Friday, April 10, 2009

49O -பத்து பைசாக்காது பிரயோஜனமா ?

முதலில் நாம் 49 O என்றால் என்னவென்று பார்த்துவிடுவது உத்தமம். இந்த இந்திய திருநாட்டில் வோட்டு போடபோகாமல் ஊட்டில் மப்பில் மல்லாந்து கிடக்கும் குப்புசாமிகளுக்கும் , அன்று விடுமுறை என்று சும்மா வீட்டில் இருக்கும் ராகேஷ்களுக்கும் ஒரு மாபெரும் மாற்று தீர்வு என்ற பல SMSகள் குவிகின்றதா ? . அய்ய இன்னாமே நீ அல்லாரும் மாத்தி மாத்தி ஊர ஏமாதிக்கினு இருக்காங்கோ நான் மட்டும் இன்னத்துக்கு வோட்டு போடணும் ? . இந்த கேள்விகளுக்கெல்லாம் 49 O விடை அளிக்கிறது என்கிறார்கள் ஒரு சாரர். இல்லை என்கிறேன் நான். கொஞ்சம் விரிவாக பார்போம்.


அதாகப்பட்டது , தேர்தலில் 49 0 விதிமுறைகளின் படி ஒரு வாக்காளர் தான் எந்த வேட்பாளரயுமே விரும்பவில்லை என்று வாக்களிக்கலாம். ஆஹா அருமை ? அப்போ எல்லாரும் இதையே போட்டுட்டா நம்ம தொகுதிக்கே திரும்ப தேர்தல் தான் , ஏற்கனவே போட்டியிட்ட எந்த வேட்பாளரும் நிற்க முடியாது என்றெல்லாம் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள் . எல்லாம் பொய் , பச்சை பொய் .


1. இந்த வாக்குமுறை மிகவும் வெளிப்படையாக செய்ய வேண்டும் , அது நமது அரசியல் சாசன உரிமையான மறைமுகமாக நாம் நமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்பதை முற்றிலும் மறுக்கிறது .


2. இது எந்த வோட்டெடுப்பு இயந்தரங்களிலும் இல்லை பாலட் தாள்களிலும் இருக்காது . நாமாக கேட்டு போட வேண்டும். யாருக்குமே எனது வோட்டு இல்லை என்னும் பட்டன் எந்த மெஷினில் உள்ளது ? இல்லவே இல்லை. இந்த மாற்றம் எப்பொழுது வரும் ? நிதர்சனம் இல்லை .


3.எல்லாரும் சொல்வது போல் மறு தேர்தல் நடக்குமா ? கண்டிப்பாக இல்லை . எந்த கேனப்பய கெளப்பி வுட்டான் இதை ? சரி வேட்பாளர்களை கட்சி மாற்றியாக வேண்டுமா? மயிரா போச்சு , அப்படி எந்த தேவையும் இல்லை .


4. சரியா அப்போ நம்ப போட்ட வோட்டு ? செல்லாத ஒட்டு தான் ! வேண்டுமானால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதிக்கு இந்த மாதிரி எத்தன கிறுக்கன் போட்டானு கேட்டு தெரிஞ்சுக்கலாம் .


5.யோ அப்போ ஒரே தொகுதில 99% பேர் இதை போட்டா என்னையா பண்ணுவ ? மிச்சம் இருக்கற 1% வாக்கு பெற்றவன் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும் .


6. யோ அப்போ என்னதான்யா பிரயோஜனம் ? உன் வோட்டிற்கு பதில் யாரும் கள்ள வோட்டு போட முடியாது. அதை தடுக்கதான தேர்தல் ஆணையம் , காவல் துறை எல்லாம் ? அதை எல்லாம் நாம கேக்கக்கூடாது .



ஆனால் வோட்டு போடுவது ஜனநாயக கடமை. அதை உபயோகபடுத்தி கொள்வது நமது திறமை. ஆனால் உண்மையில் மாற்றம் வரவேண்டும் என்று ஞானி போன்றோர் எண்ணுவதற்கு தோள் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த தேர்தலில் ? பயனில்லை !

No comments: