Sunday, March 20, 2011
ரண்டடக்கா
ஹாஃப்ட்பான்ஹாஃப் என்றால் முக்கிய ரயில் நிலையமாம் யாரோ சொன்னார்கள். அதிலிருந்து நேராக கோனிங்ஸ்ட்ராசே வந்து சேர்ந்தேன் ,பக்கம் தான் நம்மூர் கடைத்தெரு மாதிரி இருக்கும். மணி எட்டிருக்குமா? இருக்கலாம். கடைத்தெருவின் ஓரங்களில் பல்வேறு கலைஞர்கள் எதேனும் கருவியை வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவர் கிளியை தலையில் வைத்துக்கொண்டே சாக்ஸ்போன் வாசிப்பார் ,நாம் காசு போட்டோம் என்றால் கிளி கீக் என்று கத்தும். கண் தெரியாத இருவர் ஒரு பியானிஸ்ட்டுடன் வயலின் வாசிப்பார்கள் , சில மெக்சிக்க பாடகர்கள் பாடுவார்கள், அப்பறம் பெரிய வயலின் வைத்து ஒருவர் வாசிப்பார். அது அவர் உயரத்துக்கு இருக்கும்.
கோனிங்க்ஸ்ட்ராசேவில் இரண்டாவது இடதில் இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கினேன். கப் கேக்குகளுக்கென்று பரத்தியேகமாக ஒரு கடையுண்டு. அதன் வாசலில் எப்பொழுதும் ஒரு நாய் குட்டி இருக்கும் அதுக்கு நானும் எனக்கதுவும் சில நாட்களாக பரிச்சயம் ,கடந்து சென்றேன். செங்குத்தாக வரும் படிகளில் இறங்கினேன். அந்த சின்னத்தெருவை நான் வந்தடைந்த போது மணி 9 இருக்குமா? கம்மியாகத்தான் இருக்கும். அவன் அங்கு தான் அக்கார்டியோன் வாசித்துக்கொண்டிருப்பான் ,அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. தினமும்ப்போல் இன்றும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். பத்து மணிக்கு மேல் பக்கத்து சந்தில் இருக்கும் ஒரு க்ளப்புக்கு போய் விடுவான் முந்தா நாள் எட்டிப்பார்த்ததில் அங்கே காமக்களியாட்டங்கள் நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். கண்ணை மூடி அக்கார்டியானை அதன் பைக்குள் சொறுகினான் ,எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகளில் பாட ஆரம்பித்தான் ,நானும் உடன் சேர்ந்து கொண்டேன் அவன் சொல்லும் வார்த்தைகளையே சொல்லிப்பாடினேன். பக்கத்தில் உள்ள பையிலிருந்து எனக்கதை கொடுத்தான். சில்லறைகளை பொறுக்கிக்கொண்டு கிளப்பை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.
நான் அதை தடவிப்பார்த்தேன் ,குடுகுடுப்பை என்று சொல்லலாமா? இல்லை. இது வேறு சின்ன வயதில் இதே போல் ஒன்று பார்த்திருக்கிறேன் கைப்பிடி மாதிரி ஒரு குச்சு இருக்கும் அதன் மேல் குடுகுடுப்பைப்போல் உருண்டையாக ஒன்று.இரண்டு பக்கமும் நூலால் சின்ன ப்ளாஸ்டிக் பந்தை கட்டி விட்டிருப்பார்கள். கையை குவித்து அதை நடுவில் வைத்து உருட்ட ஆரம்பித்தேன் ரண்டட்டக்கா ரண்டட்டகா ரண்டட்டகா என்று சத்தம் போட்டது சிரிப்பாக வந்தது நிறுத்தவே முடியவில்லை. சுவற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன் ஹஹஹ்ஹா ரண்டடக்கா ரண்டடக்கா.
பேருந்து நிலையம் வரைக்கும் அதை வாசித்துக்கொண்டே போனேன். காலை முன்னே எத்தி எத்தி அதை வாசித்துக்கொண்டே ஹேய் ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டட்க்கா
அடுத்த காலை எத்தும்போதும் அதே ஹேய் ரண்டட்டக்கா ரண்டட்டக்கா ரண்டட்க்கா. பேருந்தில் யாரும் பார்த்துவிடக்கூடாதென்று கோட்டுக்குள் ஒளித்து வைத்தேன். ஒத்தையடி பாதியில் வீடு வந்தேன் ,வாசல் விளக்கு வேலை செய்யவில்லை. கதவை திறந்த நிமிடத்தில் படார் என்று மூடினேன் ,ஹே ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டடக்கா. கொஞ்ச நேரத்தில் சோர்வடைந்து விட்டேன்
92 இல் இருந்து இறங்கினேன். உள்ளே போக எனது அடையாள அட்டையை காட்ட வேண்டும் ,பெருநிறுவனம் அது. சில நாட்கள் முன்பு வந்து சேர்ந்த பொழுது அன்னாந்து பார்த்த கட்டிடங்களை இப்பொழுது பார்ப்பதில்லை. நீலத்திமிங்கலத்தின் வாய்க்குள் போவது போன்ற உணர்வை அந்த ஆட்டோமேட்டிக் கதவுகள் ஏனோ தருகின்றன. என் அறைக்கு போகும் முன்பு நான் வந்தேன் என்று ஒரு மெஷினிடம் சொல்ல வேண்டும்.8.34 க்கு வந்திருக்காய் என்றது. என் கணிணியில் இன்று செய்ய வேண்டியவற்றின் அட்டவனையைப்பார்த்தேன் , அது இருந்தது.
வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டேன் ,எனது கைகள் அளவுக்கு நீல நிற க்ளவுசை தேடியெடுத்துப்போட்டேன். அந்தப்பொடியை அளவெடுத்தேன் , அதை ஓங்கி அழுத்தி மாத்திரையாக்கும் வேலை , மெஷின் செய்யும். இங்கே அங்கே கொட்டி தொலைத்தது பொடி , கடிந்து கொண்டேன். பொடியை ஒரு சின்ன அளவிலான பாத்திரத்தில் போட்டேன். பாத்திரம் என்றால் பால் பாத்திரம் மாதிரியில்லை மேலும் கீழும் கொஞம் குண்டான ஸ்டீல் கம்பிகளால் மூட வேண்டும் ஆனால் கம்பிகளால் நிற்காது ,அதனால் அதை தாங்கிக்கொள்ள ஒரு நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்.நாற்காலியோடு கொண்டுபோய் அந்த அழுத்தும் இயந்தரத்தில் வைத்தேன். மேலிருந்து ஒரு பெரிய உருண்டை இரும்பு இதை அழுத்தும் , அதை ஏற்றி இறக்க கால் பக்கத்தில் பெடல் இருக்கும். ஒரு அழுத்து அழுத்தியாகிவிடின் அது அப்படியே நின்று கொள்ளும் , நாற்காலி தேவையில்லை பிறகு மெஷினாக அதை அழுத்த நாம் சில கட்டளைகள் கொடுத்தால் போதும்.
முடிந்தவுடன் எடுத்து பார்த்த பொழுது மாத்திரை உடைந்தார்ப்போல் வந்திருந்தது , பொடியைத்த்யாரிக்க எவ்வளவு நாட்கள் ஆயிற்று தெரியுமா என்று கத்தினேன் ,வாயைத்திற்க்காமல் என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து ஒருவன் வந்து பார்த்து சிரித்துவிட்டு போனான். நானும் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தேன். அடுத்த முறை செய்த பொழுது வடிவாக மாத்திரையை கொடுத்திருந்தது ,வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன் மூஞ்சியை திருப்பிக்கொள்வது போல் நாற்காலியிலிருந்து சரிந்தது.
ஏழாவது மாத்திரைக்கு பிறகு ஸ்டீல் கம்பியை தனியாக பிரித்தெடுக்க முடியவில்லை ,ஏன் என்றேன் மீண்டும் வரமாட்டேன் என்றது. தண்ணீர் ஊற்றிக்கழுவினேன் உள்ளே சிராய்ப்புகள் இருந்தது. சின்ன பேப்பரை நன்றாக சுருட்டி அதன் உள் அழுக்கை நீக்கினேன் ,தண்ணீர் ஊற்றி மீண்டும் கழுவியபொழுது முழுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தியில் இருப்பவனைப்போல் காட்சிகொடுத்தது. என்னை சாப்பிட அழைத்துச்சென்றார்கள்.
சாப்பிட்ட பிறகு ஒரு நடை நடப்பது அங்கே வழக்கம். முன்னே போகும் பெண்ணுக்கு மிக நீளமான தலைமுடி என்றான் பெர்ண்ட். அவள் இந்தியப்பெண் என்றான் ஃப்ரான்க். எப்படித்தெரியும் இது பெர்ண்ட். அவள் பெண்ணாயிற்றே , இந்த பில்டிங்கில் இருக்கும் அனைத்து இளம்பெண்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்றான். பொதுவாக இந்தியப்பெண்கள் இப்படி முடி வைத்திருப்பார்களா என்று கேட்டான் ,தெரியாது என்றேன். உனக்கு என்ன எழவுதான் தெரியுமோ என்று முனுமுனுத்தான். நான் அவர்களை விட்டு வேகமாக நடந்திருக்கிறேன் என்பதை வேலையிடத்துக்கு வந்ததும் உணர்ந்து கொண்டேன். பாத்திரம் காய்ந்து விட்டிருந்தது. அதை மீண்டும் இன்று அழுத்த மணமில்லை.
அவன் அங்கே தான் இன்றும் உட்கார்ந்திருந்தான் ,வழக்கம் போல் ஆள் அரவமில்லை. இன்று கூடதல் குதூகலத்துடன் எனது ரண்டட்டக்காவை எடுத்து வாசித்து காமித்தேன் அவன் குதிக்க ஆரம்பித்தேன் ,சிறிது நேரம் ஆடிவிட்டு நகர்ந்துவிட்டான் ,அவன் பின்னே சென்றேன். வராதே என்று கத்தினான் ,நான் அதை ஆட்டிக்கொண்டே அவனை அடைந்தேன்.க்ளப் வந்துவிட்டது. அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே அதை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் காலைஆட்டுகையில் என் கையிலிருந்து அதைப்பிடுங்கி அதன் மேலேறி குதிக்க ஆரம்பித்தான் எனக்கு வந்த கோபத்தில் அவனை கீழே தள்ளி விட்டேன். அதை மங்கலான வெளிச்சத்தில் பார்த்தேன் ,முழுவதுமாக சப்பளிந்திருந்தது நூல்கள் அறுபட்டு போயிருந்தன. அழுகையை அடக்கிக்கொண்டு தேவுடியாப்பைய்யா என்று தமிழில் திட்டினேன் ,அவனுடன் இப்பொழுது இன்னும் சிலர் இருந்தார்கள் ஒருவன் என் கையை ஓங்கி மிதித்தான் , நான் மிச்சமிருந்ததை பொறுக்கிக்கொண்டு வலப்பக்கம் இருக்கும் குறுக்குச்சந்தில் ஓடி வந்துவிட்டேன்.பின்னால் யாரும் வரவில்லை.
இன்றும் வாசல் விளக்கு வேலை செய்யவில்லை ,கதவைப்பூட்டாமல் எனது மெத்தைக்கு வந்தேன் கொஞ்ச நேரம் விசும்பியிருப்பேன் போல ,பிறகு தூங்கிவிட்டேன்.
காலை 8.43 க்கு வந்திருக்கிறாய் என்றது மெஷின் ,நன்றி சொல்லாமல் நடந்தேன். அட்டவனை மாறவில்லை , 50 மாத்திரைகள் தயாரிக்க வேண்டுமே! மீண்டும் பாத்திரத்தை வெளியில் எடுத்தேன். இனிமேல் அவனை பார்க்கப்போவதில்லை என்றேன் ,சரி என்பது போல் பதில் சொல்லியது. நேற்றே வேலையை முடித்திருக்கலாமே என்று ஒரு குரல் ,எனது மேற்பார்வையாளருடையது. முடித்திருக்கலாம் தான் ஆனால் 10க்கு மேல் தொடர்ந்து இதை அழுத்தினால் இதற்க்கு காயங்கள் ஏற்படுகின்றன சிறிது ஓய்வுத்தேவை என்றேன். உனக்கா என்றார் ,இல்லை சொன்னேனே இதற்க்குத்தான் ஓய்வு. அதற்க்கென்ன உயிரா இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கேட்டார். எனக்கு அவர் கேட்ட கேள்வி புரியவில்லை.
Thursday, January 20, 2011
வகுப்பறை
வகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயரமாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.
விளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.
இதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புதமாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.
+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.
வகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.
முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது?
வெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.
நான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.
காரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே! ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.
சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.
இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.
Saturday, July 17, 2010
Inception 2010 கதை/விமர்சனம்.

Friday, June 11, 2010
பிட்டோகோரஸ் தியரம்

சரியாக நினைவு இருக்கிறது , நான் பத்தாம் கிளாசில் தான் பிட்டு முதல் வாதத்தை கடைபிடித்தேன்.இந்த பொருள் முதல்/கருத்து முதல் வாதம் போல் பிட்டு முதல் வாதம் கஷ்டமில்லை.எளிதாக புரியும் மொழி நடையில் நாமளே எழுதிக்கொள்வது தான் பிட்.
Wednesday, June 9, 2010
குறுமலாப்பேரி கிரிக்கெட் டீம்
Saturday, June 5, 2010
பிராஹாவில் கோயிஞ்சாமி

உங்களில் யார் செய்த பாவமோ எனக்கு எழுத நேரம் கிடைத்திருக்கிறது.
But I want a lot for you, for everyone, so I have to pay a lot. Do not lose your heart after my sacrifice, tell Jacek to study harder and Marta too. You must never accept injustice, be it in any form, my death will bind you. I am sorry that I will never see you or that, which I loved so much. Please forgive me that I fought with you so much. Do not let them make me a madman.
Say hi to the boys, the river and the forest
Friday, February 12, 2010
விண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்

இது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.
Thursday, February 11, 2010
நித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி தீவாணி




Wednesday, February 10, 2010
இலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை

டெலிக்ராபில் வந்த பீட்டர் போஸ்டரின் இந்த கட்டுரையின் தமிழாக்கம்
Wednesday, December 30, 2009
2010
Thursday, December 10, 2009
ஹய்யா கவிதை - உரையாடல்

வெறிச்சு வானத்த பார்க்கணும்
Tuesday, August 18, 2009
ஆட்டம் க்ளோஸ்

தோழர் ரமேஷ் என்னை கேட்டவுடன் தான் நான் செய்வதே எனக்கு உரைத்தது."என்னடா தம்பி யார் படிக்காட்டியும் பதிவு அடிக்கடி போடறியே , போறதுக்குள்ள நெறைய எழுதனும்னு வேண்டுதலா? "
என் கல்லூரியில் , ஆண்டை ஷரீப் இருவர் தான் தொடர்ந்து வலைத்தளங்களை படித்து வருவார்கள். பல எழுத்தாளர்கள்களுக்கு தங்கள் ரசிகர்களை பற்றி தெரிவதே இல்லை,தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை . கடை நிலை ரசிகனுக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பிரமிப்பு அவ்வளவு ஜாஸ்தி. மருதனின் புத்தகங்களை நானும் ஆண்டையும் பிரித்து வைத்து வாங்கி படிப்போம். இருவரும் ஒரே புத்தகம் வாங்காமல் இருவேறு புத்தகங்கள் வாங்கி எக்ஸ்சேஞ்சு செய்து படித்து கொள்வோம். காரைக்குடி புத்தக கண்காட்சிகள் ! மிஸ் யு ஆண்ட.
தமிழ் வலைத்தளம் அறிமுகமே இல்லாதவர்களுக்கு நான் முதலில் இதை தான் படிக்க குடுப்பேன். இவரின் அனைத்து பதிவுகளையுமே படித்திருக்கிறேன் :). சேடன் பகத் புத்தகம் ஜாலியாக படித்தது , மஸக்கலி பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் , தில்ஷன் கேப்டனாக இருந்த மேட்சை நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன் , உலக திரைப்படங்கள் , பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் , மைக்கேல் ஜாக்சன் , சச்சின் காஸ்பரோவிச் பந்தில் அடித்த சிக்ஸ் என அனைத்தும் என் ரசனைக்குரிய ஏரியா.
நான் என் வாழ்கையிலேயே கதைகள் எழுதியதில்லை. உரையாடல் , உயிரோடை போட்டிகளுக்காக தான் கதைகள் எழுதினேன்.நடத்தியவர்களுக்கு நன்றிகள் பல.நான் அடிக்கடி படித்த வலைத்தளத்தில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக என் அம்மா காலத்து நபர். முந்திய தலைமுறைக்கு தான் எவ்வளவு ரசனை இருந்திருக்கிறது? புத்தகங்கள் , ஜென்சி , இளையராஜா இசை , கவிதைகள் ஹ்ம்ம் என் கல்லூரியில் எத்தனை பேர் புத்தகங்கள் படித்திருக்கிறார்கள்?
இவ்வளவு நீண்ட மொக்கை , நான் இந்த பக்கம் தலை வைத்து படுக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவிப்பதர்க்கே. அதற்குள் பதிவுகளை படிக்க முடிந்து பின்னூட்டம் போட முடிந்தால் சந்தோசம்.
பி.கு : இந்த மொக்கையை திரட்டிகளில் சேர்க்க வேண்டுமா என்ன?
Monday, August 17, 2009
சைக்கோ கொலைகாரர்கள் - ராபர்ட் பிக்டன்

எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு , வெளியே சொல்ல முடியாததும் கூட. எனக்கு மிகவும் போர் அடிக்கும்பொழுது எல்லாம் , உலகின் மோசமான சைக்கோ கொலைகாரர்களின் வரலாற்றை படிப்பேன். அவர்களில் பால்ய பருவம், அவர்களை கூசாமல் கொலை செய்ய தூண்டிய காரணிகள் , அவர்களின் செக்ஸ் வேக்கைகள் , அவர்கள் கொலை செய்யும் விதம் , கொலை என்றால் தென்னன்கொலையா என்னும் ரேஞ்சுக்கு அதை மறந்து இயல்பு வாழ்கை வாழும் குரூரும் என்று அனைத்தையும் படிப்பது எனக்கு பிடித்தமான விடயம். ( நீ உருப்டாப்புல தான் என்று கூறும் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது )
சிலரை பற்றி படிக்கும் பொது உறைந்து போய் உக்காந்திருக்கிறேன். பயம் என்னும் ஒற்றை சொல்லை உடைத்து விட்டால் , கொஞ்சம் அவர்கள் உளவியல் சிந்தனைகளுக்கு உள்ளே போய் பார்த்தால் கொலை நடுங்கிவிடும். மனிதருக்குள் மிருகம் படித்ததிலிருந்து எனக்கு இந்த பழக்கம் தொற்றி கொண்டது என்பதே உண்மை.
வான்கோவரில் பட்டப்பெயருடன் ஒரு ஊர் உண்டு , " லோ ட்ராக் " என்று அந்த மாவட்டத்தை அழைப்பார்கள். ஒரு முறை அங்கே சுற்றி நடந்துவந்தீர்கள் என்றால் , காலுக்கடியில் உபயோகிக்கப்பட்ட காண்டம்கள் , தூக்கி எறியப்பட்ட சிரிஞ்சுகள் என்று அனைத்து ஆரக்யோமான விஷயங்களும் படும். பதினோரு வயதில் கூட அங்கு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை நீங்கள் காணலாம். 1995 இல் ஒரு புள்ளி விவரத்தை பார்த்த பொழுது லோ ட்ராக்கில் இருக்கும் பெண்களில் 73% விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் .1998 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் அங்கே ஒரு நாளைக்கு ஒரு நபர் இறந்துகொண்டிருந்தார் , போதை பொருளுக்கு அடிமையாகி , எய்ட்ஸ் வந்து , கொலை செய்யப்பட்டு.
ஆம் கொலை செய்யப்பட்டு , ஆனால் இதை கண்டுபிடிப்பதற்குள் கானடா போலீஸ் செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டது. காணாமல் போனவர்கள் பெயர்விவரம் மற்றும் நாட்கள் விவரம் இங்கே எழுதினேன் என்றால் எனக்கு தாவு தீர்ந்துவிடும். எண்களை போட்டாலே தலை சுத்தும் , எண்பதுகளில் ஆரம்பித்தது 2002 வரை நிற்கவே இல்லை. எப்படி எப்படி எல்லாமோ ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள் 98 இல் மொத்தமாக ஒரு ஐம்பத்து நான்கு பெண்களை காணவில்லை ( காணலைன்னா 80களில் இருந்து காணவில்லை என்பதிலிருந்து நேற்று காணமல் போனவர் வரை) கிம் ரோசொமோ என்பவர் முதலில் திருவாய் மலர்ந்தார் " ஒரு வேலை இதெல்லாம் ஒரே ஆளின் கைவண்ணமாக இருக்கலாமோ? "
ஆதாரம்? சாட்சிகள்? ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. எந்த விபச்சாரியும் சாட்சி சொல்ல பயந்தார்கள் . தானும் மாட்டிக்கொண்டால்? . 98 இல் ஒரு மிக மிக முக்கியமான சாட்சியம் சிக்கியது. "Piggy Palace Good Times Society என்று இவனுங்க நைட்டு பெண்களை வெச்சு கூத்தடிக்கரானுவோ எசமான். அதுலயும் ராபர்ட் பிக்டனை பார்த்தாலே சரி இல்லை. நேத்து கூட அவன் பண்ணையில் ஒரு பண்ணி என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்துச்சுனா பார்த்துகோங்களேன் , பண்ணிங்க எதுக்கு எசமான் மனுஷங்கள கடிக்கணும் ? " என்றார் ஹிச்காக்ஸ் என்னும் பண்ணை வேலையாள்.
ஏற்கனவே ஒரு முறை ஒரு பெண்ணை கொலை செய்ய முயன்றதற்கு பிக்டனை போலீஸ் பிடித்தது . போதிய சாட்சியங்கள் இல்லாததால் தப்பித்து விட்டான். அப்பவும் கொஞ்சம் கூட சூதானம் இல்லாமல் இருந்தார்கள் கானடா போலீஸ் , நாங்க பிக்டனின் பண்ணையை தேடினோம் ஒன்றுமே இல்லையே என்றார்கள் போலீஸ்.
சாட்சியங்களை நீதிமன்றத்தில் காட்டும் பொழுது பெண் வக்கீல்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள் . 22 காலிபர் துப்பாக்கி ஒன்று டில்டோவுடன் ( அர்த்தம் தெரியாவிடின் விட்டு விடுங்கள் :P ) சிக்கியது.கண்ணால் பார்த்த சாட்சியங்களிலேயே முக்கியமாக கருதப்பட்டது பெல்வுட் , பிக்க்டன் தனது கொலைகளை எப்படி நிறைவேற்றுவான் என்று தனக்கு நடித்து காட்டியதாக சொன்னான்.
" அவர்கள் கைகளை கட்டி போட்டு , டாகி முறையில் உறவு கொண்டு பின்பு கொலை செய்து தனது பன்றிகளுக்கு உணவாக்கி விடுவான் . பெண்களை வசியம் செய்ய அவர்களுக்கு பிடித்த போதை பொருளை பிக்டன் கொடுத்தான் " என்றார். அவரே ஒரு போதைப்பொருள் அடிமை ஆதலால் இத்தனை நாள் அதை போலீசிடம் சொல்லவில்லை என்றும் சொன்னார்.
Thursday, August 13, 2009
தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்

தமிழை மொத்தமாக கொலை செய்கிறார். ழ வருவேனா என்கிறது , இருந்தும் பாடிக்கொண்டே தான் இருக்கிறார். ஏன் ? தோரணையில் " வா செல்லம்" கேட்டீர்களா? அதை தமிழ் பாடகர் ரஞ்சித் கூட பாடி இருந்தார் இருந்தும் திரையில் ஒலித்தது உதித் குரல் தான். கீழ் நோட்ஸில் உதித்துக்கு உள்ள கம்பீரமான குரல் வளம் ஒரு காரணம். " சஹாரா " போன்ற பாடல்களில் எந்த உயரங்களையும் அனாயசமாக தொட்டு விட்டு வந்து குழைத்து பாடுவார்.
இவர் பாடிய ஹிந்தி பாடல்களிலேயே எனக்கு " ஏ தாரா " சுவதேஷில் உள்ள பாடல் மிகவும் புடிக்கும். தமிழில் ஒரு ஹிந்துஸ்தானி சாயல் பாடல் வந்தாலே யுவன் உதித்தை கூப்புடுகிறார் , " எங்கேயோ பார்த்த மயக்கம்" ஒரு சிறந்த உதாரணம். ஐம்பதற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் தமிழில் பாடி இருப்பார்.
2. சோனு நிகம் :

தலை இன்னும் தமிழில் அதிகம் பாடவில்லை. " விழியில் என் விழியில்" என்று கிரீடத்தில் தெளிவான தமிழுடன் ஒரு குரல் கேட்டதல்லவா? சோனுவின் குரல் தான். ஹிந்தியில் இவர் பாடிய பாடல்களுக்கு எல்லாம் கண்மூடித்தனமான வெறியன் நான். எந்த சிரமமான பாடல்களையும் சொடுக்கு போடும் நிமிடத்தில் சோனுவால் பாட இயலும். இவர் இதற்க்கு முன்னால் பாடிய ஒரே தமிழ் பாடல் " வாராய் என் தோழி " ஜீன்ஸ் படம்.
3.ஜாவெத் அலி :

திரும்பவும் உச்சரியுங்கள் , ஜாவெத் அலி அதே தான். இந்த பெயரை இனி எந்த திரை இசை ரசிகனாலும் புறக்கணிக்கவே முடியாது. மச்சான் குசாரிஷ் கேட்டியா டா ? சோனு சோனு தான் டா என்றேன் , இணையத்தில் தேடி நண்பன் ஒருவன் பெயர் சொன்னான் , பாடியது யாரோ ஜாவெத் அலியாம் டா.
ஹிந்தியில் பல ஹிட் பாடல்கள் , " து முஸ்குரா " , " ஜஷ்னே பகார் " போன்ற சொக்க வைக்கும் மேலோடிகள். தமிழில்? குங்குமப்பூவும் கொஞ்சுபுராவும் படத்தில் "சின்னஞ்சிறுசுகள்" , சர்வத்தில் "சிறகுகள் நீளுது" , வாமனனில் " ஏதோ செய்கிறாய்" என்று இவர் பாடிய அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. அதிலும் முஸ்குரா பாடலில் என்னமா அசத்தி இருக்கிறார்? வளமான எதிர்காலம் உண்டு ஜாவதுக்கு .
4. சுக்விந்தர் சிங்க் :

தக்க தையா என்று அலறிய குரல். இவரது பல இந்தி பாடல்கள் பிரமிப்பூட்டும் நுணுக்கம் கொண்டவை. இவரே இசையமைத்த நஷா ஹி நஷா அருமையான பாடல். இவர் பாடிய பல பாடல்கள் இந்தியில் பட்டையை கெளப்பி இருக்கின்றன. தமிழில் கம்மி தான் போல.டிஷ்யூம் படத்தில் இருந்து " கிட்ட நெருங்கி வாடி " தான் லேட்டஸ்ட் .
5.கிருஷ்ணா குமார் குனாந்த் :

கேள்விப்பட்டது இல்லையா? கே.கே என்றால் தெரியும். பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதனில் உள்ள " காதல் வளர்த்தேன்" , 12 B படத்தில் வரும் " எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது , அந்நியனில் வரும் " அண்டங்காக்கா கொண்டைகாரி " என்ற பல ஹிட் பாடல்களும். "மொழ மொழன்னு" போன்ற திராபை பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடியதிலே " ஒரு பனித்துளி" ( கண்ட நாள் முதல் ) ," உன்னை தொட்ட" ( இதய திருடன் ) , " உயிரின் உயிரே " ( காக்க காக்க ) எல்லாமே மிக பிரபலமான பாடல்களே. தமிழ் பாடகர் போலவே தோன்றினாலும் , பல ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அங்கே இவர் மிகப்ப்ரபலம்.
6.கைலாஷ் கெர் :

கிராமிய பாடல்களா? உற்சாகமான பாடல்களா? கொஞ்சம் குத்துடன் குரலை ஏற்றி இறக்கி பாட வேண்டுமா? கூப்பிடு கைலாஷ் கெரை என்பது தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் டிரென்ட். அவருக்கு சாதரணமாகவே ஷ வராது இது தமிழிற்கும் பொருந்துகிறது.
பீமாவின் ரங்கு ரங்கம்மா , அபியும் நானுமில் " ஒரே ஒரு ஊரிலே " , லீயில் " யாரு யாரு " போன்ற பாடல்களுக்கு சொந்தக்காரர். இவர் அறிமுகம் ஆனது மஜா படத்தில் " போதுமடா சாமி" என்ற பாடலில்.
சலாம் எ இஷ்கு திரைப்படத்தில் " யா ரப்பா " பாடலை கேட்டு பாருங்கள் , அல்லது " தேரி தீவாணி " என்று இணையத்தில் தேடி பாருங்கள் ! கைலாஷ் ஸுபி பாடகர்களில் மிக முக்கியமானவர்.
7.ரூப் குமார் :
வாமணன் படத்தில் " ஒரு தேவதை " பாடல் கேட்டேர்களா? இல்லையெனில் முதலில் போய் கேளுங்கள் , ரூப் பின்னியிருக்கிறார். இவர் மின்னலே படத்தில் " வெண்மதி வெண்மதியே " கூட பாடி இருக்கிறாராம். இன்னும் நிறைய பாடல்கள் பாடலாம் மயக்கும் குரல் .
இது போக விஜய் பிரகாஷ் , குணால் காந்ஜாவாலா , ஷான் , ஹிமேஷ் போன்றவர்களும் தமிழில் பாடி இருக்கிறார்கள். பிற மொழி பாடகர்கள் மொழியை சிதைக்காமல் பாடினால் கண்டிப்பாக ரசிக்கலாம். சிதைத்தும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம்?
Wednesday, August 12, 2009
சீனா விலகும் திரை - நூல் விமர்சனம்

அப்படி எதுவுமே இல்லை , தன் பயணத்தின் வாயிலாக தனது ஐந்து வருட இருப்பின் வாயிலாக புள்ளி விவரங்களை ஆங்காங்கே அள்ளி தெறித்து , ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் வரலாற்றை நினைவில் நிறுத்தி எழுதி அசத்தி இருக்கிறார் பல்லவி அய்யர் ( படிச்சு வாங்கின பட்டமுங்களா? ). இவ்வளவு லைவ்லியான மொழிபெயர்ப்பா என அதிசயிக்க வைக்கிறது ராமன் ராஜாவின் உழைப்பு!
சீனாவின் தனி நபர் வருமானம் இந்தியாவை விட இரு மடங்கு. இந்தியாவில் 5.7 கோடிகுழந்தைகள் சத்தான உணவில்லாமல் வளர்ச்சியில் தடைபடுகிறார்கள் ஆனால் சீனாவில் எழுபது லக்ஷம் தான். இந்தியாவில் 15 வயது மேர்ப்பட்டவர்களில் 68% பேர் தான் எழுத படிக்க தெரிந்தவர்கள். சீனாவில் 95% .
நான் என்ன ரமணா விஜயகாந்தா? . விஷயத்துக்கு வருவோம் , ராமன் ராஜாவில் மொழிபெயர்ப்புக்கு ஒரு ஒரு உதாரணம் , சீன விருந்தாளிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது டெல்லியில் இருந்து ஆக்ரா அழைத்து செல்லப்படுகிறார்கள். சன்னமாக ஒருவர் கேட்கிறார் " நாம் நெடுஞ்சாலையில் பயணிப்போம் என்றீர்களே பல்லவி , அது எப்போ வரும்? "
" நாசமா போச்சு! நாம் அதில் தான் சென்று கொண்டிருக்கறோம். "
இதில் இருந்தே தொடங்கலாம் , சீனாவில் இருக்கும் சாலைகள் இந்தியாவில் இல்லை. ரயில் பாதைகளில் அசுர பாய்ச்சல். தொழிற் சாலைகள்? பட்டன் தயாரிக்கிரீகளா? பலூன் ? இரும்பு? பொம்மைகள்? எல்லாவற்றிலும் சீனா சீனா சீனா ! மாவோ சீனா இப்பொழுது கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாக பல்லவி கூறுகிறார். இருந்திருந்தால் 44.7% ஏற்றத்தாழ்வு இருக்காது ( inequality) . சீனா அடைந்த அனைத்து வளர்ச்சிக்கும் அது கொடுத்த விலை , ஜனநாயகம் !
புத்தகம் நெடுக ஜனநாயகத்தை புதைத்த வளர்ச்சியா? வளர்ச்சியே இல்லாமல் வெத்து ஜனநாயகமா என்று மண்டையை ஒடைத்து கொண்டிருக்கிறார். தீர்வு? நான் ஏழை குடும்பத்தில் பிறந்தால் சீனனாகவே ஆசை படுகிறேன் ஆனால் நடுத்தர குடும்பம் என்றால் இந்தியா தான் என்ற முடிவை முன் வைக்கிறார் .
பல்லவி ஹூடாங்கில் வசிக்கும் பொழுது அவரது வீட்டின் அதிபாரான திரு வூ ( கோடீஸ்வரர்) தன் வீட்டின் கக்கூசை சுத்தம் செய்கிறார். பலப் ரிப்பேர் பார்க்கிறார். தனது அம்மாவிற்கு ஆயி வேலை கிடைக்குமா என்று தனது நவ நாகரீக சீன மாணவி கேட்கும் பொழுது ஆடி போகிறார் பல்லவி. ஏனென்றால் இதெல்லாம் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகள் . சீனாவில் எந்த வேலையும் தரம் பார்க்காமல் செய்கிறார்கள் . வர்க்க பேதங்களின் , இன /மத பேதங்களின் முதுகெலும்பை உடைத்திருக்கிறார் மாவோ . இங்கே சாதீய ஏற்ற தாழ்வுகளை உடைப்பது சாதாரண விடயமா?
அதே நேரம் மக்கள் மாற்றி சிந்திக்க கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள் , இந்தியனுக்கு எடக்கு பேசாவிடின் தூக்கம் வருமா? சீனா காரன் எதுவும் நன்மைக்கே என்கிறார்கள். இரண்டு உதாரணங்கள் இதற்க்கு , திபெத்தில் தான் பார்த்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் " சீனர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்னொன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் ( கெட்ட செய்திகளாம்) மக்கள் மனசு ஒடிந்து விடும் என்று அவரது சீன மாணவி சொல்கிறார்.
மூச் , மாத்தி யோசிக்காதே என்கிறது அரசாங்கம். இணையத்தை தடுக்கிறார்கள் , எல்லாவற்றிற்கும் அடக்குமுறை. பொருளாதார ரீதியாக முதலாளித்துவமும் உள்ளே படை எடுத்து வந்தாகி விட்டது. இப்பொழுது தான் இடது சாரி சிந்தனைகளை தூசி தட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியின் தூண்களான விவசாயிகளின் அதிர்ப்தி தான் காரணம். ஆனால் அதிகார பீடத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கல்வி அறிவு படைத்த நடுத்தர மக்கள் கேட்க மாட்டார்கள் , காரணம் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் ராஜ போதை.
பலவியின் திபத் பயணம் , ஸ்பானிஷ் கணவர் , பீஜிங் மாணவிகள் ,ஹூடாங் வீடு மற்றும் வாழ்கை முறை , பொக்கை வாய் கிழவர்கள் , கக்கூஸ் கண்காட்சி , அங்கு அவர் சந்தித்த இந்தியர்கள் , வாஜ்பாய் வருகை , உணவு பழக்க வழக்கங்கள் , சீனாவும் மதமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களும் எப்படி பின்னி பிணைகின்றன இன்றைய கால கட்டங்களில் என்ற நுட்பமான ஆராய்ச்சி , யோகா மோகன் , திபெத் சிறுவன் , பீஜிங் தலைகீழாக மாறிப்போன காட்சிகள் , மலை மேல் ரயில் பிரயாணங்கள் , அவர் சந்திக்கும் உலகத்திலேயே பணக்கார கிராமம் அங்கு முன்னேற்றம் வர வித்திட்ட மனிதர் , அவர் கண்ட தொழில் சார்ந்த பேட்டிகள் , அவர் சந்தித்த சாக்ஸ் தொழிற்சாலை , பாதி புதுமையும் மீதி பழமையும் கொண்ட வீடுகள் ( இது தான் இன்றைய சைனா ) , தொழில் நகரம் அதில் இருக்கும் பொருள்கள் , மத வழிப்பாட்டு உருவங்கள் , செக்ஸ் பொம்மைகள் என்று ஒவ்வொன்றும் அவரின் ரசனையோடு கலந்த நுட்பமான தகவல்கள்.
அவர் சார்ஸ் பற்றி எழுதி இருக்கும் இடத்தில் நான் கடுமையாக முரண் படுகிறேன் அது இந்த புத்தகத்தின் சாரமும் கூட! முதலில் சீன அரசாங்கம் சார்ஸ் பரவிய விகிதத்தை குறைத்து சொல்லியது ( மீடியா அவங்க கையில் பாஸு). பிறகு உண்மையை ஒப்புக்கொண்டு தீர்வு கண்டது. இதை அறிந்த மாணவர்கள் /மக்கள் கலவரமானார்கள். அதற்க்கு பல்லவி அளிக்கும் பதில் இதுவே இந்தியா என்றால் நாங்கள் துல்லியமாக பத்திரிக்கைகள் ( மீடியா) மூலம் அலசி இருப்போம் என்று ஜம்பம் அடித்து கொள்கிறார்.
இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் பல்லவி. ஏன் சார்ஸ் இவ்வளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது? விமானம் மூலம் கூட பரவி வசதி படைத்தவர்களையும் கொல்லும் என்பதால் தானே? . Tuborculosis , வயிற்று போக்கினால் இந்தியாவில் சாகும் எண்ணிக்கை எவ்வளவு? அதன் புள்ளி விவரங்கள் வருவதே இல்லையே? ஏன் ? இந்திய மீடியா என்று நாம் எவ்வளவு பீத்தி கொண்டாலும் அது கார்பரேட்களின் கைப்பாவையாக உள்ளது ( They are corporate stenographers) இத்தனை இருந்தும் எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைவில்லை , மீடியாக்கள் மீதும்! ஏனென்றால் ஒரு பாலகும்மி சாய்நாத் இல்லையென்றால் மேற்சொன்ன விவரங்கள் எனக்கு தெரிந்திருக்காது.
மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்காமல் விடுபவர்கள் ஒரு முக்கிமான ஒப்பீடு நடையில் எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான / அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை இழக்கிறார்கள். A must read!
Thursday, July 30, 2009
எராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்

பொதுவாக , மேற்படிப்புக்கு ( MS , PhD) அதிகம் அமெரிக்கா அல்லது கனடா செல்லும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதற்க்கு மாற்றாக முற்றிலும் வேறுபட்ட , மிகவும் வித்யாசமான ஒரு மாஸ்டர்ஸ் தான் இந்த Erasmus Mundus .
இது எராஸ்மஸ் என்னும் மனிதனின் பின்னால் பெயரிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்தார் என்று இணையத்தில் படித்தால் கொஞ்சம் மொக்கையாக இருந்தது. விட்டு விடலாம் , பாதகம் இல்லை. ஆனால் ஒன்று முக்கியம் , மனிதன் ஐரோப்பா எங்கும் சுத்தி சுத்தி போய் படித்தார். ஏன் அது முக்கியம் என்றால் , இந்த படிப்பும் அப்படிதான். ஒரே இடத்தில் உக்காந்து ஜல்லி அடிக்காமல் , நாடு நாடாக சுத்தி கும்மி அடிக்க வழிவகுக்கும் படிப்பு இது .
குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் இருந்து , அதிகம் இரண்டாண்டுகள் வரை இந்த படிப்பு இருக்கும். குறைந்தது இரண்டு நாடுகளுக்காது செல்ல வேண்டும் , அதிகமாக நான்கு நாடுகள் கூட செல்லலாம். இது MS க்கு மட்டுமே உண்டான பிரத்யேக படிப்பு. மேலோ , கீழேயோ இதில் படிக்க முடியாது.
மொத்தம் 104 வகையான மேற்படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராயினும் உங்களுக்கு உகந்தந்து போல் ஒரு படிப்பு இருக்கும்! இதில் என்னை பொறுத்தவரை உதவித்தொகை மிகவும் அதிகம்.
பொதுவாக ஒரு செமஸ்டர் படிக்க உங்களுக்கு இரண்டு இடங்கள் தரப்படும் , அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சில செமஸ்டர்கள் இல் ஒரே இடம் , அதில் தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். நாம் மூன்றாம் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர் என்ற அடையாளத்தில் வருவோம் ( third country applicant). ஒரு கோர்ஸில் பதினெட்டு பேர் மூன்றாம் நாடுகளில் இருந்தும் , மீதி எழு பேர் ஐரோப்பாவின் உள் இருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள். ( இந்த எண்கள் மாறலாம் !! ) . ஆக நாம் ஒரு மாறுபட்ட பல்நாட்டு கலாச்சாரத்தை சந்திக்கும் வாய்ப்பாக இது அமைகிறது.பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் பல பல்கலைக்கழகங்கள் சென்று பயில ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது.
சேர்வதற்கு உண்டான தகுதி ஒவ்வொரு கோர்ஸ்க்கும் மாறுபடும்! அதில் ஆங்கில அறிவை காட்ட TOEFL/IELTS எடுப்பது அவசியம். முக்கால்வாசி படிப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.
மொத்தம் எத்தனை கோர்ஸ்கள் உள்ளன என்பதை இணைப்பாக தருகிறேன். உள்ளே போய் பாருங்கள் , ஒவ்வொரு ஹைபர்லிங்க்இலும் தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். இதுபோக எராசுமஸ் படிப்பை பற்றிய முக்கிய வினா விடை ( FAQ's) தனியாக கீழே உள்ளது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , அந்தந்த Graduate co-ordinator ஐ தொடர்பு கொள்வது தான்.
பி.கு : ஒவ்வொரு கோர்ஸும்ஒவ்வொரு தினுசு. ஆக தனித்தனியே உங்களுக்கு தேவையானதை எடுத்து பாருங்கள்.வேறு எதுனா தெரிய வேண்டும் என்றாலும் கேளுங்கள் , ஒவ்வொரு கோர்சிலும் ஒரு தமிழர் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்
List of EM courses : http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html
FAQ's : http://www.u-picardie.fr/userfiles/file/Mundus%2520_%2520Frequently%2520asked%2520questions%5B1%5D.pdf
Wednesday, July 22, 2009
ஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து
வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் என
தொடர்ந்து நாட்களை எண்ணினேன்
காலையை தொடர்ந்து மாலை
இரவாகும் காலப் புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்
கடற்கரையில்
2.அற்புதமாய் புலர்ந்த காலை
நீள நிழல்கள்
நீலத்தில் கோலமிட
வண்ணக்கலவயாய் உலகம்
எங்கும் விரிந்து கெட்டியாய் தரை
என் காலடியில்
நிஜம் புதைந்து கிடக்க
3. தும்பி
எனது ஹெலிகாப்ட்டரை
பறக்க விட்டேன்
எங்கும் தும்பிகள்
எனது தும்பிகளை
பறக்க விட்டேன்
எங்கும் வெடிகுண்டு விமானங்கள்
எனது வெடிகுண்டு விமானங்களை
பறக்க விட்டேன்
எங்கும் அமைதி
எனது அமைதியை
பறக்க விட்டேன்
எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்
4. களைதல்
என்னை களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலை களைந்தேன்
நான் இருந்தது
நானை களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியை களைந்தேன்
ஒன்றுமே இல்லை
5.இசை/ஓசை
வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்
அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக
எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி
உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது
கூர்ந்து கேட்டால்
அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை
Friday, July 10, 2009
ஆத்மாநாம் கவிதைகள்
இவரை பற்றி எங்கயாது போய் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது , இவரின் கவிதையும் இவரையும் தவிர! எனக்கு பிடித்த பத்து இதோ
சும்மாவுக்காக ஒரு கவிதை
உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்
சில எதிர்கால நிஜங்கள்
அரிசி மூட்டையிலிருந்து சிதறிய
அரிசி மணிகள் போல்
தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த
சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்
மொசைக் தரையில் தவறிப்போன
ஒற்றை குண்டூசி போல்
இவற்றைப் போல் இன்னும்
ஆயிரக்கணக்கான போல்கள்
பழக்கம்
எனக்கு கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக்கொண்டிருக்கிறேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
ரோட்டிலேயே நடக்க முடியவில்லை
ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்
நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
ஐயோ
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
சுற்றி
அரச மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?
மீதி ஐந்து அப்பாலிக்கா
Wednesday, June 24, 2009
வெகு நாள் ஆசை

வெளியே எட்டி வானத்தை பார்த்தேன் , அடை மழை. மழையை மிஞ்சும் அளவு கதறி அழலாம் போல் இருந்தது. அதற்கும் தெம்பற்று மனம் இறக்கை ஒடிக்கப்பட்ட பறவை போல் முடங்கி கிடந்தது. தனிமை , நானே தேடிக்கொண்டது இல்லை. சபிக்கப்பட்ட தனிமை. மரணத்தை தீண்ட மனம் எவ்வளவு எத்தனித்தாலும் உடலளவில் தைரியம் இல்லை. எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு வீறு கொண்டு எழ நினைத்தாலும் கண்ணீர் துளியில் ஒடுங்கிப்போகிறேன். எனது வண்டி நேராக நான் பள்ளிபருவத்தில் படித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மறுநாள் மதியத்தில்.
மாலதி , நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் அவள் கூறும் பதிலின் ரணத்தை விவரிக்க இயலாது. படிப்பு மட்டுமே குறியாக இருந்தது கல்லூரியில் எனக்கு , இரண்டாவாதாக வந்தேன் கல்லூரியில்.உடன் வேலை , எதிர்பாரா சம்பளம். எல்லோர் போலும் நான் வீணாக குடி கும்மாளம் என்று காசை சீரழிக்கவில்லை , மாறாக சேர்த்தேன். சென்னையில் சொந்த வீடு பன்னிரண்டு லட்ச ருபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு , அக்கா கல்யாணத்தை தனி ஆளாக தடபுடலாக நடத்தி காட்டும் அளவிற்கு சேர்த்தேன் . அடுத்தது எனக்கு ! வருபவளை ராணி போல் வைத்திருக்க வேண்டும் , தேடி தேடி முழுவதும் இயந்தரமயமாக்கப்பட்ட வாஷிங் மெஷீன் வாங்கினேன் , சோபா , இத்யாதி , இத்யாதி.
மாலதி நான் படித்த அதே படிப்பை படித்திருந்தாள் . பெண் பார்க்கும் போதே மனம் விட்டு பேசினோம். ஆசையாக நடந்த கல்யாணம். தலையில் வைத்து கொண்டாடினேன், மனசெல்லாம் மாலதி.அவளுக்கும் சந்தோஷத்திற்கு குறை இல்லை. அவ்வபொழுது உடலுறவில் நான் சோர்வடையும் பொழுது அவள் எரிச்சல் பட்டுக்கொள்வதை நான் பெரிதாக எடுக்க வில்லை. தனிமையில் மருத்தவரிடம் போனபொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை என்றார்.
"என்னன்னா இந்தாண்ட வந்திருக்க , எத்தினி நாள் ஆச்சு ? "நான் பன்னிரண்டாம் படிக்கும்பொழுது மெக்கானிக் கடையில் வேலைபார்த்த காளி இப்பொழுது கடை முதலாளி.
"நல்லா தாண்டா இருக்கேன். ராஜன் எப்டி இருக்கான்? ."
"இருக்கான் அவனும். என்ன இந்தாண்ட? ." வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் .
" ஒண்ணுமில்ல , மூர்த்தி அண்ணன் வீடு எங்க இருக்கு? வினோத் அடிக்கடி போவானே. "குரல் கம்மிப்போய் சொன்னேன்
"இன்னானா உனக்கு பழக்கம் இல்லையே? கண்ணாலம் வேற ஆயிடுச்சுனாங்க பசங்க . "
வூடு எங்க டா ? சிரித்துக்கொண்டே கேட்டேன்
" டேய் சங்கரு , அண்ணன மூர்த்தி அண்ணன் வூட்டாண்ட இட்டுனு போ. "
இருவருமே சிரித்துக்கொண்டோம். காளிக்கு தெரியும் நான் போதைப்பொருள்களை தொட்டதே இல்லை. வினோத் பள்ளிக்கே கொண்டு வருவான். காளி கடையில் வைத்து பல முறை அடித்திருக்கிறான் . மூர்த்தி வீட்டிற்கு போவதற்கு நான் புதிதாக வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் போல இருந்தது.
இந்த முறை அவள் என் முகத்திலேயே அறைந்தாள். ச்சீ என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தாள். இது போல் தினமும் , எனக்கு ரண வேதனையாக இருந்தது , எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அவளுக்கு. ஆனால் அவள் ஏன் மாற வேண்டும்? யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள்? சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. " என்னுனுச்" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் ? . அன்றிரவு பெப்சி டின்னை உடைத்தேன் , பொங்கி வருவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே மீண்டும் தனிமையில்.
இதுக்குமேல வண்டி போவாதுனா என்றான் அந்த சின்னபய்யன்.
"எந்தாண்டடா போனும்? "
" இன்னும் ரெண்டு சந்திருக்கு , நானே இட்டுனு போறேன் , இல்லேனா காளினா திட்டும் "
மூர்த்தி வீட்டை ஒட்டி நிறைய குடிசை இருந்தது. அவன் பார்க்க நகைக்கடை பொம்மை போல் இருந்தான். உள்ளே போனேன் , போய்க்கொண்டே இருந்தேன். பல வகையான போதை , கல்லூரி மாணவர்கள் , பெண்கள் உட்பட. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாதாம். வாடிக்கையாளர் திருப்தி தான் முக்கியம் என்றான். பாம்பு கடி போதை கூட இருந்தது.சிறுவன் கழண்டு கொண்டான்.
" இன்னாப்பா வேணும் உனக்கு? " என்றான் மூர்த்தி சன்னமாக.
" ஹெராயின் " என்றேன்.
சிரித்துக்கொண்டே அடித்து பழக்கம் இருக்கா என்றான் , இல்லை என்று தலை ஆட்டினேன்.
அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது
ஹெராயின் முதலில் பௌடர் போல் இருக்கிறது. அதை அவன் அளந்து தான் கொதிக்கும் நீரில் போடுகிறான் , என்னை அந்த குழாயின் முனையை பற்றிக்கொள்ள சொன்னான் , புகை வந்தது.
" இழுங்க நல்லா " என்றான். பயத்தை மறந்து இழுத்தேன் , தலை இரண்டாக சுற்றியது. ஒரு சின்ன நாற்காலியில் உக்காந்திருந்தேன் , சிரித்துக்கொண்டே கீழே விழுந்தேன். கொஞ்சம் உணர்வற்று ஒரு அரைமணி நேரம் இருந்திருப்பேன். அடுத்த கேள்வி மூர்த்தியிடம் கேட்டேன்.
"பொண்ணு வேணும்னா , வீட்டுக்கு இன்னிக்கு ராத்திரி கூட்டினு போனும் "
"எப்போ வுடுவ ? மொத்தமா ஆறாயிரம் செலவாகும். சரக்குக்கும் சேர்த்துதான் சொல்றேன்"
"பிரச்சனை இல்லனா. "
"சரி அட்ரஸ் குடுத்துட்டு போ , மாரிதான் கொண்டாந்து விடுவான் பொண்ண"
"அண்ணா இருக்கறது பிளாட்டுனா , பிரச்சன ஆயுடாதே? "
சிரித்தான். " அது மாரி பொண்டாட்டி தான் பா. ஒன்னியும் கவலைப்படாத , வுட்டுட்டு கிளம்பினே இருப்பான் . நீ காத்தால டாக்சிக்கு கூட துட்டு தர வோணாம் "
சரினா என்று மொத்த ஆறாயிரமும் கொடுத்து விட்டு கிளம்பினேன்.
மாரி சொன்ன நேரத்துக்கு முன்னையே விட்டுவிட்டான் அவன் பொண்டாட்டியை . புருஷனே புரவலராக அமைய பலர் விரும்புவதில்லை , சிலருக்கு கட்டாயம். சிலருக்கு வேட்கை!
முழு பலத்துடன் அவள் உடலை புணர்ந்தேன். அவள் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை கூட பொருட்படுத்தாமல் . சிறிது நேரம் கழித்து உணர்வற்று படுத்திருந்தாள் ,
வெகு நாள் ஆசை அவள் கழுத்தில் இருக்கும் தாலி அறுந்து ரத்தம் என் திறந்த மார்பை தொட்டது.குளிரின் பிடியில் ஜென்னலை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறேன் .
