மூன்றாம் கட்டம் ஒரு பனிமலையில் நடக்கிறது , ப்ரொவுனிங்கின் ஆட்கள் தாக்க வருவதாக ஃபிஷரின் ஆழ்மனம் உருவமைக்கிறது.இங்கே மால் வருகிறாள் , அவளை கொல்லவும் முடியாமல் காப் தடுமாறுகிறான்.அவள் ஃபிஷரை கொன்று விடுகிறாள் , இனி ஆட்டம் அம்பேல் என முடிவு செய்கிறார்கள் , இல்லை இன்னுமொரு ஆழத்துக்கு சென்றால் அவனை மீட்டெடுக்கலாம் என்கிறாள் ஆர்டேன்.அவள் கனவு கான்கிறாள்.சைட்டோவும் இறக்கிறான்.

நான்காம் கட்டம் தான் முக்கிய திருப்பமே , மீண்டும் மால்லை எதிர்கொள்கிறான் காப்.உண்மையை சொல்கிறான் , மாலும் காப்பும் கனவின் அடி ஆழத்துக்கு சென்று பல காலம் வாழ்ந்து வருகிறார்கள் இது கனவென்றே மாலுக்கு தெரியாமல் இருக்கிறது.அவளுக்கு புரிய வைக்க அவள் தலைக்குள் இது உண்மையான நிலை இல்லை என இன்ஷெப்ஷன் செய்கிறான் காப்.இதனால் தான் இன்ஷெப்ஷன் சாத்தியம் என்றும் காப்புக்கு தெரியவருகிறது.துருதஷடவசமாக அவள் நிஜத்திற்க்கு வந்தும் இது அழியவில்லை நாம் கனவில் இருக்கிறோம் என்றே நினைத்துக்கொள்கிறாள்.இதன் காரணமாக தற்கொலையும் செய்துகொள்கிறாள்.இந்த உண்மையை சொல்லும்போது (நான்காம் கட்ட கனவில்) காப்பை குத்திவிடுகிறாள் மால் , அர்டேன் மாலலை சுட்டுவிடுகிறாள்.ஃபிஷரை ஒரு மாடியிலிர்ந்து தள்ளிவிட்டு சாவடிக்கிறாள்.நான்காம் நிலையில் செத்தால் எங்கே எந்திரிப்பான்? அதே , அதே! மூன்றாம் நிலையில் எந்திரிக்கிறான் , ஒரு வழியாக தலைக்குள் சிந்தனையை விதைக்கிறார்கள்.அர்டேனும் மரித்து மூன்றாம் நிலைக்கு போகிறாள்.இங்கே இவர்கள் இறந்து அடுத்து இரண்டாம் நிலையில் ஆர்தர் லிஃப்ட்டை வெடிக்க செய்து சாவடிக்கிறான் , ஆக முதல் நிலையில் விழிக்கிறார்கள்.


இப்பொழுது தான் முதல் சீன் வருகிறது , சைட்டோவிற்கு வயதாகி விடுகிறது காரணம் அவன் லிம்போவில் இருக்கிறான்.தான் லிம்போவில் இருப்பதை உணர்ந்து கொண்டே காப் அவனிடம் செல்கிறான்.நாம் கனவில் இருக்கிறோம் என்று சொல்லி சாவடித்துக்கொண்டு நிஜத்துக்கு திரும்புகிறார்கள் , இமிகிரேஷனில் பிரச்சனையில்லாமல் வீடு சென்று தன் குழந்தைகளை காண்கிறான் காப்.

கடைசி காட்சியில் டோட்டம் சுத்துகிறது , நிஜமா கனவா என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு விடப்படுகிறது.


நோலனின் இந்த படம் படைப்பு என்னும் பட்சத்தில் தனிப்புதுமையுடைய ஒன்றாகவும் , அதீத நேர்த்தியுடைய ஒன்றாகவும் பாராட்டப்படும்.இதில் நான் கதையில் இருக்கும் சில கேள்விக்குறிய அம்சங்களை சொல்லாமல் , பொதுவான ஒரு கதையை தான் எழுதியிருக்கிறேன்.இந்த கதையை அறிவியல் புனைவாக அல்லாமல் ஒரு காதலனின் ஏக்கமாகவும் ஒரு தந்தையின் பாசமாகவும் பார்க்கலாம்.தான் கற்ற அறிவியல் தன் மனைவின் உயிரை பலி வாங்கும்போதும் சரி , தன் குழந்தைகளின் முகத்தை தன்னால் பார்க்க இயலாமல் போகும்போதும் சரி , டீ காப்ரியோ பிரமாதமாக நடித்தியிருக்கிறார்.தனது காதலியை நினைவில் சிறை வைத்துவிட்டு உண்மையை மறக்க நினைத்து தோற்கும் ஒரு காதலனின் கதையாக இதை பார்க்கிறேன்.எப்படியாயினும் இதன் நேர்த்திக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.



Friday, June 11, 2010

பிட்டோகோரஸ் தியரம்


சரியாக நினைவு இருக்கிறது , நான் பத்தாம் கிளாசில் தான் பிட்டு முதல் வாதத்தை கடைபிடித்தேன்.இந்த பொருள் முதல்/கருத்து முதல் வாதம் போல் பிட்டு முதல் வாதம் கஷ்டமில்லை.எளிதாக புரியும் மொழி நடையில் நாமளே எழுதிக்கொள்வது தான் பிட்.

நான் பத்தாம் கிளாசில் எல்லாம் அம்புட்டு தைரிய சாலி இல்லை ( இன்றளவிலும் இல்லை தான்) ஆனால் எங்களுக்கு வழக்கமாக எடுக்கும் புவியியல் ஆசிரியை நீண்ட விடுப்பு எடுத்து விட்டார் , அவருக்கு பதில் படு திராபையாக எடுக்கும் ஒரு ஆசிரியை வந்தார்.அந்த மாடெல் பரீட்சையில் ஒரு எழவும் தெரியவில்லை.அப்பொழுது மைக்ரோ செராக்ஸ் , சின்ன பிட் எல்லாம் என் பள்ளியில் அம்புட்ட்டு பிரசித்தி இல்லை.நண்பன் ஒருவன் ஓம் , பிள்ளையார் சுழி எல்லாம் போடு பெரிய நோட்டில் இருந்து கிழித்து பிட் எழுதி கொண்டுவந்திருந்தான்.எல்லாரும் எழுதி முடித்த பிறகே எனக்கு கொடுத்தார்கள் அதை.எனக்கு எழுத நேரமில்லை , அதை அப்படியே கட்டி பேப்பருடன் கொடுத்திவிட்டேன். டின் கட்டிவிட்டார்கள்.

ஆனால் நணபன் ஒருவன் படு நேர்த்தியாக பத்தாம் கிளாசிலேயே பிட் அடிப்பான். வரலாற்று பாடத்தில் ஒவ்வொரு பிட்டையும் ஒவ்வொரு இடத்தில் வைப்பான்.இடம் மறந்து விட்டால்? எந்தெந்த பிட் எங்கெங்கு உள்ளது என்பதற்க்கே ஒரு பிட் எழுதுவான்.அது எங்கே இருக்கும் என்னும் செய்தியை கையில் எழுதிக்கொள்வான். இப்படியாக உலகப்போரை உள்ளாடைக்குள் வைத்த புகழ் அவனையே சாரும்.

அதன் பிறகு நான் +1,+2 ஒரு ஜெயிலில் படித்தேன் அங்கே இதுக்கெல்லாம் கசையடியில் இருந்து அனைத்து அநாகரீக தண்டனைகளும் உண்டு.அதற்கு பயந்தே அடிக்கவில்லை.

என் கல்லூரியில் ஜீவிக்க ,காற்று , நீர் , சாப்படு , தங்குமிடம் போல் பிட் அடிப்பது ஒரு இன்றியமையாத விஷயம்.முன்னாடி இருந்தவர்களி பற்றி தெரியாது , ஆனால் நான் படித்த 4 ஆண்டுகளில் எனக்கு தெரிந்து ஒரு வகுப்பில் ஒன்றிருவரை தவிர அனைவரும் அடிப்பார்கள் என்றே சொல்லலாம்.

பல நேரங்களில் வகுப்பில் அனைவருமே ஒரே பதில் எழுதி ஆசிரியரை மண்டை காய வைத்திருக்கிறோம்.நம்க்கு தெரிந்த பதிலை கேள்விதாளில் எழுதி விடலாம் , அடுத்தவனிடம் அவனுக்கு தெரிந்ததை எழுதசொல்லி மாற்றிக்கொள்ளலாம்.பிட் பேப்பரை பார்த்து சந்தேகப்படுகிறார்களா? முந்தய கேள்விதாளில் பிட் எழுதி ,அதை எடுத்துக்கொண்டு போய் விடலாம். பார்ப்பவர்கள் நாம் கேள்வித்தாளில் விடை எழுதி பழகியதாக நினைப்பார்கள்..கொஞ்சம் படித்து கொஞ்சம் பிட் எழுதுதல் நலம். இல்லாவிடின் காலை பரீட்சைக்கு மதியத்தில் எழுத வேண்டிய பதிலை எழுதும் அபாயம் உள்ளது.

நிற்க.

பிட் அடிப்பது சரியா தவறா? இது அறிவு திருட்டு இல்லையா? நம்மிடம் இல்லாத அறிவை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு நேர்மையற்ற செயல் தான்.இந்த கேள்விக்கு என்னிடம் விடையே இல்லை. இங்கே நான் முதுகலையில் பல திறந்த புத்தகம் பரீட்சைகளை எதிர்க்கொள்கிறேன்.பார்த்து எழுதவது என்னும் தேவையே இங்கே இல்லை.இந்திய கல்விமுறையில் அப்படியா என்ற கேள்விக்கு பொதுவான விடை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.ஆனால் என் கல்லூரியை வைத்து என்னால் தீர்க்கமாகவே பேச முடியும்.ஒரு ஐம்பது எண்களை கொடுத்து இந்த கனிமத்துக்கு இந்த எழவு குனம் இதை மொன்னைத்தனமாக மனப்பாடம் செய் இதை இப்படியே எழுது போன்ற கேள்விகள் உலக நாடுகளில் எங்கேனும் கேட்கப்படுகிறதா என தெரியவில்லை.பெரும்பாலுமான சூத்திரங்கள் பெரியது , சமன்பாடுகள் பல்லை உடைக்க கூடியது நடக்கும் தொழில்நுட்பங்கள் தேர்ந்த அனுபவத்தால் மட்டுமே மனதில் நிற்க கூடியது , இதை அனைத்தயும் நினைவில் நிறுத்து பின் வாந்தியெடு என்னும் அதிகாரத்தனமான கேள்விகள் கல்விமுறையை அதள பாதாள்த்துக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டுவை.

அறிவு நேர்மை இருப்பது அவசியம்.அதனினும் அவசியம் அதை உருவாக்கும் கல்வி முறை என்று நினைக்கிறேன்.இதை நான் முடிவாகவோ நியாயப்படுத்தவோ எல்லாம் சொல்லவில்லை.இப்படியான பாடத்திட்டம் இருக்கும்வறை இது ஏதோ ஒரு வழியில் நடக்கும். மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்பது போல் ஒரு சூழலில் எல்லாரையும் தள்ளிவிட்டு தப்புசெய்யதூண்டும் ஒரு விஷயத்தை மறுபரிசீலனையாவது செய்ய வேண்டும்.

Wednesday, June 9, 2010

குறுமலாப்பேரி கிரிக்கெட் டீம்

அன்றைக்கு என்று பார்த்து உச்சி வெயில் மண்டையை பிளந்தது என்று சொன்னால் அது பொய்யாகிவிடும் ,என்றைக்கும் போல் அன்றைக்கும்.ஆனால் குறுமலாப்பேரியில் காற்றுக்கு பஞ்சமே கிடையாது.சில்லென்று முகத்தில் அடிக்கும் , மூட்டையை சைக்கிளில் கொண்டு வரும் காளி அண்ணன் இதுக்கென்றே சில நேரம் எதிர் காற்றில் கூட வண்டி ஓட்டுவதுண்டு.

காத்து தெக்க பாத்து தாம்ல அடிக்கு , அப்ப்றம் ஏன் ஸ்டிக்க அங்குன கொண்டு போய் நடுத? என்ற கூப்பாடோடு வந்தார் அண்ணன் குமார் , கேப்டன் குமார் , கடுதக் குமார்.கடுதக் என்றால் என்ன என்று இன்றளவும் யாருக்கும் தெரியாது .

எலே செத்த மூதி சாரம் கட்டி ஆட வராதன்னு எத்தனை தடவைல சொல்ல , நாளைக்கு மேட்சாட வரலையோ டே? என்றான் விக்கட் கீப்பர் பிரியன்.

சாரம் கட்டி தானடே கீழப்பாவூர்ல மணியன்னே பேட்டிங் புடிச்சாப்புல , அவுக கப் வைக்காங்கன்னா அவுக மட்டும் சாரம் கட்டி ஆடலாமோ , பிராக்டிஸ் தாண்டே இது.ஸ்டிக்க நட்டாச்சு டீம் பிரிங்கடே.

டீம் பிரிப்பது அசாதாரனமான விஷயம்.அங்கே இருப்பவர்களில் இரண்டு சிறுசுகளைதான் எப்பொழுது பிரிக்க சொல்வார்கள்.இரண்டு பேரும் முதலிலேயே காட்டானை எடுக்க துடிப்பார்கள்.காட்டான் சூப்பர் ஃபாஸ்ட் குறுமலாப்பேரி எக்ஸ்பிரஸ்.பந்தை பள்ளிக்கூட கிரவுண்டில் தூக்கி அடித்து தொலைத்த ஒரே ஜந்து அவன் தான்.அதன் பிறகு மணி , முப்பிடாதி , சசி , சோலை , மருது , வெள்ளைச்சாமி , வேல்ப்பாண்டி,இப்படி கடைசியில் குமார்.குமாருக்கு பேட்டிங் வராது , பவுலிங்க சுத்தம்.இது வரை ச்லிப் கேட்ச் மட்டும் அவர் எடுத்ததில்லை , சிலிப்பை தவிர எங்குமே நிக்க மாட்டார் உருவம் அப்படி.கேப்டன் எப்படி? ஏனென்றால் பார்ட்டி டப்பு பார்ட்டி. கப் நடத்த , நுழைவுக்கட்டனம் கட்ட ,ஸ்டிக் வாங்க , பேட் வாங்க , வாட்டர் பாக்கெட் வாங்க , குச்சி ஐஸ் வாங்க எல்லாவற்றுக்கும் அந்த ஊரில் காசு கேட்டார்கள்.குமாரிடம் இருந்தது.

நாளை நடக்கப்போகும் செமியில் தான் குறுமலாப்பேரி வெர்ஸஸ் கீழப்புலியூர்.இன்னொரு செமியில் மேலப்பாவூர்/சுரண்டை.எப்பொழுதுமே கப் நடத்துபவர்கள் ஃபைனல்ஸ் வருவார்கள்.ஆக செமியில் ஜெயித்து வருபவர்கள் கண்டிப்பாக திரும்பி தங்களுக்குள் மோதிக்கொள்ள் வேண்டும்.அப்போ என்ன எழவுக்கு செமின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்கப்புடாது!

ஏ பந்த தேடுறே , எவ்வளவு நேரம் அங்கனையே நிப்ப , இது சசி.

ஏல் நொட்டி , பேசுதேல்ல , ரப்பர் செருப்புதாம்ல போட்டிருக்கேன் அடிச்சேல்ல , வந்து எடுத்துக்குடு என்றான் முப்பிடாதி.

அன்று ஒருவழியாக இருந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக தொலைத்து விட்டதாலும் , பாலாஜி அண்ணன் கடையில் இதுக்குமேல் ரப்பர் பந்து இல்லாததாலும் ஆட்டை நின்று போனது.செமி போவதர்க்குண்டான ஸ்ட்ராடஜி பேச்சுக்கள் ஆரம்பமானது.

ஏ காட்டான் அன்னிக்கு மாதிரி விசுறாதே டே விக்கெட் வேனும் , நீ எல்லா பந்தையும் வெளிய அடிக்க பார்த்தேன்னா அப்பறம் ஸ்டிக் புட்டுக்கும்.அன்னிக்கி புட்டுக்குச்சு பார்த்தீயளா சத்திரம் புவலிங்கில ஹா ஹா என்று கடியில் இருந்த காட்டானுக்கு வெறியேத்தினான் வேல்ப்பாண்டி.

ஏல் அவன் எறிஞ்சாண்ட்டே சத்தியமா சொல்லுதேன் , நீ அம்பயர் அண்ணன் கிட்ட வேனும்னாலும் கேட்டுப்பாரு , அன்னிக்கு காலேஜ் படிக்கில்லா சங்கர் அண்ணே அதான் நின்னுச்சு.

கடுதக் , புரோட்டா கடை தொரந்திருக்கோடே? என்றான் வெள்ளை. நீ காசு வெச்சிருந்தா தொரந்திருக்கும்டே என்று இன்று கடுதக்கிடமிருந்து உஷார் பதில் வந்தது. பல வயிறை புரோட்டா போட்டு நிறப்பிய வள்ளலவர்.

ஏ ஒன்னும்மில்லடே புலியூர்ல மணி , சிங்கமுத்து , தொரை ,மாடு நாலு பேர் விக்கட் எடுத்துட்டா போதும் என்று சசி சொல்லிமுடிப்பதற்குள் வேல் கத்த ஆரம்பித்தான் , ஏல் மாடு என்ன விளையாடினான்? போன கப்புல எல்லாம் கீப்பர் கேட்ச் , அம்சமா எடுக்கலாம்டே நிக்க வெச்சு. ஏல் காட்டன் ஆஃப்ல நாலு பந்தாவது போடு ஃபர்ஸ்ட் ஓவர் எல்லாமே காலுக்குள்ள எறக்க பாக்காத.

ஏ மணி , கிட்ட வந்தி நில்லுடே , சிரிலங்கால எல்லாம் நிப்பாங்க தெரியுமா பாஸ்ட்ட்கே நிப்பாய்ங்கடே.


ஏல் அவன் எம்புட்டு ஏறியுதான் தெரியுமா? கீப்பிங்க் நிக்கியா நீ? பேசனும்னு பேசாத , ரப்பர் பந்துனாலும் பட்டா வலிக்காதோல உனக்கு?

சரிடே நான் சிலிப் நிக்கேன் இந்த வாட்டி , போன வாட்டியே குமார் அண்ணே மூனு காட்ச் மிஸ் பன்னிட்டாப்புல என்றான் முப்பிடாதி.

முப்பிடாதி , நீ கேட்சே விட்டதில்லயோ டே? ராஜா பவுலிங்கில லாங்குல விட்டியே டே போன ஃபைனல்சுல

கடுதக் , ராஜா போன ஃபைனல் விளையாடவே இல்லை என்று மேலும் வெந்த புல்லில் ஆசிட்டை ஊற்றினான் முப்பிடாதி.சிறிது நேரம் மவுனம்.குமாருக்கு கோபமோ என்று உள்ளூர வெள்ளைக்கு பயம் , புரோட்டாக்கு பங்கம் விளைவித்த முப்பிடாதியை கருவிக்கொண்டான்.காட்டான் மவுனத்தை கலைத்தான்.

கொடுக்கமாட்டாங்கடே கீழப்பாவூர் காரைங்க அவ்வ்ளவு சீக்கரம் கீப்பர் கேட்ச் ,அம்பயரிங்கிலையே நம்ம்ள தொரத்த பாப்பய்ங்க.நம்ம ஃபைனல் வந்தா டஃப் அவங்களுக்கு.

சுத்தி இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்தது.சரி இருந்தாலும் காட்டான் மனசு நோக வேண்டாமே என்று விழுந்து விழ்ந்து சிரித்தார்கள்.

டேய் என்னடே குறைச்சல் சொல்லுடே ஒருத்தன் சொல்லுடே , ம்ம் ஹ்ம்ம் சிரிப்பொலி நிக்க வேண்டுமே

Saturday, June 5, 2010

பிராஹாவில் கோயிஞ்சாமி


உங்களில் யார் செய்த பாவமோ எனக்கு எழுத நேரம் கிடைத்திருக்கிறது.

வார்சாவில் நிறைய விடுமுறை நாட்கள் உண்டு.அது போக நான் கல்லூரி இருக்கும் திசைக்கு மாற்று திசையில் தான் இந்த ஆறு மாதம் தலையனையை வைத்து படுத்தேன்.மே மாத விடுமுறையில் ( அது என்ன மே மாத விடுமுறை? அதெல்லாம் தெரியாது , விடுமுறை அய்யா) என் வகுப்பில் எட்டு பேர் செக் நாடுக்கு செல்வது என முடிவானது , நான்கு ஆண்கள்.மிச்சம் நான்கு பெண்கள்.விகிதாச்சாரம் தானாக மட்டுமே அமைந்தது!

போகும் பொழுது ஒரு பாதி வித் அவுட்டில் போனோம் , வண்டியில் இருக்க இடம் உண்டு ஆனால் அமர அல்ல.முதலில் பப்பரப்பே என்று உக்காந்தாச்சு. பிறகு டிக்கட் வாங்கிய ஒருவர் மாத்தி ஒருவராக வந்து எழுப்பிவிட ஆரம்பித்தனர்.கடைசியில் இரண்டு இருக்கையில் ஐந்து பேர் சமாளித்து போலந்தில் எல்லை வரை வந்து விட்டோம்.ரயிலில் நகர இடமில்லை.கடைசியில் போலந்து எல்லையில் இருந்து செக் தலைநகர் ப்ராஹாவிர்க்கு வேறு ரயிலில் தாவிக்கொண்டு போனோம்.


உண்மையில் பிராஹா எழில் கொஞ்சும் நகரம்.முதலில் நாங்கள் போனது பிராஹா கோட்டைக்கு , உலகிலேயே மிகப்பெரிய கோட்டையாம்.பசி வயிற்றை கிள்ளியதால் அதை அடுத்த நாளுக்கு வைத்துவிட்டு வந்துவிட்டோம்.மதியம் பழைய நகரம் , புதிய நகரம் என்று அனைத்து இடத்தையும் சுத்தி காட்ட ஒரு கைட் கிடைத்தார் , இலவசமாக! பிரித்தானிய ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவமாடியது.வரலாறு , கலை , இலக்கியம் என அனைத்தையும் பிரித்து மேய்ந்தார்.

அவர் சொன்னதில் இரண்டு முக்கியமாக பட்டது , ஒன்று வென்செலாஸ் சதுரம் இன்னொன்று யூத கல்லறைகள்.வென்செலாஸ் சதுரத்துக்கு ஒரு வரலாறு உண்டு.1969இல் ஜான் பலாக்ஸ் என்னும் மாணவர் நம் முத்துக்குமார் போல் தன்னையே தீக்கு இரையாக்கினாராம்!

1968க்கு பிறகு டூப்செக் செக் குடியரசுத்தலைவராக இருந்த காலம் பிராஹாவின் வசந்தமாம். அவர் குடிமக்களுக்கும் , பத்திரிக்கையாளர்களுக்கு பல சுதந்திரம் அளிக்க ஆரம்பித்தார்.இன்னும் பத்து ஆண்டுகளில் கம்மியூனிச ஆட்சி முறையில் இருந்து விலகி ஒரு முழு ஜனநாயகத்தை நோக்கி நகர்வோம் என்னும் பிரகடனம் வைத்தார்.நாட்டு மக்களிடம் மிக நல்ல வரவேற்பு இருந்தது.சேதி தெரிந்த உடன் சோவியத்திலிருந்து டேங்க்குக்ள் உருள ஆரம்பித்து விட்டதாம்! இதை எதிர்த்து தான் அறவழி போராட்டத்தில் ஜான் பலக்ஸ் மற்றும் ஜான் சஜிக் என்னும் இரண்டு மாணவர்க்ள் தங்களையே சாம்பலாக்கிக்கொண்டனர்.

அதன் பிறகு சார்லஸ் பிரிட்ஜ் மற்றும் பல இடங்களில் நான் தன்னந்தனியாக சுத்தி திறிந்தேன். ஒருவர் வித்தியாசமான வாசிப்பு கருவியில் உலகத்தர இசையை கொடுத்து கொண்டிருந்தார் , மற்றொரு பக்கம் நம்மூர் பொம்மலாட்டம் போல் ஒரு கலை.அதையும் ரசித்து கண்டுகளித்து விட்டு வீடு திரும்பினேன்.அடுத்த நாள் எல்லோரும் கோட்டை போக அடம் பிடித்தார்கள் ,அந்த புன்னியவான் கோட்டையை எஙகயோ உச்சியில கட்டி வெச்சிருக்கான் , எனக்கு ஏறுவதர்க்குள் டவுசர் கழண்டுவிட்டது.நண்பன் ஒருவன் மட்டுமே ஒரு மூச்சில் ஏறினான்.அட என்று அடுத்ததாக நான் ஏறி பக்கத்தில் போனால் கைத்தாங்கலாக் புடியேன் என்றான் , சரி அவனும் தான் எவ்வள்வு நேரம் வலிக்காத மாதிரியே நடிப்பான்.

ஒரு தெரு முழுவதும் ஷாப்பிங்கிற்கென ஒதுக்கியிருந்தார்கள் , செதேன் தொலைந்தேன் என்று வேறு இடம் ஓட ஆரம்பித்தேன்.அங்கே நின்றவர்கள் கடைசியாக கொடுத்த ஆய்வறிக்கைப்படி அங்கே மட்டுமே நான்கு மணி நேரமாம்.முந்தய தினம் யூத கல்லறைகள் பற்றி கேள்விபட்டபடியால் அங்கே போக நினைத்து வழிகண்டுகொண்டு போனேன்.ஒரு சுவர் அது முழுக்க நுனுக்கி நுனுக்கி எழுதபட்ட பெயர்கள் சுவரையே பல நூறு பெயர்கள் மறைத்தன. இது போல் பல சுவர்கள் ,இரண்டு அறை முழுவதும்! அனைத்தும் நாஜிக்க்ள் படுகொலை செய்யபட்ட யூதர்களின் பெயர்கள்.

நாஜி வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கபட்டிருந்தது.ஒவ்வொன்றிலும் ஒரு வித செய்தி , வெறுமை. பெரும்பாலான குழந்தைகள் மனபிறழ்வு உடையவர்களாம். அங்கே ஒரு குழந்தை ”ஷவர்” காட்சியை ஓவியமாக்கியிருந்தது , அது என்ன என்று "Life is beautiful" படம் பார்த்தவர்களுக்கு தெரியும் .இதயம் கணக்க வெளியேறினேன்.


அடுத்து செஸ்கி குர்ம்யோவ் என்ற சின்ன நகரத்துக்கு பயணமானோம்.அநியாயத்துக்கு அழகு , ட்ரெட்லின்க் என்று ஒரு செக் உணவு வைக உண்டு , ரசித்து அனைவரும் சாப்பிட்டோம்.இது போக எனக்கு கோடுலிச் என்று ஒரு வகை பிரட்டும் மிகவும் பிடித்திருந்தது.நதிக்கரையோரம் அந்த கால செக் உணவு வகைகள் கொடுக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம்.சைவமே ஆனாலும் மிக வித்தியாசமான ருசி.க்ரும்யோவின் அழகு எளிதில் வார்த்தைகளில் சொல்ல முடியாது ,பல வயதான கொரிய சீன தம்பதிகளை பார்த்தேன்.சில முக்கியமான புத்துகங்கள் வாங்கினேன்.ஃப்ரான்ஸ் கஃப்காவின் சிலையை அங்கே பார்த்தும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விபட்டிருந்தும் அவர் புத்தகம் எதுவும் வாங்கவில்லை.

வெளியேறிய பொழுது ஜான் சாஜிக்கின் வாசகம் ஒன்றை காண நேர்ந்தது

But I want a lot for you, for everyone, so I have to pay a lot. Do not lose your heart after my sacrifice, tell Jacek to study harder and Marta too. You must never accept injustice, be it in any form, my death will bind you. I am sorry that I will never see you or that, which I loved so much. Please forgive me that I fought with you so much. Do not let them make me a madman.

Say hi to the boys, the river and the forest

Friday, February 12, 2010

விண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்


இது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.

விண்வெளி வீரர் என்ற பெயர் இவருக்கு வர என்ன காரணம் என்பதை நானறியேன். விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.

விண்வெளி ஒரு பிரபல ஆராய்ச்சி கூடத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.இவரை ஞான குருவாக ஏற்று கொண்டு கோடிக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் இருக்கின்றனர் .

வகுப்பறையில் அவர் பாடம் நடத்த அனைவரும் நித்திரை கொள்ளும் வேளையில் திடுமென எல்லாரையும் ஒற்றை சொல்லாடலில் எழுப்பினார்.

எதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார், ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் தனது செய்கைகளில் உள்ள குளறுபடியால் Shipping turn over ஐ இழந்துவிட்டது என்றார். சரி தான் என்று மீண்டும் நித்திரைக்கு போவதற்குள் அதற்க்கு ஞான குரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் "தம்பி அந்த கட்டுமான கம்பனி தனது கப்பலை சரியாக கரையில் நிறுத்தி வைக்கவில்லை.ஆதாலால் அதை ஸ்டியரிங் போட்டு திருப்பையில் பிரச்சனை இது தான் Shipping turn over problem" என்றார்

அந்த மாபெரும் ஆராய்ச்சி கூடம் இவரின் அறிவை பயன்படுத்திக்கொள தவறவிட்டதற்கு இன்னொரு உதாரணம்.நாம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியலில் Scanning electron microscope (SEM) என்று ஒன்றை படித்திருப்போம். சின்னது எதுவோ அதை பெருசாக பார்க்கலாம் என்ற ரத்தின சுருக்கமாக அதற்க்கு ஞான குரு முதலில் விளக்கமளித்தார் .


ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னார்.நாம் படிக்கவேண்டிய ஒரு பெரிய விஷயத்திற்கான சாம்பிளாக அதில் இருந்து சின்னதாக பெயர்த்தெடுத்து கொடுத்தால் தான் அதை அந்த கண்ணாடி வழியாக பார்த்து ஆராய முடியும் என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.சரி என்று கான்கிரீட் கட்டிடங்களை ஆராயும் இவர் அதிலிருந்துஒரு செங்கலை பெயர்த்தெடுத்து கொண்டுபோய் கொடுத்தார்.அரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் ஒருவாரம் விடுமுறை எடுத்து வேப்பிலை அடித்துக்கொண்டதாக தகவல்.


இன்றளவிலும் யாருமே இல்லாத தெருவிற்குள் இன்டிகேடர் போட்டு செல்லும் ஒரு சிடிசன் இவர்.தூங்கும்போது மட்டுமே ஹெல்மெட்டை கழட்டுவார் என்பது தனி சிறப்பு.

மதிப்பெண் வழங்குவதில் மட்டும் ஏனோ ஏக கறாராக இருப்பார் .இவர் சாப்பிடும் எக்ஸ்ட்ரா இட்லியை கண்டுக்கொள்ளாத மெஸ் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கூட கம்மியான மதிப்பெண்களே அளித்து வருபவர் .திருப்பூரிலிருந்து பனியன் , திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் சிறப்பு ஜெயின்சன் வேட்டிகள் அளிப்பவருக்கு மட்டும் போனால் போகிறது என்று முன்னுரிமை கொடுத்து நேர்மைக்கு இலக்கனாமாக திகழ்பவர்.

ஞான குருவுக்கென்று ஒரு சிறப்பான சீடன் உண்டு அந்த சீடனின் வீட்டுக்கே சென்று பங்குசந்தையை பற்றி தனது விரிவான அறிவை பகிர்ந்திருக்கிறார்.எப்படிப்போட்டால் காசை லாவகமாக இழக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கும் விஷயங்களை புத்தகமாக கொண்டுவரும் முயற்ச்சி நின்றுபோய் இன்று தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இவரது சாகசங்கள் பதியப்பட்டு வருகின்றன.

ஆங்கில புலமையை பற்றி அடிக்கடி பேசி நம்மை மூர்ச்சை அடைய வைப்பார்.வேலை கிடைக்காமல் போவதற்கே மாநாக்களிடம் இருக்கும் ஆங்கில அறிவின் போதாமை தான் காரணம் என்றார் .நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியில் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று ஒரு நாள் வினவினார் ,சீடன் எழும்பி "Package" என்றான்.இப்படி சிறிய வயதிலேயே packaging கம்பனிக்கு போவேன் என்று நீ அடம்பிடிப்பது நல்லதில்லை என்றார்,குருவே என்று பொற்பாதங்கள் தொட்டு வணங்கினான் சீடன்.

இதுபோக இவரது ஆராய்ச்சி கூடத்தில் இதுகாலம் வரை இவரை பார்த்தவர்கள் அனைவரும் இவர் அனந்தசயனத்தில் இருக்கும்போதே பார்த்திருக்கின்றனர்.இவர் கண்விழிக்கும் நேரமெல்லாம் தேனீர் இடைவேளையாக இருப்பது விஞ்ஞானத்தால் விளக்க இயலாத ஆச்சரியம்

இதுபோல் குருவின் இன்னும் சில சாகசங்களை தொகுக்க அவரது சீடர்களிடம் உதவி நாடியுள்ளேன்.வந்ததும் தொகுக்கிறேன்.படிச்சிட்டு சாவுங்க

Thursday, February 11, 2010

நித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி தீவாணி

இந்த பாடலை முதல் முறை எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் கேட்ட முதல் முறையே நிரம்பு மண்டலத்தின் உள் சென்று என்னை தூக்கியடித்த பாடல் இது. இதை கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டு விடவும்.




பாகிஸ்தானிய இசையை பற்றியும் அதன் பிறகு நான் தொடர்ந்து கேட்டுவரும் சூபி / கவ்வாலி வகை இசையை பற்றியும் தனி பதிவெழுத ஆசை. அதற்குமுன் நான் இந்த பாடலை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

இந்திய இசையை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் கண்டிப்பாக கைலாஷ் கெரைஅறிந்திருப்பார்கள்.பதபடுத்தபட்ட இனிமையான குரல்களுக்கிடையில் நாட்டுப்புற இசையின் அடையாளமான கம்பீரமான குரலை இந்திய சினிமா இசைக்கு இன்று அளித்துக்கொண்டிருப்பவர் கைலாஷ். அவரது தந்தை ஒரு நாட்டுப்புற இசை கலைஞர் , பல்வேறு தடைகளையும் வறுமையும் தாண்டி மிகவும் சிரமபட்டே கைலாஷ் சினிமாவிற்குள் நுழைந்தார்.


அல்லா கே பந்தே பாடல் வந்தது தான் தாமதம் மொத்த இந்தி திரையிசை உலகமும் திரும்பி பார்த்தது.எப்படி கீழிருந்து மேல் வரை இவ்வளவு ஆளுமையுடன் ஒரு குரல் ஒலிக்கிறது என்ற ஆச்சரியம் அன்று அனைவருக்குமே இருந்தது. பல்வேறுதரப்பிலிருந்து கைலாஷுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வந்தன. இன்றளவிலும் மண்ணின் இசையை அவர் பிரதிபலிப்பதாக ரஹ்மானிலிருந்து ஆமீர் கான் வரை பாராட்டி வருகின்றனர்.இசைக்கடவுளான நுஸ்ரத் பத்தே அலி கானை தனது மானசீக குருவாக கருதும் கைலாஷ் இந்திய பாப் சூபி இசை வடிவத்தில் கொடுத்துள்ள பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை

ஆனால் கைலாஷின் குரலில் வீரியமும் வீச்சும் உலகிற்கு உணர்த்திய பாடல் தேரி தீவாணி தான் என்பேன்.சூபி இசையை அடித்தளமாக கொண்டு பாப் இசையின் வடிவம் போல் இந்த பாடல் இருக்கும். பாடல் அளிக்கும் பரவசம் வார்த்தையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பாடலை ஒருமுறை கேட்பதே உசித்தம் .

இவ்வளவுக்கு பிறகே நான் பதிவின் மையத்திற்கு வருகிறேன். வெகு நாட்களாக எனக்கிருக்கும் கோபம் தமிழில் வரும் குரல் தேர்வுக்கான போட்டிகளில் யாரும் தயார் நிலையில் இருக்கும் பாடகர் இல்லை என்பது தான்.இதை பற்றிய விவாதம் கண்டிப்பாக தனிப்பதிவாக இடுவேன்.இங்கே இதை குறிப்பிடுவது ஹிந்தியில் வந்த ரியாலிட்டி ஷோக்களில் இந்த பாடல் எத்தகைய பரிமாணங்களை எல்லாம் அடைந்திருக்கிறது என்பதை சுட்டி காட்ட தான்.

முதலில் தோஷி பாடியது ( தோஷியின் அபார உழைப்பை பற்றியே அதிகம் சொல்லலாம் ) . இந்த பாடலை மட்டும் எடுத்து கொள்ளலாம் வாய்ஸ் ஆப் இந்தியாவில் தோஷி மிக முக்கியமான போட்டியாளர்.தோஷி தனது விளையாட்டை 2.16 இலே ஆரம்பித்து விடுகிறார் தாள கட்டுகளுக்கு அடங்காமல் அனாயசமாக தனது கட்டுபாட்டில் பாடலை வளைப்பது இவரின் சிறப்பு. 3.21 இல் இருந்து இவர் சரணத்தில் செய்யும் அட்டகாசம் பார்ப்பவர் அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது , விளைவு ஜக்ஜீத் சிங் (பிரபல கசல் பாடகர்) ஒரே வரியில் சொன்னார் "நீ ஒரிஜினல் பாடலை காட்டிலும் நன்றாக பாடினாய் ".

பலமுறை போட்டியில் வரிகளை மறந்து சொதப்பிக்கொண்டிருப்பதே அந்த சிறுவனுக்கு வாடிக்கையாக இருந்தது.நல்ல இசையறிவு இருந்தும் இப்படி சொதப்புகிரானே என்று சுரேஷ் வாடேகரும் சோனு நிகாமும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.அதற்க்கு அமீர் ஹபீஸ் என்ற அந்த சிறுவன் அளித்த பதில் தேரி தீவாணி ! பெரியவர்களே தயங்கி தயங்கி பாடும் கீழ் நோட்சை பயமறியா இந்த சிறுவன் சுளுவாக பாடி அசத்தினான்.3.37 இல் சோனுவின் முகபாவனையே இவனின் திறனை உணர்த்தும் .

அந்தக்குரலை கேட்ட எல்லாருரிடத்திலும் நிம்மதி சந்தோசம் பொறாமை வியப்பு பிரமிப்பு, அண்ணாந்து தான் பார்த்தார்கள் , குரலுக்கு சொந்தக்காரர் ராஜா ஹாசன். சுக்விந்தர் சிங்கின் குரலுக்கு சரியான மாற்றாக ராஜா வருவார் என்று சொல்லலாம்.உச்ச ஸ்தாயியில் இவர் தய்யா தய்யாவை பாடிய பொழுது மொத்த அரங்கமும் அசந்துப்போனது.இந்த பாடலில் பெரிய அளவு மாறுதல்களை காட்டவில்லை என்றாலும் ( சரனத்தில் ஒரு சிறிய ஹர்கத்தை தவிர ) ராஜாவின் குரலில் இந்த பாடல் மிக புதுமையாக ஒலித்தது.

எல்லவாற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தால் போல் இருந்தது சமீபத்தில் ஷதாப் பாடியது. இந்த பாடலக்கு வேறு வடிவமே ஷதாப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. இப்பாடலில் இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது பாடியது.ஒரு நிலையில் கமகங்களை அவர் பாடும்பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டும்.மொழி புரிய வேண்டாம் உள்ளிருக்கும் நுட்பமான இசை சார்ந்த விஷயங்களும் தேவையில்லை பாடலுக்கு ஒரு உயிர் இருக்க வேண்டும் அது நமது மனங்களை தொட வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் பாடல் இது.


பி.கு : ஷதாபே இதை கவ்வாலியாகவும் உருமாற்றி பாடியுள்ளார். அதை காண





Wednesday, February 10, 2010

இலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை


டெலிக்ராபில் வந்த பீட்டர் போஸ்டரின் இந்த கட்டுரையின் தமிழாக்கம்

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தனது சகிப்புதனமில்லாத போக்கை காட்டியிருக்கிறது , சரத் பொன்சேகாவின் கைது மூலம். பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது நண்பர் டீன் நில்சன் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார்.பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு விடாப்பிடியாக இழுத்து சென்றிருக்கின்றனர்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது.கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது ஒரு உதாரணம்

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக அதிகம் ஒடுக்கபட்டு வருகின்றன.இலங்கை, பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருகின்றது.இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமது ங்கேவின் மரண சாசனமே எடுத்துக்காட்டாகும். அதை படிக்காதவர்கள் உடனடியாக இங்கே படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி இது எல்லாவற்றிற்கும் சீனாவிற்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார (!!) அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் "மக்கள் சர்வாதிகார " அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது .

பூகோள ரீதியில் இலங்கை விடயம் சிறியது தான் , ஆனால் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்பொழுது ஊழல் நிறைந்த எதேச்சிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விடயமாகும் .

பல காலமாக இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாமல் தான் இருந்து வந்தது ( மிக கவனமாக இந்தியாவை சங்கடப்படுத்தாமல் ) ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இது மாறத்தொடங்கியது . அவரின் வருகை பொருளாதார மற்றும் சில ராணுவ ரீதியான உதவியை இலங்கைக்கு சீனா அளிப்பதற்கு வழிவகுத்தது.

இந்த வருகைக்கு பிறகு இரண்டு அரசாங்கங்களும் " தீவிரவாதம் , பிரிவினைவாதம் , பயங்கரவாதம்" ஆகிய மூன்று அழிவு சக்திகளுக்கு எதிராக போராட ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமே ராஜபக்ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

சீனாவின் அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்ச்சமயம் இலங்கையின் தெற்கு மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புது துறைமுகம் , விமான நிலையம் மற்றும் கொழும்புவுடன் இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் கட்டி வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் செய்வது போல் நேரடியாக ஈடுபடாமல் ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது மூலம் இதை சீனா செய்துவருகிறது. இங்கே நாம் ஹம்பண்டோட்டா ராஜபக்ஷவின் சொந்த தொகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள் , இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க சீனாவின் பணமும் மனிதமற்ற தன்மையும் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கயின் சமீப போர் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தில் இலங்கயின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.இப்பொழுது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றியான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது . சீனாவின் கூட்டாளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளைத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டின் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தும் பொருளாதார உதவிகளை ரத்து செய்தும் வருகிறது ஆனால் அந்த பணம் சொற்பம் என்பதால் இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா அடிக்கடி நிலைமை மோசம் என்று மட்டும் கூறிக்கொண்டே இருக்கிறதே ஒழிய அதன் பங்கிற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.

இந்த வெள்ளியன்று ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கையுடனான வர்த்தகத்திற்கு இலங்கயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.ஆனால் இதை நடைமுறைபடுத்தும் தாமத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் போல் தெரிகிறது.

சீனாவை பற்றி இந்த மாத இறுதியில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு , சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.இப்படி தான் வெள்ளை வேன்களுடன் கொடுமை புரிந்த ராஜபக்ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது



இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் தான் முடியும் , ஆனால் அது நடக்கும் என்பது சந்தேகமே

Wednesday, December 30, 2009

2010

2010 சில உறுதி மொழிகள் :

1. இதை வெளியே சொல்ல முடியாது இருந்தும் முயற்சிக்கணும்

2. வலைத்தளங்கள் வாசிப்பை குறைத்து நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்

3.வாதாடுவதை குறைக்க வேண்டும் , நிறைய நண்பர்களையும் எதிரிகளையும் இழக்கிறேன்.

4.துறை சார்ந்த விஷயங்களை ஆர்வத்தோடு கற்று தெளிவு பெற வேண்டும் , இன்னும் நான்காண்டுகளில் வேறொரு நிலைக்கு செல்ல யோசிக்கிறேன்.

5.சமீப காலமாக ஏற்ப்படும் பாகிஸ்தானிய இசை மோகத்தை குறைக்க வேண்டும் , நிறைய இசைகளை பரிசோதனை ரீதியிலாது கேட்க வேண்டும் .கூடுதல் வாசிப்பை செலுத்தி பாகிஸ்தானிய இசையை பற்றி தரமான சில பதிவுகள் எழுத வேண்டும்.

6.Time management கொஞ்சமாவது ஒழுங்காக செய்ய வேண்டும் , நிறைய நேரம் விரயமாகிறது .

7.போலந்தில் நிறைய ஊர் சுற்ற வேண்டும் குறைந்தது நான்கு நாடுகளாவது போகவேண்டும் ( Hungary ,Budapest , Slovenia and Italy).

8.சில நல்ல சினிமாக்கள் பார்க்க ஆசை.

9.எல்லாரும் ஒன்னு சொன்னா அத எதிர்க்கணும்னு பொழப்பா வெச்சிருக்க அப்படீன்னு கதிரவன் சொல்லுவான் (கோபத்தில் ) , அந்த எதிர்ப்பை அறிவுசார்ந்ததாக இன்னும் கூர்மையாக்க வேண்டும்.

10. உறவு சார்ந்த காயின் நகர்தலில் முக்கியமான கட்டத்தில் இந்த வருடம் உள்ளேன் , பொறுமையாக வெற்றிகரமாக நகர்த்த வேண்டும் (தோல்வியை தவிர்த்து அல்லது குறைந்த சேதாரத்துடன்)

2009 எனக்கு சில இமாலய வெற்றிகளையும் மிக அவசியமான தோல்விகளையும் தந்துள்ளது. விளிம்பில் இருக்கிறேன் , இதிலிருந்து மீண்டு வருதல் என்னையே எனக்கு புதிதாக காட்டும்.புதுவருட நம்பிக்கை என்பது ஒருவித கற்பிதமே , எல்லாவற்றிற்கும் நாட்கள் புடிக்கும். வேண்டுமானால் இதை ஒரு காலம் சார்ந்து திரும்பி பார்க்கும் கோணத்தில் எடுத்து கொள்ளலாம். பல வரிகளை அடித்திருக்கிறேன் , இது போதும்.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Thursday, December 10, 2009

ஹய்யா கவிதை - உரையாடல்


வெறிச்சு வானத்த பார்க்கணும்
கண்ணை சுருக்கிக்கொண்டு
புத்திசாலி மாறியே நடிக்கணும்
உட்பொருள்னு வேற ஒன்னு இருக்கணும்
கரு , அழகியல் இத்யாதி இத்யாதி
தோணும் நாலு வரியையும்
பின்நவீனத்துவமா மாத்தி மாத்தி அடிக்கணும்
நடுல என்டர் வேற தட்டனும்
இது இல்லாம கடைசியில்
எண்டு பன்ச் வேற வைக்கணும்
நாங்க என்ன வெச்சுகிட்டாயா
வஞ்சனை பண்றோம்

Tuesday, August 18, 2009

ஆட்டம் க்ளோஸ்



தோழர் ரமேஷ் என்னை கேட்டவுடன் தான் நான் செய்வதே எனக்கு உரைத்தது."என்னடா தம்பி யார் படிக்காட்டியும் பதிவு அடிக்கடி போடறியே , போறதுக்குள்ள நெறைய எழுதனும்னு வேண்டுதலா? "



ஆமாம்ல! இதோ நாளும் வந்துவிட்டது. இனி எனக்கு இணையதள ஆக்சஸ் கிடைப்பது அரிது ஒரு மாதத்திற்கு. என்னை நம்பி ஒருத்தன் படிக்க வேற கூப்புடுகிறான். முதல் முறை விமானப்பயணம் , அட பக்கத்துல போய் கூட பார்த்ததில்லை. நான் சமைக்கிறேன் பேர்வழி என்று அப்பாவை தினமும் ஹோட்டலில் சாப்பட வைக்கிறேன். கோவில்பட்டியில் உச்சி வெயில் மண்டையை பிளக்க கிரிக்கட் மைதானத்தில் நின்ற பொழுதுகள் எல்லாம் சொர்க்கம் , வியர்வையும் வெயிலும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஊட்டி கூட என்னால் பொருத்து கொள்ள முடியாது , பிரான்சில் குளிர் காலத்தில் போகிறேன். போலந்து இதைவிட மோசமாமே? செத்தேன்!

பாட புத்தகங்களை தொட்டு சிலபல மாதங்கள் ஆகிறது. ஒரு மன்னாங்கட்டியும் நினைவில்லை. திகட்டும் அளவிற்கு புத்தகங்கள் படித்தேன் ( பாட பொஸ்தகம் அல்ல ) , திகட்டாத அளவிற்கு பதிவுகள் படித்திருக்கிறேன்,நிறைய படங்கள் பார்த்தேன் . கல்லூரி முடித்து விட்டு மேற்படிப்புக்கு போகும் இந்த மூன்று மாத இடைவேளையை முழுவதும் வேலை எதுவுமே பார்க்காமல் சந்தோஷமாக இணையத்தில் கழித்திருக்கிறேன்.
பதிவுலகம் எனக்கு இன்னும் பிடிபடுவேனா என்கிறது ! ஆண்ட ( கதிரவன்) எனக்கு அறிமுகப்படுத்தியது இது . முதலில் நான் படித்த தளம் லக்கிலுக் , அடுத்து அதிஷா. அப்பொழுது எல்லாம் பின்னூட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றே எங்களுக்கு தெரியாது. ரித்தீஷ் பற்றி ஒரு பதிவு அதிஷா போட்டிருந்தார் , ஆண்டை எங்கள் எல்லாரையும் கூப்பிட்டான் லேப் முடிந்ததும் உக்கார்ந்து படித்தோம்.கூட்டம் கூடியதால் அவன் மட்டும் உரக்க வாசிக்க மற்றவர் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தோம்.
என் கல்லூரியில் , ஆண்டை ஷரீப் இருவர் தான் தொடர்ந்து வலைத்தளங்களை படித்து வருவார்கள். பல எழுத்தாளர்கள்களுக்கு தங்கள் ரசிகர்களை பற்றி தெரிவதே இல்லை,தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை . கடை நிலை ரசிகனுக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பிரமிப்பு அவ்வளவு ஜாஸ்தி. மருதனின் புத்தகங்களை நானும் ஆண்டையும் பிரித்து வைத்து வாங்கி படிப்போம். இருவரும் ஒரே புத்தகம் வாங்காமல் இருவேறு புத்தகங்கள் வாங்கி எக்ஸ்சேஞ்சு செய்து படித்து கொள்வோம். காரைக்குடி புத்தக கண்காட்சிகள் ! மிஸ் யு ஆண்ட.

தமிழ் வலைத்தளம் அறிமுகமே இல்லாதவர்களுக்கு நான் முதலில் இதை தான் படிக்க குடுப்பேன். இவரின் அனைத்து பதிவுகளையுமே படித்திருக்கிறேன் :). சேடன் பகத் புத்தகம் ஜாலியாக படித்தது , மஸக்கலி பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் , தில்ஷன் கேப்டனாக இருந்த மேட்சை நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன் , உலக திரைப்படங்கள் , பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் , மைக்கேல் ஜாக்சன் , சச்சின் காஸ்பரோவிச் பந்தில் அடித்த சிக்ஸ் என அனைத்தும் என் ரசனைக்குரிய ஏரியா.

நான் என் வாழ்கையிலேயே கதைகள் எழுதியதில்லை. உரையாடல் , உயிரோடை போட்டிகளுக்காக தான் கதைகள் எழுதினேன்.நடத்தியவர்களுக்கு நன்றிகள் பல.நான் அடிக்கடி படித்த வலைத்தளத்தில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக என் அம்மா காலத்து நபர். முந்திய தலைமுறைக்கு தான் எவ்வளவு ரசனை இருந்திருக்கிறது? புத்தகங்கள் , ஜென்சி , இளையராஜா இசை , கவிதைகள் ஹ்ம்ம் என் கல்லூரியில் எத்தனை பேர் புத்தகங்கள் படித்திருக்கிறார்கள்?

இவ்வளவு நீண்ட மொக்கை , நான் இந்த பக்கம் தலை வைத்து படுக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவிப்பதர்க்கே. அதற்குள் பதிவுகளை படிக்க முடிந்து பின்னூட்டம் போட முடிந்தால் சந்தோசம்.

பி.கு : இந்த மொக்கையை திரட்டிகளில் சேர்க்க வேண்டுமா என்ன?








Monday, August 17, 2009

சைக்கோ கொலைகாரர்கள் - ராபர்ட் பிக்டன்


எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு , வெளியே சொல்ல முடியாததும் கூட. எனக்கு மிகவும் போர் அடிக்கும்பொழுது எல்லாம் , உலகின் மோசமான சைக்கோ கொலைகாரர்களின் வரலாற்றை படிப்பேன். அவர்களில் பால்ய பருவம், அவர்களை கூசாமல் கொலை செய்ய தூண்டிய காரணிகள் , அவர்களின் செக்ஸ் வேக்கைகள் , அவர்கள் கொலை செய்யும் விதம் , கொலை என்றால் தென்னன்கொலையா என்னும் ரேஞ்சுக்கு அதை மறந்து இயல்பு வாழ்கை வாழும் குரூரும் என்று அனைத்தையும் படிப்பது எனக்கு பிடித்தமான விடயம். ( நீ உருப்டாப்புல தான் என்று கூறும் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது )



சிலரை பற்றி படிக்கும் பொது உறைந்து போய் உக்காந்திருக்கிறேன். பயம் என்னும் ஒற்றை சொல்லை உடைத்து விட்டால் , கொஞ்சம் அவர்கள் உளவியல் சிந்தனைகளுக்கு உள்ளே போய் பார்த்தால் கொலை நடுங்கிவிடும். மனிதருக்குள் மிருகம் படித்ததிலிருந்து எனக்கு இந்த பழக்கம் தொற்றி கொண்டது என்பதே உண்மை.




வான்கோவரில் பட்டப்பெயருடன் ஒரு ஊர் உண்டு , " லோ ட்ராக் " என்று அந்த மாவட்டத்தை அழைப்பார்கள். ஒரு முறை அங்கே சுற்றி நடந்துவந்தீர்கள் என்றால் , காலுக்கடியில் உபயோகிக்கப்பட்ட காண்டம்கள் , தூக்கி எறியப்பட்ட சிரிஞ்சுகள் என்று அனைத்து ஆரக்யோமான விஷயங்களும் படும். பதினோரு வயதில் கூட அங்கு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை நீங்கள் காணலாம். 1995 இல் ஒரு புள்ளி விவரத்தை பார்த்த பொழுது லோ ட்ராக்கில் இருக்கும் பெண்களில் 73% விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் .1998 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் அங்கே ஒரு நாளைக்கு ஒரு நபர் இறந்துகொண்டிருந்தார் , போதை பொருளுக்கு அடிமையாகி , எய்ட்ஸ் வந்து , கொலை செய்யப்பட்டு.



ஆம் கொலை செய்யப்பட்டு , ஆனால் இதை கண்டுபிடிப்பதற்குள் கானடா போலீஸ் செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டது. காணாமல் போனவர்கள் பெயர்விவரம் மற்றும் நாட்கள் விவரம் இங்கே எழுதினேன் என்றால் எனக்கு தாவு தீர்ந்துவிடும். எண்களை போட்டாலே தலை சுத்தும் , எண்பதுகளில் ஆரம்பித்தது 2002 வரை நிற்கவே இல்லை. எப்படி எப்படி எல்லாமோ ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள் 98 இல் மொத்தமாக ஒரு ஐம்பத்து நான்கு பெண்களை காணவில்லை ( காணலைன்னா 80களில் இருந்து காணவில்லை என்பதிலிருந்து நேற்று காணமல் போனவர் வரை) கிம் ரோசொமோ என்பவர் முதலில் திருவாய் மலர்ந்தார் " ஒரு வேலை இதெல்லாம் ஒரே ஆளின் கைவண்ணமாக இருக்கலாமோ? "



ஆதாரம்? சாட்சிகள்? ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. எந்த விபச்சாரியும் சாட்சி சொல்ல பயந்தார்கள் . தானும் மாட்டிக்கொண்டால்? . 98 இல் ஒரு மிக மிக முக்கியமான சாட்சியம் சிக்கியது. "Piggy Palace Good Times Society என்று இவனுங்க நைட்டு பெண்களை வெச்சு கூத்தடிக்கரானுவோ எசமான். அதுலயும் ராபர்ட் பிக்டனை பார்த்தாலே சரி இல்லை. நேத்து கூட அவன் பண்ணையில் ஒரு பண்ணி என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்துச்சுனா பார்த்துகோங்களேன் , பண்ணிங்க எதுக்கு எசமான் மனுஷங்கள கடிக்கணும் ? " என்றார் ஹிச்காக்ஸ் என்னும் பண்ணை வேலையாள்.



ஏற்கனவே ஒரு முறை ஒரு பெண்ணை கொலை செய்ய முயன்றதற்கு பிக்டனை போலீஸ் பிடித்தது . போதிய சாட்சியங்கள் இல்லாததால் தப்பித்து விட்டான். அப்பவும் கொஞ்சம் கூட சூதானம் இல்லாமல் இருந்தார்கள் கானடா போலீஸ் , நாங்க பிக்டனின் பண்ணையை தேடினோம் ஒன்றுமே இல்லையே என்றார்கள் போலீஸ்.


2002 இல் அது நடந்தது. அப்பொழுது பிக்டன் கம்பி எண்ணி கொண்டிருந்தான், அதுவும் கொலை குற்றத்திற்காக இல்லை. எதோ தனது பண்ணையில் இருக்கும் நிலத்தகராரால். முதல் முறை போலீஸ் வாய் திறந்தது , ஆதாரங்கள் இரண்டு பெண்மணிகளின் மரபணுக்களுடன் ஒத்து போகிறது. அந்த பண்ணையை சோதனையிடுகிறோம் . கனடா செய்தித்தாள் ஒன்று அலறியது " ஐம்பது பெண்கள் பன்றிகளுக்கு இரையானார்களா? " இதற்க்கு நடுவில் பன்றி மாமிசத்தில் மனித உடல் உறுப்புகள் கலந்திருக்கின்றன என செய்தி காட்டுத்தீயாக பரவியது. ஒரு நிமிடம் உறைந்து போய் உட்காந்தார்கள்.



முதலில் இரண்டு கொலை குற்றங்களில் முதல் நிலை குற்றவாளியாக நிறுத்திய போலீஸ் , பிக்டன் மீது முப்பது கொலை குற்றங்களை சுமத்தியது. அவர் பண்ணையில் இருந்த குளிர் சாதன பெட்டியிலிருந்து இரண்டு தலைகள் , கொஞ்சம் விரல்கள் கொஞ்சம் வேறு உடல் இருப்புகள் கண்டெடுக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு கிட்ட தட்ட முடிவுக்கு வந்தார்கள் , மொத்தம் 102 கைரேகை நிபுணர்கள் கிட்ட தட்ட 32 தடவியல் நிபுணர்கள் , கிடைத்த ஆதாரங்களை கொண்டு காணமல் போன முப்பது பெண்களின் மரபணுக்களோடு எங்களால் தொடர்புபடுத்த முடிகிறது என்றார்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆதாரங்கள் , அறுபது சாட்சிகள் , இரண்டுலக்ஷத்தி முப்பதாயிரம் தடயங்கள், மண்டை ஓடு , ரத்த கரைகள் , பற்கள் , எலும்புகள் இன்னும் இன்னும்.


சாட்சியங்களை நீதிமன்றத்தில் காட்டும் பொழுது பெண் வக்கீல்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள் . 22 காலிபர் துப்பாக்கி ஒன்று டில்டோவுடன் ( அர்த்தம் தெரியாவிடின் விட்டு விடுங்கள் :P ) சிக்கியது.கண்ணால் பார்த்த சாட்சியங்களிலேயே முக்கியமாக கருதப்பட்டது பெல்வுட் , பிக்க்டன் தனது கொலைகளை எப்படி நிறைவேற்றுவான் என்று தனக்கு நடித்து காட்டியதாக சொன்னான்.



" அவர்கள் கைகளை கட்டி போட்டு , டாகி முறையில் உறவு கொண்டு பின்பு கொலை செய்து தனது பன்றிகளுக்கு உணவாக்கி விடுவான் . பெண்களை வசியம் செய்ய அவர்களுக்கு பிடித்த போதை பொருளை பிக்டன் கொடுத்தான் " என்றார். அவரே ஒரு போதைப்பொருள் அடிமை ஆதலால் இத்தனை நாள் அதை போலீசிடம் சொல்லவில்லை என்றும் சொன்னார்.



நாற்பதாயிரம் புகைப்படங்கள் , அருபதனாயிரம் ஆராய்ச்சி கூட சாம்ப்லிகள் என கஷ்டப்பட்டு போலீசார் முடிவுக்கு கொண்டு வந்த வழக்கில் அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் டாலர். கானடாவில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் , வாழ்நாள் முழுதம் சிறை தண்டனை அனுபவித்து வருகிறான் பிக்டன்.



Thursday, August 13, 2009

தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்

அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள் ஹிந்தி பாடகர்கள்.( நான் சிறு வயதிலிருந்தே பாடகிகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதில்லை , ஆக பதிவு முழுவதும் பாடகர்களை பத்தி தான். ).


ஒரு கமர்ஷியல் சினிமா பாடல்கள் ரசிகனாக இதை பதிவு செய்கிறேன். "பருவா இல்லை" என்று கொல்வதில் எல்லாம் எனக்கும் சம்மதம் இல்லை தான். இருந்தும் தமிழ் சினிமாவில் அதிகம் ஹிந்தி பாடகர்கள் இன்றளவிலும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஹரி சரண் , நரேஷ் , கார்த்திக் , திப்பு , ஹரீஷ் ராகவேந்தரா போன்ற தமிழ் பாடகர்கள் இருந்தும் சில சமயம் ஹிந்தி பாடகர்கள் பாடிய பாடல்கள் ஹிட் ஆவதால் தொடர்ந்து அவர்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


1. உதித் நாராயணன் :
தமிழை மொத்தமாக கொலை செய்கிறார். ழ வருவேனா என்கிறது , இருந்தும் பாடிக்கொண்டே தான் இருக்கிறார். ஏன் ? தோரணையில் " வா செல்லம்" கேட்டீர்களா? அதை தமிழ் பாடகர் ரஞ்சித் கூட பாடி இருந்தார் இருந்தும் திரையில் ஒலித்தது உதித் குரல் தான். கீழ் நோட்ஸில் உதித்துக்கு உள்ள கம்பீரமான குரல் வளம் ஒரு காரணம். " சஹாரா " போன்ற பாடல்களில் எந்த உயரங்களையும் அனாயசமாக தொட்டு விட்டு வந்து குழைத்து பாடுவார்.


இவர் பாடிய ஹிந்தி பாடல்களிலேயே எனக்கு " ஏ தாரா " சுவதேஷில் உள்ள பாடல் மிகவும் புடிக்கும். தமிழில் ஒரு ஹிந்துஸ்தானி சாயல் பாடல் வந்தாலே யுவன் உதித்தை கூப்புடுகிறார் , " எங்கேயோ பார்த்த மயக்கம்" ஒரு சிறந்த உதாரணம். ஐம்பதற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் தமிழில் பாடி இருப்பார்.


2. சோனு நிகம் :



தலை இன்னும் தமிழில் அதிகம் பாடவில்லை. " விழியில் என் விழியில்" என்று கிரீடத்தில் தெளிவான தமிழுடன் ஒரு குரல் கேட்டதல்லவா? சோனுவின் குரல் தான். ஹிந்தியில் இவர் பாடிய பாடல்களுக்கு எல்லாம் கண்மூடித்தனமான வெறியன் நான். எந்த சிரமமான பாடல்களையும் சொடுக்கு போடும் நிமிடத்தில் சோனுவால் பாட இயலும். இவர் இதற்க்கு முன்னால் பாடிய ஒரே தமிழ் பாடல் " வாராய் என் தோழி " ஜீன்ஸ் படம்.


3.ஜாவெத் அலி :




திரும்பவும் உச்சரியுங்கள் , ஜாவெத் அலி அதே தான். இந்த பெயரை இனி எந்த திரை இசை ரசிகனாலும் புறக்கணிக்கவே முடியாது. மச்சான் குசாரிஷ் கேட்டியா டா ? சோனு சோனு தான் டா என்றேன் , இணையத்தில் தேடி நண்பன் ஒருவன் பெயர் சொன்னான் , பாடியது யாரோ ஜாவெத் அலியாம் டா.


ஹிந்தியில் பல ஹிட் பாடல்கள் , " து முஸ்குரா " , " ஜஷ்னே பகார் " போன்ற சொக்க வைக்கும் மேலோடிகள். தமிழில்? குங்குமப்பூவும் கொஞ்சுபுராவும் படத்தில் "சின்னஞ்சிறுசுகள்" , சர்வத்தில் "சிறகுகள் நீளுது" , வாமனனில் " ஏதோ செய்கிறாய்" என்று இவர் பாடிய அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. அதிலும் முஸ்குரா பாடலில் என்னமா அசத்தி இருக்கிறார்? வளமான எதிர்காலம் உண்டு ஜாவதுக்கு .

4. சுக்விந்தர் சிங்க் :



தக்க தையா என்று அலறிய குரல். இவரது பல இந்தி பாடல்கள் பிரமிப்பூட்டும் நுணுக்கம் கொண்டவை. இவரே இசையமைத்த நஷா ஹி நஷா அருமையான பாடல். இவர் பாடிய பல பாடல்கள் இந்தியில் பட்டையை கெளப்பி இருக்கின்றன. தமிழில் கம்மி தான் போல.டிஷ்யூம் படத்தில் இருந்து " கிட்ட நெருங்கி வாடி " தான் லேட்டஸ்ட் .


5.கிருஷ்ணா குமார் குனாந்த் :



கேள்விப்பட்டது இல்லையா? கே.கே என்றால் தெரியும். பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதனில் உள்ள " காதல் வளர்த்தேன்" , 12 B படத்தில் வரும் " எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது , அந்நியனில் வரும் " அண்டங்காக்கா கொண்டைகாரி " என்ற பல ஹிட் பாடல்களும். "மொழ மொழன்னு" போன்ற திராபை பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடியதிலே " ஒரு பனித்துளி" ( கண்ட நாள் முதல் ) ," உன்னை தொட்ட" ( இதய திருடன் ) , " உயிரின் உயிரே " ( காக்க காக்க ) எல்லாமே மிக பிரபலமான பாடல்களே. தமிழ் பாடகர் போலவே தோன்றினாலும் , பல ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அங்கே இவர் மிகப்ப்ரபலம்.


6.கைலாஷ் கெர் :


கிராமிய பாடல்களா? உற்சாகமான பாடல்களா? கொஞ்சம் குத்துடன் குரலை ஏற்றி இறக்கி பாட வேண்டுமா? கூப்பிடு கைலாஷ் கெரை என்பது தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் டிரென்ட். அவருக்கு சாதரணமாகவே ஷ வராது இது தமிழிற்கும் பொருந்துகிறது.

பீமாவின் ரங்கு ரங்கம்மா , அபியும் நானுமில் " ஒரே ஒரு ஊரிலே " , லீயில் " யாரு யாரு " போன்ற பாடல்களுக்கு சொந்தக்காரர். இவர் அறிமுகம் ஆனது மஜா படத்தில் " போதுமடா சாமி" என்ற பாடலில்.

சலாம் எ இஷ்கு திரைப்படத்தில் " யா ரப்பா " பாடலை கேட்டு பாருங்கள் , அல்லது " தேரி தீவாணி " என்று இணையத்தில் தேடி பாருங்கள் ! கைலாஷ் ஸுபி பாடகர்களில் மிக முக்கியமானவர்.


7.ரூப் குமார் :


வாமணன் படத்தில் " ஒரு தேவதை " பாடல் கேட்டேர்களா? இல்லையெனில் முதலில் போய் கேளுங்கள் , ரூப் பின்னியிருக்கிறார். இவர் மின்னலே படத்தில் " வெண்மதி வெண்மதியே " கூட பாடி இருக்கிறாராம். இன்னும் நிறைய பாடல்கள் பாடலாம் மயக்கும் குரல் .


இது போக விஜய் பிரகாஷ் , குணால் காந்ஜாவாலா , ஷான் , ஹிமேஷ் போன்றவர்களும் தமிழில் பாடி இருக்கிறார்கள். பிற மொழி பாடகர்கள் மொழியை சிதைக்காமல் பாடினால் கண்டிப்பாக ரசிக்கலாம். சிதைத்தும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம்?

Wednesday, August 12, 2009

சீனா விலகும் திரை - நூல் விமர்சனம்


எனக்கு கண்ணை கட்டுகிறது. புத்தகம் வாங்குவதற்கு முன்பே பல்வேறு எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் , கட்டுரைகிளின் தொகுப்போ? பயண கட்டுரை எழுதி முழுவதும் மொக்கையாக இருந்து விட்டால் ?


அப்படி எதுவுமே இல்லை , தன் பயணத்தின் வாயிலாக தனது ஐந்து வருட இருப்பின் வாயிலாக புள்ளி விவரங்களை ஆங்காங்கே அள்ளி தெறித்து , ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் வரலாற்றை நினைவில் நிறுத்தி எழுதி அசத்தி இருக்கிறார் பல்லவி அய்யர் ( படிச்சு வாங்கின பட்டமுங்களா? ). இவ்வளவு லைவ்லியான மொழிபெயர்ப்பா என அதிசயிக்க வைக்கிறது ராமன் ராஜாவின் உழைப்பு!

சீனாவின் தனி நபர் வருமானம் இந்தியாவை விட இரு மடங்கு. இந்தியாவில் 5.7 கோடிகுழந்தைகள் சத்தான உணவில்லாமல் வளர்ச்சியில் தடைபடுகிறார்கள் ஆனால் சீனாவில் எழுபது லக்ஷம் தான். இந்தியாவில் 15 வயது மேர்ப்பட்டவர்களில் 68% பேர் தான் எழுத படிக்க தெரிந்தவர்கள். சீனாவில் 95% .


நான் என்ன ரமணா விஜயகாந்தா? . விஷயத்துக்கு வருவோம் , ராமன் ராஜாவில் மொழிபெயர்ப்புக்கு ஒரு ஒரு உதாரணம் , சீன விருந்தாளிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது டெல்லியில் இருந்து ஆக்ரா அழைத்து செல்லப்படுகிறார்கள். சன்னமாக ஒருவர் கேட்கிறார் " நாம் நெடுஞ்சாலையில் பயணிப்போம் என்றீர்களே பல்லவி , அது எப்போ வரும்? "


" நாசமா போச்சு! நாம் அதில் தான் சென்று கொண்டிருக்கறோம். "

இதில் இருந்தே தொடங்கலாம் , சீனாவில் இருக்கும் சாலைகள் இந்தியாவில் இல்லை. ரயில் பாதைகளில் அசுர பாய்ச்சல். தொழிற் சாலைகள்? பட்டன் தயாரிக்கிரீகளா? பலூன் ? இரும்பு? பொம்மைகள்? எல்லாவற்றிலும் சீனா சீனா சீனா ! மாவோ சீனா இப்பொழுது கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாக பல்லவி கூறுகிறார். இருந்திருந்தால் 44.7% ஏற்றத்தாழ்வு இருக்காது ( inequality) . சீனா அடைந்த அனைத்து வளர்ச்சிக்கும் அது கொடுத்த விலை , ஜனநாயகம் !

புத்தகம் நெடுக ஜனநாயகத்தை புதைத்த வளர்ச்சியா? வளர்ச்சியே இல்லாமல் வெத்து ஜனநாயகமா என்று மண்டையை ஒடைத்து கொண்டிருக்கிறார். தீர்வு? நான் ஏழை குடும்பத்தில் பிறந்தால் சீனனாகவே ஆசை படுகிறேன் ஆனால் நடுத்தர குடும்பம் என்றால் இந்தியா தான் என்ற முடிவை முன் வைக்கிறார் .


பல்லவி ஹூடாங்கில் வசிக்கும் பொழுது அவரது வீட்டின் அதிபாரான திரு வூ ( கோடீஸ்வரர்) தன் வீட்டின் கக்கூசை சுத்தம் செய்கிறார். பலப் ரிப்பேர் பார்க்கிறார். தனது அம்மாவிற்கு ஆயி வேலை கிடைக்குமா என்று தனது நவ நாகரீக சீன மாணவி கேட்கும் பொழுது ஆடி போகிறார் பல்லவி. ஏனென்றால் இதெல்லாம் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகள் . சீனாவில் எந்த வேலையும் தரம் பார்க்காமல் செய்கிறார்கள் . வர்க்க பேதங்களின் , இன /மத பேதங்களின் முதுகெலும்பை உடைத்திருக்கிறார் மாவோ . இங்கே சாதீய ஏற்ற தாழ்வுகளை உடைப்பது சாதாரண விடயமா?


அதே நேரம் மக்கள் மாற்றி சிந்திக்க கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள் , இந்தியனுக்கு எடக்கு பேசாவிடின் தூக்கம் வருமா? சீனா காரன் எதுவும் நன்மைக்கே என்கிறார்கள். இரண்டு உதாரணங்கள் இதற்க்கு , திபெத்தில் தான் பார்த்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் " சீனர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்னொன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் ( கெட்ட செய்திகளாம்) மக்கள் மனசு ஒடிந்து விடும் என்று அவரது சீன மாணவி சொல்கிறார்.


மூச் , மாத்தி யோசிக்காதே என்கிறது அரசாங்கம். இணையத்தை தடுக்கிறார்கள் , எல்லாவற்றிற்கும் அடக்குமுறை. பொருளாதார ரீதியாக முதலாளித்துவமும் உள்ளே படை எடுத்து வந்தாகி விட்டது. இப்பொழுது தான் இடது சாரி சிந்தனைகளை தூசி தட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியின் தூண்களான விவசாயிகளின் அதிர்ப்தி தான் காரணம். ஆனால் அதிகார பீடத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கல்வி அறிவு படைத்த நடுத்தர மக்கள் கேட்க மாட்டார்கள் , காரணம் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் ராஜ போதை.



பலவியின் திபத் பயணம் , ஸ்பானிஷ் கணவர் , பீஜிங் மாணவிகள் ,ஹூடாங் வீடு மற்றும் வாழ்கை முறை , பொக்கை வாய் கிழவர்கள் , கக்கூஸ் கண்காட்சி , அங்கு அவர் சந்தித்த இந்தியர்கள் , வாஜ்பாய் வருகை , உணவு பழக்க வழக்கங்கள் , சீனாவும் மதமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களும் எப்படி பின்னி பிணைகின்றன இன்றைய கால கட்டங்களில் என்ற நுட்பமான ஆராய்ச்சி , யோகா மோகன் , திபெத் சிறுவன் , பீஜிங் தலைகீழாக மாறிப்போன காட்சிகள் , மலை மேல் ரயில் பிரயாணங்கள் , அவர் சந்திக்கும் உலகத்திலேயே பணக்கார கிராமம் அங்கு முன்னேற்றம் வர வித்திட்ட மனிதர் , அவர் கண்ட தொழில் சார்ந்த பேட்டிகள் , அவர் சந்தித்த சாக்ஸ் தொழிற்சாலை , பாதி புதுமையும் மீதி பழமையும் கொண்ட வீடுகள் ( இது தான் இன்றைய சைனா ) , தொழில் நகரம் அதில் இருக்கும் பொருள்கள் , மத வழிப்பாட்டு உருவங்கள் , செக்ஸ் பொம்மைகள் என்று ஒவ்வொன்றும் அவரின் ரசனையோடு கலந்த நுட்பமான தகவல்கள்.



அவர் சார்ஸ் பற்றி எழுதி இருக்கும் இடத்தில் நான் கடுமையாக முரண் படுகிறேன் அது இந்த புத்தகத்தின் சாரமும் கூட! முதலில் சீன அரசாங்கம் சார்ஸ் பரவிய விகிதத்தை குறைத்து சொல்லியது ( மீடியா அவங்க கையில் பாஸு). பிறகு உண்மையை ஒப்புக்கொண்டு தீர்வு கண்டது. இதை அறிந்த மாணவர்கள் /மக்கள் கலவரமானார்கள். அதற்க்கு பல்லவி அளிக்கும் பதில் இதுவே இந்தியா என்றால் நாங்கள் துல்லியமாக பத்திரிக்கைகள் ( மீடியா) மூலம் அலசி இருப்போம் என்று ஜம்பம் அடித்து கொள்கிறார்.


இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் பல்லவி. ஏன் சார்ஸ் இவ்வளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது? விமானம் மூலம் கூட பரவி வசதி படைத்தவர்களையும் கொல்லும் என்பதால் தானே? . Tuborculosis , வயிற்று போக்கினால் இந்தியாவில் சாகும் எண்ணிக்கை எவ்வளவு? அதன் புள்ளி விவரங்கள் வருவதே இல்லையே? ஏன் ? இந்திய மீடியா என்று நாம் எவ்வளவு பீத்தி கொண்டாலும் அது கார்பரேட்களின் கைப்பாவையாக உள்ளது ( They are corporate stenographers) இத்தனை இருந்தும் எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைவில்லை , மீடியாக்கள் மீதும்! ஏனென்றால் ஒரு பாலகும்மி சாய்நாத் இல்லையென்றால் மேற்சொன்ன விவரங்கள் எனக்கு தெரிந்திருக்காது.




மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்காமல் விடுபவர்கள் ஒரு முக்கிமான ஒப்பீடு நடையில் எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான / அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை இழக்கிறார்கள். A must read!

Thursday, July 30, 2009

எராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்


இதை எழுதி கூட கொஞ்சம் மொக்கை போட்டால் ஒருவரும் படிக்கமாட்டார்கள் எனது வலைத்தளத்தை ( இப்போ மட்டும் என்ன வாழுது என்று கேட்கும் பதி அண்ணனுக்கு , இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் ) ! தெரிந்தே எழுதுகிறேன் , ஏனென்றால் விஷயம் கொஞ்சம் முக்கியமானது. எனக்கு தெரிந்த உருப்புடியான ஒன்றை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

பொதுவாக , மேற்படிப்புக்கு ( MS , PhD) அதிகம் அமெரிக்கா அல்லது கனடா செல்லும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதற்க்கு மாற்றாக முற்றிலும் வேறுபட்ட , மிகவும் வித்யாசமான ஒரு மாஸ்டர்ஸ் தான் இந்த Erasmus Mundus .

இது எராஸ்மஸ் என்னும் மனிதனின் பின்னால் பெயரிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்தார் என்று இணையத்தில் படித்தால் கொஞ்சம் மொக்கையாக இருந்தது. விட்டு விடலாம் , பாதகம் இல்லை. ஆனால் ஒன்று முக்கியம் , மனிதன் ஐரோப்பா எங்கும் சுத்தி சுத்தி போய் படித்தார். ஏன் அது முக்கியம் என்றால் , இந்த படிப்பும் அப்படிதான். ஒரே இடத்தில் உக்காந்து ஜல்லி அடிக்காமல் , நாடு நாடாக சுத்தி கும்மி அடிக்க வழிவகுக்கும் படிப்பு இது .


குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் இருந்து , அதிகம் இரண்டாண்டுகள் வரை இந்த படிப்பு இருக்கும். குறைந்தது இரண்டு நாடுகளுக்காது செல்ல வேண்டும் , அதிகமாக நான்கு நாடுகள் கூட செல்லலாம். இது MS க்கு மட்டுமே உண்டான பிரத்யேக படிப்பு. மேலோ , கீழேயோ இதில் படிக்க முடியாது.


மொத்தம் 104 வகையான மேற்படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராயினும் உங்களுக்கு உகந்தந்து போல் ஒரு படிப்பு இருக்கும்! இதில் என்னை பொறுத்தவரை உதவித்தொகை மிகவும் அதிகம்.


பொதுவாக ஒரு செமஸ்டர் படிக்க உங்களுக்கு இரண்டு இடங்கள் தரப்படும் , அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சில செமஸ்டர்கள் இல் ஒரே இடம் , அதில் தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். நாம் மூன்றாம் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர் என்ற அடையாளத்தில் வருவோம் ( third country applicant). ஒரு கோர்ஸில் பதினெட்டு பேர் மூன்றாம் நாடுகளில் இருந்தும் , மீதி எழு பேர் ஐரோப்பாவின் உள் இருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள். ( இந்த எண்கள் மாறலாம் !! ) . ஆக நாம் ஒரு மாறுபட்ட பல்நாட்டு கலாச்சாரத்தை சந்திக்கும் வாய்ப்பாக இது அமைகிறது.பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் பல பல்கலைக்கழகங்கள் சென்று பயில ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது.


நான் படிக்கப்போகும் இந்த படிப்பில் மொத்தம் இரண்டாண்டுக்கும் சேர்த்து 42,000 யூரோ உதவித்தொகை . அதில் செமஸ்டருக்கு இரண்டாயிரம் என எட்டாயிரம் இரண்டாண்டுக்கு போய்விடும் , மிச்சம் நமக்கு தான்.


சேர்வதற்கு உண்டான தகுதி ஒவ்வொரு கோர்ஸ்க்கும் மாறுபடும்! அதில் ஆங்கில அறிவை காட்ட TOEFL/IELTS எடுப்பது அவசியம். முக்கால்வாசி படிப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.


மொத்தம் எத்தனை கோர்ஸ்கள் உள்ளன என்பதை இணைப்பாக தருகிறேன். உள்ளே போய் பாருங்கள் , ஒவ்வொரு ஹைபர்லிங்க்இலும் தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். இதுபோக எராசுமஸ் படிப்பை பற்றிய முக்கிய வினா விடை ( FAQ's) தனியாக கீழே உள்ளது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , அந்தந்த Graduate co-ordinator ஐ தொடர்பு கொள்வது தான்.


பி.கு : ஒவ்வொரு கோர்ஸும்ஒவ்வொரு தினுசு. ஆக தனித்தனியே உங்களுக்கு தேவையானதை எடுத்து பாருங்கள்.வேறு எதுனா தெரிய வேண்டும் என்றாலும் கேளுங்கள் , ஒவ்வொரு கோர்சிலும் ஒரு தமிழர் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்



List of EM courses : http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

FAQ's : http://www.u-picardie.fr/userfiles/file/Mundus%2520_%2520Frequently%2520asked%2520questions%5B1%5D.pdf

Wednesday, July 22, 2009

ஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து

1.ஒரு தலைப்பிடாத கவிதையாய்

வாழ்க்கை

ஒரு நாள் இரண்டு நாள் என

தொடர்ந்து நாட்களை எண்ணினேன்

காலையை தொடர்ந்து மாலை

இரவாகும் காலப் புணர்ச்சியில்

பிரமித்து நின்றேன்

கடற்கரையில்

2.அற்புதமாய் புலர்ந்த காலை

நீள நிழல்கள்

நீலத்தில் கோலமிட

வண்ணக்கலவயாய் உலகம்

எங்கும் விரிந்து கெட்டியாய் தரை


என் காலடியில்


நிஜம் புதைந்து கிடக்க


3. தும்பி

எனது ஹெலிகாப்ட்டரை

பறக்க விட்டேன்

எங்கும் தும்பிகள்

எனது தும்பிகளை

பறக்க விட்டேன்

எங்கும் வெடிகுண்டு விமானங்கள்

எனது வெடிகுண்டு விமானங்களை

பறக்க விட்டேன்

எங்கும் அமைதி

எனது அமைதியை

பறக்க விட்டேன்

எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்


4. களைதல்

என்னை களைந்தேன்

என் உடல் இருந்தது

என் உடலை களைந்தேன்

நான் இருந்தது

நானை களைந்தேன்

வெற்றிடத்துச்

சூனிய வெளி இருந்தது

சூனிய வெளியை களைந்தேன்

ஒன்றுமே இல்லை

5.இசை/ஓசை

வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்

அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக

எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி

உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது


கூர்ந்து கேட்டால்

அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை

Friday, July 10, 2009

ஆத்மாநாம் கவிதைகள்

இவரை பற்றி எங்கயாது போய் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது , இவரின் கவிதையும் இவரையும் தவிர! எனக்கு பிடித்த பத்து இதோ

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்

நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்

என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்

நீங்கள் யாரென்று சொல்லுங்கள்

உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்

முழித்த முழி முழியையே முழுங்கும் போல

நீங்கள் யாரானால் என்ன

நான் யாரானால் என்ன

அனாவசியக் கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல்

சற்று சும்மா இருங்கள்

சில எதிர்கால நிஜங்கள்

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய

அரிசி மணிகள் போல்

தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த

சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்

மொசைக் தரையில் தவறிப்போன

ஒற்றை குண்டூசி போல்

இவற்றைப் போல் இன்னும்

ஆயிரக்கணக்கான போல்கள்

பழக்கம்

எனக்கு கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக்கொண்டிருக்கிறேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்துகொண்ட சில மாக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

ஐயோ

சொன்னால் மறுக்கிறார்கள்

எழுதினால் நிராகிக்கிறார்கள்

தாக்கினால் தாங்குகிறார்கள்

சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்

அற்புத மாக்கள்

சுற்றி

அரச மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

வேப்ப மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

எந்த மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை இவன்

ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?

மீதி ஐந்து அப்பாலிக்கா

Wednesday, June 24, 2009

வெகு நாள் ஆசை


எல்லா இரவுகளும் போல அந்த இரவு இல்லை. குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி இருந்தது. நெஞ்சுக்குள் யாரோ கத்தியை இறக்குவது போல் குளிர் என்மீது பாய்ந்து கொண்டிருந்தது. இருட்டு முழுவதுமாக பரவியிருந்தது.


வெளியே எட்டி வானத்தை பார்த்தேன் , அடை மழை. மழையை மிஞ்சும் அளவு கதறி அழலாம் போல் இருந்தது. அதற்கும் தெம்பற்று மனம் இறக்கை ஒடிக்கப்பட்ட பறவை போல் முடங்கி கிடந்தது. தனிமை , நானே தேடிக்கொண்டது இல்லை. சபிக்கப்பட்ட தனிமை. மரணத்தை தீண்ட மனம் எவ்வளவு எத்தனித்தாலும் உடலளவில் தைரியம் இல்லை. எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு வீறு கொண்டு எழ நினைத்தாலும் கண்ணீர் துளியில் ஒடுங்கிப்போகிறேன். எனது வண்டி நேராக நான் பள்ளிபருவத்தில் படித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மறுநாள் மதியத்தில்.





மாலதி , நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் அவள் கூறும் பதிலின் ரணத்தை விவரிக்க இயலாது. படிப்பு மட்டுமே குறியாக இருந்தது கல்லூரியில் எனக்கு , இரண்டாவாதாக வந்தேன் கல்லூரியில்.உடன் வேலை , எதிர்பாரா சம்பளம். எல்லோர் போலும் நான் வீணாக குடி கும்மாளம் என்று காசை சீரழிக்கவில்லை , மாறாக சேர்த்தேன். சென்னையில் சொந்த வீடு பன்னிரண்டு லட்ச ருபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு , அக்கா கல்யாணத்தை தனி ஆளாக தடபுடலாக நடத்தி காட்டும் அளவிற்கு சேர்த்தேன் . அடுத்தது எனக்கு ! வருபவளை ராணி போல் வைத்திருக்க வேண்டும் , தேடி தேடி முழுவதும் இயந்தரமயமாக்கப்பட்ட வாஷிங் மெஷீன் வாங்கினேன் , சோபா , இத்யாதி , இத்யாதி.

மாலதி நான் படித்த அதே படிப்பை படித்திருந்தாள் . பெண் பார்க்கும் போதே மனம் விட்டு பேசினோம். ஆசையாக நடந்த கல்யாணம். தலையில் வைத்து கொண்டாடினேன், மனசெல்லாம் மாலதி.அவளுக்கும் சந்தோஷத்திற்கு குறை இல்லை. அவ்வபொழுது உடலுறவில் நான் சோர்வடையும் பொழுது அவள் எரிச்சல் பட்டுக்கொள்வதை நான் பெரிதாக எடுக்க வில்லை. தனிமையில் மருத்தவரிடம் போனபொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை என்றார்.

"என்னன்னா இந்தாண்ட வந்திருக்க , எத்தினி நாள் ஆச்சு ? "நான் பன்னிரண்டாம் படிக்கும்பொழுது மெக்கானிக் கடையில் வேலைபார்த்த காளி இப்பொழுது கடை முதலாளி.

"நல்லா தாண்டா இருக்கேன். ராஜன் எப்டி இருக்கான்? ."

"இருக்கான் அவனும். என்ன இந்தாண்ட? ." வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் .

" ஒண்ணுமில்ல , மூர்த்தி அண்ணன் வீடு எங்க இருக்கு? வினோத் அடிக்கடி போவானே. "குரல் கம்மிப்போய் சொன்னேன்


"இன்னானா உனக்கு பழக்கம் இல்லையே? கண்ணாலம் வேற ஆயிடுச்சுனாங்க பசங்க . "


வூடு எங்க டா ? சிரித்துக்கொண்டே கேட்டேன்


" டேய் சங்கரு , அண்ணன மூர்த்தி அண்ணன் வூட்டாண்ட இட்டுனு போ. "


இருவருமே சிரித்துக்கொண்டோம். காளிக்கு தெரியும் நான் போதைப்பொருள்களை தொட்டதே இல்லை. வினோத் பள்ளிக்கே கொண்டு வருவான். காளி கடையில் வைத்து பல முறை அடித்திருக்கிறான் . மூர்த்தி வீட்டிற்கு போவதற்கு நான் புதிதாக வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் போல இருந்தது.


இந்த முறை அவள் என் முகத்திலேயே அறைந்தாள். ச்சீ என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தாள். இது போல் தினமும் , எனக்கு ரண வேதனையாக இருந்தது , எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அவளுக்கு. ஆனால் அவள் ஏன் மாற வேண்டும்? யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள்? சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. " என்னுனுச்" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் ? . அன்றிரவு பெப்சி டின்னை உடைத்தேன் , பொங்கி வருவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே மீண்டும் தனிமையில்.



இதுக்குமேல வண்டி போவாதுனா என்றான் அந்த சின்னபய்யன்.

"எந்தாண்டடா போனும்? "

" இன்னும் ரெண்டு சந்திருக்கு , நானே இட்டுனு போறேன் , இல்லேனா காளினா திட்டும் "


மூர்த்தி வீட்டை ஒட்டி நிறைய குடிசை இருந்தது. அவன் பார்க்க நகைக்கடை பொம்மை போல் இருந்தான். உள்ளே போனேன் , போய்க்கொண்டே இருந்தேன். பல வகையான போதை , கல்லூரி மாணவர்கள் , பெண்கள் உட்பட. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாதாம். வாடிக்கையாளர் திருப்தி தான் முக்கியம் என்றான். பாம்பு கடி போதை கூட இருந்தது.சிறுவன் கழண்டு கொண்டான்.


" இன்னாப்பா வேணும் உனக்கு? " என்றான் மூர்த்தி சன்னமாக.


" ஹெராயின் " என்றேன்.


சிரித்துக்கொண்டே அடித்து பழக்கம் இருக்கா என்றான் , இல்லை என்று தலை ஆட்டினேன்.

அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது


ஹெராயின் முதலில் பௌடர் போல் இருக்கிறது. அதை அவன் அளந்து தான் கொதிக்கும் நீரில் போடுகிறான் , என்னை அந்த குழாயின் முனையை பற்றிக்கொள்ள சொன்னான் , புகை வந்தது.


" இழுங்க நல்லா " என்றான். பயத்தை மறந்து இழுத்தேன் , தலை இரண்டாக சுற்றியது. ஒரு சின்ன நாற்காலியில் உக்காந்திருந்தேன் , சிரித்துக்கொண்டே கீழே விழுந்தேன். கொஞ்சம் உணர்வற்று ஒரு அரைமணி நேரம் இருந்திருப்பேன். அடுத்த கேள்வி மூர்த்தியிடம் கேட்டேன்.


"பொண்ணு வேணும்னா , வீட்டுக்கு இன்னிக்கு ராத்திரி கூட்டினு போனும் "

"எப்போ வுடுவ ? மொத்தமா ஆறாயிரம் செலவாகும். சரக்குக்கும் சேர்த்துதான் சொல்றேன்"


"பிரச்சனை இல்லனா. "


"சரி அட்ரஸ் குடுத்துட்டு போ , மாரிதான் கொண்டாந்து விடுவான் பொண்ண"


"அண்ணா இருக்கறது பிளாட்டுனா , பிரச்சன ஆயுடாதே? "


சிரித்தான். " அது மாரி பொண்டாட்டி தான் பா. ஒன்னியும் கவலைப்படாத , வுட்டுட்டு கிளம்பினே இருப்பான் . நீ காத்தால டாக்சிக்கு கூட துட்டு தர வோணாம் "


சரினா என்று மொத்த ஆறாயிரமும் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

மாரி சொன்ன நேரத்துக்கு முன்னையே விட்டுவிட்டான் அவன் பொண்டாட்டியை . புருஷனே புரவலராக அமைய பலர் விரும்புவதில்லை , சிலருக்கு கட்டாயம். சிலருக்கு வேட்கை!


முழு பலத்துடன் அவள் உடலை புணர்ந்தேன். அவள் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை கூட பொருட்படுத்தாமல் . சிறிது நேரம் கழித்து உணர்வற்று படுத்திருந்தாள் ,


வெகு நாள் ஆசை அவள் கழுத்தில் இருக்கும் தாலி அறுந்து ரத்தம் என் திறந்த மார்பை தொட்டது.குளிரின் பிடியில் ஜென்னலை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறேன் .